Thursday, December 29, 2011

பட்டர் சிக்கன்


 
தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1/2 கிலோ
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்(துருவியது) 
பூண்டு  – 3 
பல்லாரி – 2
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 5
மல்லித்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய்தூள் – டேபிள் ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
புதினா – 10 இலைகள்
மல்லித்தழை – 1 கொத்து
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
* நன்கு கழுவி சுத்தம் செய்த சிக்கனுடன் உப்பு, மிளகாய்பொடி, மல்லித் தூள், மஞ்சள்தூள், புதினா, பொடிப் பொடி யாக நறுக்கிய மல்லித்தழை, தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்க்கவும்.
* நீளவாக்கில் அரிந்த பல்லாரியில், சிறிதளவு(அரை பல்லாரி) மாத்திரம் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பல் லாரியை சிக்கனுடன் சேர்த்து குக் கரில் தண்ணீ­ர் சேர்க்காமல் சிம்மில் வேக வைக்கவும். (கடாயில் வேக வை த்தால் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண் டும்.)
* சிக்கன் வெந்தவுடன், குக்கரை திறந்து வைத்து மூடாமல் அதில் மீந்த தண்­ணீரை வற்ற விடவும்.
* சிக்கனை மசாலாவுடன் நன்கு பிரட்டி எடுக்கவும்.
* வெண்ணெயை கடாயில் உருக்கி, கறிவேப்பிலை, எடுத்துவைத்துள்ள பல்லாரியை நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
* கறிவேப்பிலையும் பல்லாரியும் மொறுமொறுப்பாக வந்தவுடன் வெந்த சிக்கன் மசாலாவை கொட்டி நன்கு வதக்கவும்.
* வெண்ணெயுடன் சிக்கன் நன்கு வதங்கி எண்ணை கொப்பளிக்கும் வரை சுருள வதக்கி இறக்கவும்.
* வெண்ணெயில் சுருண்ட சிக்கன் டார்க் கலராகும். அதுவரைக்கும் அடி பிடிக்க விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
* மணமும் சுவையும் கொண்ட பட்டர் சிக்கன் ரெடி.


மைதா பூரி

Posted On   Dec 29, 2011, By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, உப்பு, நெய் அல்லது எண்ணை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு, மிருதுவாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி, குறைந்து 1/2மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து, சிறிது எடுத்து, உருட்டி பூரியாக இடவும். (மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது, தடிமனாகவும் இருக்க கூடாது). சுட வைத்துள்ள எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு தயிர் மசாலாவுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.

Wednesday, December 28, 2011

பழக்கேசரி

Posted On Dec 28,2011,By Muthukumar

இந்த கேசரிக்கு, விருப்பமான, சீசனில் கிடைக்கும் எல்லா விதமான பழங்களையும் உபயோகிக்கலாம். நான் இதில் வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளிப்பழம், சப்போட்டா மற்றும் ஆரஞ்சு பழம் சேர்த்து செய்துள்ளேன்.

தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பழத்துண்டுகள் - 1 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
உலர்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கப் ரவாவிற்கு, ஒன்று முதல் ஒன்றரை கப் வரை பழத்துண்டுகளைச் சேர்க்கலாம்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் பழத்துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மேலும் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு, அதில் ரவாவைக் கொட்டி ஓரிரு நிமிடங்கள் வறுத்து, இறக்கி வைக்கவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நீர் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவாவைக் கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். சிறிது பாலிலோ அல்லது நீரிலோ கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றி நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பழத்துண்டுகள், சிறிது நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கேசரி சற்று கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வர ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இனிப்பு சற்று கூடுதலாக வேண்டுமெனில், மேலும் அரைக்கப் சர்க்கரை சேர்க்கலாம்.


