Posted On March 18,2012,By Muthukumar
மாலை நேர டிபனுக்கு ஏற்றது `சேமியா வெஜ் கட்லெட்'. செய்து பாருங்கள், வித்யாசமான சுவையுடன் ரசித்துச் சாப்பிடுவீர்கள்.
தேவையானவை
வறுத்த சேமியா - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2 காரட் - 1 பச்சைப் பட்டாணி - 1/2 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 3 இஞ்சி - சிறுதுண்டு புதினா, கொத்தமல்லி - சிறிதளவு மக்காச்சோள மாவு - 1/2 கப் கறி மசாலா தூள் - 1 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் பிரெட் தூள் - ஒரு கப் உப்பு - தேவையான அளவு ரீபைண்ட் எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* சேமியாவை 3 கப் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
* உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும்.
* சிறிது எண்ணையைக் காயவைத்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, புதினா, மல்லி சேர்த்து வதக்கவும்.
* நன்கு வதங்கியதும் துருவிய காரட், பட்டாணி சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும். அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, சேமியா, கறி மசாலா தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
* விரும்பிய வடிவில் கட்லெட்கள் தயாரித்து ஒரு கப் தண்ணீரில் கரைத்த மக்காச்சோள மாவில் நனைத்து பிரெட் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
* காயும் எண்ணையில் பொரித்து சூடாக சாஸ் உடன் பரிமாறுவார்கள்.
|
Sunday, March 18, 2012
சேமியா – காய்கறி கட்லெட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment