Posted By Muthukumar,On November 14,2014
தேவையான பொருட்கள்:
ரவா-1 கப்; கெட்டித் தயிர்- 1 கப்; கடலை பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்; உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்; முந்திரி பருப்பு- 10; ஜீரகம்- 2 டீ ஸ்பூன்; கடுகு-1 டீ ஸ்பூன் ; மிளகுத்தூள்- 2 டேபிள் ஸ்பூன்; பொடியாக நருக்கிய பச்சை மிளகாய்-2; கறிவேப்பிலை- சிறிதளவு; நெய்- 2 டேபிள் ஸ்பூன்; உப்பு -1 டீ ஸ்பூன்.
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பிலேற்றி, அதில் நெய்யை ஊற்றி சூடாக்கவும் . அதில் கடுகைப் போட்டு பொறிந்ததும், அதில் ஜீரகம், கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு தாளிக்கவும். அதன் பின்னர், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது ரவையைப் போட்டு, வாசனை வரும்வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவ்ட்டு, தயிரையும் உப்பையும் சேர்த்துக் கலக்கவும். இட்லி மாவு பதத்துக்கு வரும் வகையில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். இதை 3 நிமிடம் வைத்திருந்து, பிறகு அந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடம் ஆவியில் வேக விடவும். விசில் வரட்டும் என்று காத்திருக்க வேண்டாம். இட்லிகளை எடுத்து சட்னியுடன் பறிமாறவும்.