Tuesday, December 27, 2011

வெஜிடபிள் பிரெட் புலாவ்


Posted On Dec 27,2011,By Muthukumar


தேங்காய் - 1/2 மூடி
ரொட்டித் துண்டுகள் - 5
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பீன்ஸ், பட்டாணி, காரட், காலிபிளவர் - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 6
புதினா - சிறிதளவு
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறு துண்டு
நெய் - தேவையான அளவு
செய்முறை
* தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* ரொட்டித் துண்டுகள் ஒவ்வொன்றாக தேங்காய்ப்பாலில் முக்கி எடுத்து உதிர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு இரண்டையும் லேசாக அரைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* காரட், பீன்ஸ், காலிபிளவர் இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
* வாணலியில் தேவையான அளவு நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, அரைத்த இஞ்சி, பூண்டு விழுதைப்போட்டு வதக்கவும்,
* அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினாவை சேர்த்து வதக்கி, வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளையும், பட்டாணியையும் போட்டு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
* காய்கறிகள் நன்றாக வெந்து தண்ணீர் இல்லாமல் ஆன பிறகு உதிர்த்த ரொட்டித் துண்டுகளைப் போட்டு கிளறி எடுத்து வைக்கவும்.
* தேவையானால் வாசனைக்கு 2 டீஸ்பூன் நெய் விடலாம். அரிசி இல்லாமல் ரொட்டியிலேயே எளிய முறையில் செய்யக்கூடிய புலாவ் இது.

காலிஃபிளவர் பொரியல்

Posted On Dec 27,2011,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 முதல் 3 வரை
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
இஞ்சி - ஒரு சிறு துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

காலிஃபிளவரிலிருந்து, பூக்களை தனித்தனியாக பிரித்தெடுக்கவும். இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் காலிஃபிளவர், மஞ்சள் தூள், உப்பு போட்டு சில வினாடிகள் கொதிக்க விட்டு, காலிஃபிளவரை எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வறுத்தெடுக்கவும். சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பிலேற்றி ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதில் காலிஃபிளவரைச் சேர்த்து, சிறிது உப்பும் போட்டுக் கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும். நடு, நடுவே மூடியைத் திறந்து கிளறி விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ளப் பொடியைத் தூவி நன்றாகக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, மேலும் ஓரிரு வினாடிகள் கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: இதை மைக்ரோ அவனிலும் செய்யலாம். மேற்கூறியவாறு பொடி செய்து கொள்ளவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் காலிஃபிளவரைப் போட்டு அத்துடன் சிறிது எண்ணை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசறி விட்டு, அவனில் வைத்து 4 அல்லது 5 நிமிடங்கள் வேக விடவும். நிமிடத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்துக் கிளறி விடவும். கடைசியில் பொடியைத் தூவி மேலும் 2 நிமிடங்கள் மைக்ரோவேவ் செய்தால், சுவையான பொரியல் தயார்.


Monday, December 26, 2011

செட்டிநாட்டு நண்டு பொரியல்…

Posted On Dec 26,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்
நண்டு - 6
பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 6
தக்காளி - 2
இஞ்சி - சிறு துண்டு
முட்டை - 1
முழுபூண்டு - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
ரொட்டித் தூள் - சிறிதளவு
செய்முறை
* நண்டைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* ஓட்டோடு நண்டை எடுத்து கால் நீக்கி, சதைப் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி இவற்றை நன்கு வதக்கவும்.
* நண்டைச் சேர்த்து வதக்கி, முட்டையை அடித்து இதில் சேர்த்துக் கிளறவும்.
* அடுப்பை அணைத்து விடவும். கொத்தமல்லி இலையை நறுக்கிச் சேர்த்து, வேக வைத்த நண்டில் திணிக்கவும்.
* பிரெட் தூளை லேசாக வறுத்து நண்டின் மேல் தூவி சூடாகப் பரிமாறவும்.

