Sunday, March 18, 2012

தேங்காய் மட்டன் கிரேவி

Posted On March 19,2012, By Muthukumar

தேங்காயில் உள்ள சத்துக்கள் ஏராளம். அதனால் தான் கிட்டத்தட்ட எல்லா குழம்புகளிலும் தேங்காயைச் சேர்க்கிறார்கள். குழம்புகளின் ருசிக்கும், மணத்துக்கும் உதவுவதில் தேங்காய் முதன்மையானது. மட்டனுடன் தேங்காய் மிகுதியாக சேர்த்து மணக்க மணக்க கிரேவி தயாரித்துப் பாருங்கள், ருசித்துச் சாப்பிடுவீர்கள்!

தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
தனியாத்தூள் - 4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 5 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு - 8
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 3
பூண்டு - 6 பல்
வெங்காயம் - 2
தக்காளி - 2
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

* சோம்பு, சீரகம், கசகசா, இஞ்சி இவற்றை அரைக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், தனியா தூள் மற்றும் சிறிது நீர் சேர்த்து மசாலா கலவையாக்கவும்.
* தேங்காய்த் துருவல், முந்திரியை விழுதாக்கவும்.
* வாய் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பூண்டு பல்லை நறுக்கிச் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
* இப்போது மசாலா பொருட்களைச் சேர்க்கவும். சுத்தம் செய்த மட்டனைச் சேர்த்து 20 நிமிடங்கள் வேக விடவும்.
* பின்னர் தேங்காய் விழுதைச் சேர்த்து, ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
* போதுமான நீர் ஊற்றி, உப்பு சேர்த்து குக்கரில் வைக்கவும். மட்டன், நன்கு வெந்து திக்கானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

No comments:

Post a Comment