உருளைக்கிழங்கு தயிர் மசாலா

Posted: 26 Dec 2011 By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பச்சை கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தயிர் - 1/2 கப்

செய்முறை:

உருளைக்கிழங்கை, குக்கரில் போட்டு தேவையான தண்ணீரை விட்டு, 1 அல்லது 2 விசில் வரும் வரை அல்லது கிழங்கு முக்கால் வேக்காடு வேகும் வரை வேக விட்டு எடுக்கவும். குக்கர் ஆறியதும், அதை திறந்து, கிழங்கை எடுத்து தோலை உரித்து விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீள வாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலைச் சேர்க்கவும். சோம்பு சற்று பொரிந்ததும், வெங்காயத்தைச் சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பச்சை வாசனை போனவுடன், உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்துக் கிளறி விடவும். அத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது நீர் (1/4 கப் அளவிற்கு), சிறிது கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கிளறி மூடி போட்டு, மிதமான தீயில் உருளைக் கிழங்கு மிருதுவாக வேகும் வரை வைத்திருக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயைச் சேர்த்துக் கிளறவும். கடைசியில், தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, ஓரிரு வினாடிகள் கிளறி, இறக்கி வைக்கவும்.

சப்பாத்தி, பூரி அல்லது சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம். மைதா பூரியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


முருங்கைக்காய் வடை


Posted On Dec 26,2011,By Muthukumar
மெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்முறை இதோ...
தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு - 2 கப்
பச்சை மிளகாய் - 6
முருங்கைக் காய் - 4
பூண்டு - 2 பல்
பெரிய வெங்காயம் - 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் (ரீபைண்ட்) - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
* கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக வைத்து, ஆறியதும் நடுவிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
* கடலைப் பருப்புடன், மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
* அத்துடன் முருங்கைக்காய் சதைப் பகுதியையும் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து மாவு தயாரிக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
* முருங்கைக்காய் வடை வித்தியாசமான சுவையுடன், சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

Sunday, December 25, 2011

கலகலா

Posted On Dec 25,2011,By Muthukumar

கலகலா, கல்கல், குல்குல் எனறு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும், இந்த பலகாரம், கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது செய்யப்படும் ஒரு அருமையான இனிப்புப் பண்டம். இதில் முட்டை, தேங்காய்ப்பால் சேர்த்து செய்வது வழக்கம்.

நான் முட்டையைத் தவிர்த்து விட்டு, இதை செய்தேன். மிகவும் சுவையாகவே இருந்தது.

தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவதற்கு தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

பிசைந்த மாவை, சிறிது எடுத்து ஒரு சிறு அருநெல்லிக்காய் அளவிற்கு உருட்டிக் கொள்ளவும். எல்லா மாவையும் சிறு சிறு உருண்டைகளாக்கி வைக்கவும்.

ஒரு முள்கரண்டியின் பின்புறத்தில் சிறிது நெய்யைத் தடவி, அதன் மேல் ஒரு உருண்டையை வைத்து சற்று இழுத்து விட்டு நன்றாக அழுத்தவும். பின் அதை எடுத்து சுருட்டவும். சங்கு போன்ற வடிவத்தில் கிடைக்கும். எல்லா உருண்டைகளையும் இப்படியே செய்யவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "கலகலாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள கலகலாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும். சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து கலகலாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

கவனிக்க: மேற்கண்ட முறையில் செய்வது சற்று நேரம் பிடிக்கிம். நேரம் இல்லாதவர்கள், சிறு உருண்டைகளாக உருட்டி செய்வதற்குப் பதில், பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்தும் பொரிக்கலாம். இப்படி செய்வதற்கு "துக்கடா" என்று சொல்வார்கள்.

இனிப்பு துக்கடா

கமலாவின் அடுப்பங்கரை



Posted On Dec 25,2011,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
பொடித்த சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
வெதுவெதுப்பான பால் - 1/2 கப் அல்லது மாவு பிசைவதற்கு தேவையான அளவு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, பொடித்த சர்க்கரை, வெண்ணை, சமையல் சோடா, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் வெதுவெதுப்பான பாலை சிறிது சிறிதாக விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

நான், கத்தியால் வெட்டுவதற்குப் பதிலாக, ஒரு சிறு பாட்டில் மூடியை வைத்து அழுத்தி சிறு வட்டங்களாக வெட்டிக் கொண்டேன்.

ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "துக்கடாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கொதித்து, ஒரு கம்பி பாகு பதத்திற்கு வநததும், ஏலக்காய்த்தூளைச் சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகில் பொரித்து வைத்துள்ள துக்கடாவைப் போட்டு, பாகு அதன் மேல் நன்றாகப் படும்படி கிளறி எடுத்து, ஒரு தட்டில் கொட்டி, தனித்தனியாகப் பரப்பி விடவும். சற்று நேரத்தில், சர்க்கரை பாகு பூத்து துக்கடாவின் மேல் படிந்து விடும். காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்.

வாழைப்பூ கட்லெட்

Posted On Dec 25,2011,By Muthukumar

துவர்ப்பு சுவை மிக்க வாழைப்பூ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வாழைப்பூ வடை, வாழைப்பூ கூட்டு இவற்றிற்குப் பதிலாக வாழைப்பூ கட்லெட் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள். ஆசையாக ருசிப்பீர்கள். செய்முறை இதோ...
தேவையானவை
பெரிய வாழைப்பூ - 1
அவித்த உருளைக் கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 6
தயிர் - 1 கப்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
ரீபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு (தேவையான அளவு)
ரொட்டித் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் பொடியாக அரிந்து போட்டு அதில் தயிரை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும். சிறிது நேரம் ஊறியதும் கெட்டியாகப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும்.
* அத்துடன் மசித்த உருளைக் கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு கறிவேப்பிலை, சோம்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
* கட்லெட் வடிவில் செய்து ரொட்டித் தூளில் புரட்டி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
* தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.

Saturday, December 24, 2011

கோழிக்கறி காளான் மசாலா

Posted On Dec 25,2011,By Muthukumar
சைவப் பிரியர்கள் காளானை அசைவ ருசியில் சமைத்துச் சாப்பிடுவார்கள். அது கிட்டத்தட்ட கோழிக்கறியின் ருசியைத் தரும். நிஜமாகவே காளானை கோழிக்கறியுடன் சேர்த்து மசாலா செய்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். செய்து சாப்பிடலாமா?
தேவையான பொருட்கள்
கோழிக்கறி - 1/2 கிலோ
குடமிளகாய் - 150 கிராம்
காளான் - 100 கிராம் (நறுக்கியது)
சாம்பார் வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 4
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 6 பல்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* கோழிக்கறியைச் சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை உரித்துக் கீறிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இடித்துக் கொள்ளவும்.
* இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை நன்கு வதக்கவும்.
* பின் நறுக்கிய குடமிளகாய், காளான், சிக்கன் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* தட்டிய மிளகாய் இஞ்சி, பூண்டு இவை சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு சேர்க்கவும்.
* லேசாக நீர் தெளித்து, குறைந்த தீயில் இதை வைத்திருக்கவும்.
* அனைத்துப் பொருட்களும் மசாலாவுடன் ஒன்று சேர்ந்து வெந்ததும், மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

Friday, December 23, 2011

கார துக்கடா

Posted On Dec 23,2011,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
வெண்ணை அல்லது நெய் - 2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணை, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, நன்றாகக் கலந்துக் கொள்ளவும். அதில் தண்ணீரை விட்டு மாவை மிருதுவாகப் பிசைந்துக் கொள்ளவும். குறைந்தது அரை மணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக இடவும். கத்தியால் குறுக்கும், நெடுக்கும் கோடிட்டு, சிறு சதுர வில்லைகளாக வெட்டி எடுக்கவும். எல்லா மாவையில் இப்படியே செய்து, வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாகப் போட்டு வைக்கவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதறகு தேவையான எண்ணையில் விட்டு சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், செய்து வைத்திருக்கும் "துக்கடாவை" கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


Thursday, December 22, 2011

பீட்ரூட் வடை/Beetroot Vadai

Posted On Dec 23,2011,By Muthukumar



தே.பொருட்கள்
கொண்டைக்கடலை - 1 1/2 கப்
துருவிய பீட்ரூட் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கொண்டைக்கடலையை 6 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் உப்பு+சோம்பு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடைசியாக அதனுடன் பீட்ரூட் துருவலை சேர்த்து 1 சுற்று சுற்றி எடுக்கவும்.
*பின்   அதனுடன் வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.                                                                    

கேசரி லட்டு - kesari laddu




தேவையான பொருட்கள்
ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்


செய்முறை

1. நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

2. அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

3. கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

4. ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.




ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

Wednesday, December 21, 2011

இறைச்சி வடை

Posted On Dec 21,2011,By Muthukumar


தேவையான பொருட்கள்
கைமா (கொத்துக்கறி) - 1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
முட்டை - 2
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
டால்டா - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
ரஸ்க் தூள் - 50 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* கைமாவைச் சுத்தம் செய்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். பட்டை, கிராம்பு இரண்டையும் தூள் செய்யவும்.
* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும்.
* ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
* மட்டன் கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும்.
* இதை வடைபோல் தட்டி, காய்ந்த எண்ணெயில் புரட்டி வேக வைத்து எடுக்கவும்.
இறைச்சி வடை ரெடி.

Tuesday, December 20, 2011

கொய்யாப்பழ குழம்பு சமைப்பது எப்படி?



சமையல் குறிப்பு:
கொய்யாப்பழ குழம்பு: சுவையான சமையல்
சமையல் குறிப்பு கொய்யாப்பழ குழம்பு

நறுக்கப்பட்ட கொய்யாப் பழங்கள்-2 ; கடலை மாவு -2 டேபிள் ஸ்பூன்; சிவப்பு மிளகாய்த்தூள்-2 ஸ்பூன் ; மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்; கடுகு-1/4 ஸ்பூன்; உளுத்தம்பருப்பு- ½ ஸ்பூன்;  உப்பு, தாளிக்க எண்ணெய், கருவேப்பிலை- தேவையான அளவு;  வெல்லப்பொடி –கொஞ்சம்:

செய்முறை:
அடுப்பில் வாணலியை ஏற்றி , அதில் எண்ணெய்  ஊற்றிக் காய்ந்ததும்,கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்தபின், நறுக்கிய கொய்யாத்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு அதில் கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  நன்கு கலக்கிவிட்டபின், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்  உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு கொதிக்கவிட வேண்டும். கொதித்தபின் கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவேண்டும். கடைசியாக கொஞ்சம் வெல்லப்  பொடியைப் போட்டு இறக்கவேண்டும்.

இது வழக்கமாக நாம் செய்யும், கத்திரிக்காய், முருங்கைக்காய் குழம்பிலிருந்து வித்தியாசப்படும்.

கொய்யாப் பழங்களை , முழுவதும் பழங்களாகவோ, முழுவதும் காய்களாகவோ இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடையே மீடியமாக இருக்கவேண்டும்.

Monday, December 12, 2011

காலி பிளவர் மிளகு ரோஸ்ட்

Posted On Dec 12,2011,By Muthukumar


பிரைடு ரைஸ், வெஜிடபிள் பிரியாணி போன்ற உணவு வகைக்கு `சைடு டிஷ்`ஷாக காரசாரமாக ஒரு அயிட்டம் தயாரிக்க நினைக்கிறீர்களா, இந்த `காலி பிளவர் மிளகு ரோஸ்ட்' தயாரித்துப் பாருங்கள். எல்லோருமே ஒரு பிடி கூடுதலாக சாப்பிடுவார்கள். செய்முறை இதோ...
தேவையானவை
காலிபிளவர் பெரியது - 1
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 6 பல்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* வெங்காயம், பூண்டு இரண்டையும் பொடியாக அறிந்து கொள்ளவும்.
* காலி பிளவரை பெரிய பூக்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் நெய்விட்டு கடுகு, சோம்பு தாளித்து நறுக்கிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு இரண்டையும் வதக்கவும்.
* அத்துடன் காலிபிளவரைச் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மிதமாக சூட்டில் வேக விடவும்.
* மிளகு, சீரகம், வரமிளகாய் இவற்றுடன் சிறிது வெங்காயம் சிறிது வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து, நெய்விட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
* காலிபிளவர் வெந்ததும், வதக்கிய மிளகு மசாலாவைச் சேர்த்து மிதமான சூட்டில் சிறிது நெய்விட்டு முறுகவிட்டு எடுத்து வைக்கவும்.

Saturday, December 10, 2011

கொத்துக்கறி புட்டு

Posted On Dec 10,2011,By Muthukumar
தேவையானவை
கொத்துக்கறி (கைமா) - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி - 15 கிராம்
பூண்டு - 10 பல்
நெய் - 20 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
முட்டை - 2
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய்- 2
முந்திரிப்பருப்பு - 6
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
செய்முறை
* கைமாவை வேக வைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு வேக வைக்கவும்.
* கைமா வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும்.
* ஒரு கடாயில் நெய் ஊற்றி மசாலா சாமான்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரிபார்க்கவும்.
* கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு
* கைமாவிற்குப் பதிலாக கூனி மீனிலும் புட்டு செய்யலாம்.

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

Posted: 10 Dec 2011 By Muthukumar

இந்தப் பொரியலை வேறு வகை கீரையிலும் செய்யலாம். ஆனால் பொன்னாங்கண்ணி மற்றும் முருங்கைக் கீரையில் செய்தால் நன்றாக இருக்கும்.

மேலும் பொன்னாங்கண்ணி கீரை கண் பார்வைக்கும், சரும பொலிவிற்கும் உகந்தது. ஊளைச் சதையைக் குறைக்க உதவும். மூல வியாதியைக் குணப்படுத்த வல்லது.

தேவையானப்பொருட்கள்:

பொன்னாங்கண்ணி கீரை - ஒரு கட்டு
பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

கீரையை ஆய்ந்து, கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்புடன் தேவையான தண்ணீரைச் சேர்த்து, மஞ்சள் தூளையும் சேர்த்து, வேக விடவும். முக்கால் வேக்காடு வந்ததும் எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போட்டு சற்று வறுக்கவும். பின்னர் அதில் கீரையைப் போட்டுக் கிளறி விடவும். மூடி போட்டு, சிறு தீயில் வைத்து வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. கீரையிலுள்ள நீரிலேயே வெந்து விடும். ஓரிரு வினாடிகள் வெந்தாலே போதும். மூடியைத் திறந்து, உப்பு போட்டுக் கிளறி மீண்டும் சில வினாடிகள் வதக்கவும். நீர் சுண்டியதும், வேக வைத்துள்ள பருப்பு, தேங்காய்த்துருவல் ஆகியவற்றைச் சேர்த்து, மீண்டும் சில வினாடிகள் வதக்கி, இறக்கி வைக்கவும்.

ஆந்திரா கோழிக்கறி வறுவல்

Posted On Dec 10,2011,By Muthukumar
தேவையானவை
கோழிக்கறி - 1/2 கிலோ (சுத்தம் செய்து நறுக்கவும்)
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1 கையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
* பின் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
* சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும்.
* சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.
* சிக்கன் நன்கு டிரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் புரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.

Friday, December 9, 2011

சொஜ்ஜி அப்பம்

Posted On   09  Dec 2011 By Muthukumar


தேவையானப்பொருட்கள்:

ரவா - 1 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - சிறிது (விருப்பப்பட்டால்)
மைதா - 2 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 அல்லது 3 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதாவை நன்றாக சலித்து விட்டு, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணை விட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, ரவாவைக் கொட்டிக் கிளறவும். ரவா வெந்தவுடன் வெல்லத்தைப் பொடித்து சேர்க்கவும். தேங்காய்த்துருவலையும் சேர்த்து நன்றாகக் கிளறவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து கெட்டியானதும், ஏலக்காய் தூள், முந்திரி பருப்பு (ஒன்றிரண்டாக ஒடித்துப் போடவும்), ஒரு டீஸ்பூன் நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விடவும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்த பதம் வந்தவுடன், இறக்கி வைத்து ஆற விடவும். ஆறியவுடன், சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

மைதா மாவை எலுமிச்சம் பழ அளவிற்கு எடுத்து, பூரி போல் உருட்டவும். அதன் மேல் ரவா பூரண உருண்டையை வைத்து, பூரியின் மூலையை ஒன்றாகச் சேர்த்து மூடவும். பின்னர் இலேசாக அதை விரல்களால் அழுத்தி அதிரசம் போல் வட்டமாக தட்டவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்துள்ள அப்பத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கவனிக்க: மாவில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்தால் அப்பம் கருஞ்சிவப்பாக இருக்கும். வெல்லத்திற்குப் பதில் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.

பண்டிகை நாட்களில் மேற்கண்டவாறு செய்ய வேண்டும். பண்டிகை அல்லாமல், சாதாரண நாட்களில் செய்வதென்றால், மீந்து போன கேசரியை வைத்தும் இதை செய்யலாம்.




சேனைக்கிழங்கு வறுவல்

Posted On09 Dec 2011 By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சேனைக்கிழங்கு - பாதியாக வெட்டியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
புளி - ஒரு கொட்டை பாக்களவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

செய்முறை:

சேனைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, 3 அல்லது 4 அங்குல அளவிற்கு மெல்லிய வில்லைகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய வில்லைகளைக் கொதிக்கும் நீரில் போட்டு சில நிமிடங்கள் வேக விடவும். முக்கால் பங்கு வெந்தால் போதும். குழைய விடக்கூடாது.

புளியை சிறிது நீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள் கெட்டியாகக் கரைத்த புளி ஆகியவற்றைச் சேர்த்து, விழுது போல் ஆக்கிக் கொள்ளவும். தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காய விடவும். கல் காய்ந்ததும், அதில் சிறிது எண்ணை தடவவும். சேனைக் கிழங்கு வில்லைகள் ஒவ்வொன்றாக எடுத்து, மிளகாய் விழுதில் நன்றாக பிரட்டி எடுத்து, தோசைக்கல்லில் தனித்தனியாக வைக்கவும். அதைச் சுற்றி சிறிது எண்ணையை விட்டு, மிதமான தீயில் வேக விடவும். ஓரிரு வினாடிகள் கழித்து, ஒவ்வொரு வில்லைகளாகத் திருப்பி போட்டு, மறு பக்கத்தையும் வேக விடவும். இவ்வாறே திருப்பி திருப்பி போட்டு, இரண்டு பக்கமும் நன்றாக சிவக்கும் வரை வைத்திருந்து எடுக்கவும்.

சாம்பார் சாதம் / ரசம் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Tuesday, December 6, 2011

எதை எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடலாம்?


1. வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள் (Lacto-ovo-vegetarian)… இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். ஆனால்… முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)… இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும் நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ் (Vegans)… இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள்.
3. லெகூம்ஸ் (Legumes) சாப்பி டலாம். ‘அதென்னடா லெகூம் ஸ்?’ என குழம்ப வேண்டாம். உல ர்ந்த பீன்ஸ் பருப்புகளைத் தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமான சைவ உணவு இது.2. வெஜிடே ரியன்க ளின் உணவு, முழு தானி யங்கள், காய் கறிகள், பழங்கள், விதைகள், உல ர் பருப்புகள் (Nuts) எனும் வரி சையில் இருக்க வேண்டும். அதா வது தானியம் அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரி சையில்.
4. ஒவ்வொரு கலர் காய்கறி யிலும் ஒவ்வொரு வகையான சத்து உண்டு. அதுவும் அடர் நிற ங்களை வாங்குவது அதிக பய னளிக்கும். எனவே, நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
5. பழங்களில் இருக்கும் இனிப்பு, அளவோடு சாப்பிட்டால் தீங்கு விளைவிக்காது. ஆனால், அதனுடன் சர்க்கரை, செயற்கை வண்ணங்கள் எல்லாம் சேர்த்தால் அது உடலுக்குத் தீயதாகி விடும். எனவே, பழங்கள் சாப்பிடுங்கள்… பழச்சாறை தவிருங்கள்.
6. கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் சூப்களை ஒதுக்கி, வீட்டிலேயே காய்கறி சூப் செய்து சாப்பிடுங்கள்.
ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்… நோ நோ!
7. இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் வெளிநாட்டு இறக்குமதிக் கடைகளில் எண்ணெயில் பொரித்த நொறு க்குத் தீனிகளோடு சீஸ், பட்டரைத் தொட்டுச் சாப்பி டுவது மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆனால், இந்த சீஸ், பட்டர் போன்றவை சிக்கனுடன் ஒப்பிட்டால்… சுமார் பத்து மடங்கு அதிக கொழுப்பு உடையவை. இது உடல் எடை அதிகரி க்கவும், கேன்சர் போன்ற நோய்கள் வந்து குடியேறவும் காரணமாகி விடும். எனவே, தவிர்க்க வேண்டியது அவசியம்.
8. குழந்தைகள் பீட்ஸா கேட்டு அடம் பிடிக்கிறார்களா? தவிர்க்க முடி யாத அந்த சந்தர்ப்பத்தில், ‘தின் கிரஸ்ட் பீட்ஸா’-வை தேர்ந்தெடுங்கள். எக்ஸ்ட்ரா சீஸ், அது, இது… என சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.
9. சதா குளிர்பானங்களையே குடித்துக் கொண் டிருப்பவர்கள், மாபெரும் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நிறமி, இனிப்பு, எக்கச்சக்க கலோரி என குளிர் பானங்கள் உடலுக்கு சர்வ நிச்சயமாக சிக்கல் உண்டாக்குபவை. ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ எனும் எலும்புச் சிதைவு, பற்சிதைவு, உடல் பருமன் அதிகரித்தல், இதய நோய் என பல நோய்களை இது அழைத்து வரும்.
10. இப்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் குழந்தைகளைக் குறி வைத்து விற்கப்படுகிறது. ஆனால், நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு கிடை யாது. ஒரு நாள் ஒரு மனிதனுக்குத் தேவை 1,200 மில்லி கிராம் சோடியம் மட்டுமே. ஆனால், சில வகை நூடுல்ஸ்களில் 1,560 முதல் 3,000 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது. கூடவே, இதிலிருக்கும் ‘மோனோசோசியம் குளூடமேட்’ எனும் பொருள், அல்ஸீமர் போன்ற மாபெரும் நோய்களுக்கு வாசலைத் திறந்துவிடக்கூடும் என எச்சரி க்கிறது எஃப்.டி.ஏ (FDA-Food and Drug Administration).
11. சில வகை சாக்லேட்களைச் சாப்பிட்டா லே போதும்… வேறு உணவே தேவை– யில் லை என்று நினைத்து அடிமையாகி விடா தீர்கள். அவற்றில் சில வைட்ட–மின்கள் இரு ந்தாலும், அவையும் அதிக இனிப்பு சாக்லேட் போலதான். எனவே ஐஸ்கிரீம், சாக்லேட்… இவற்றையெல்லாம் ஆசைப்பட்டால் எப்போ தேனும் சுவைக்கலாமே, தவிர அடிக்கடி சாப் பிடக் கூடாது.
எடை குறைய வேண்டுமா?!
12. நிறைய தண்ணீர் குடியுங்கள். கலோரியே இல்லாத ஒரே பானம் அது தான். தண்ணீர் குடிக்க போரடித்தால் மோர், இளநீர், தர்பூசணி என மாறி மாறி சாப்பிடலாம்.
13. காலை உணவுக்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுங்கள். ஓட்ஸ் சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, உப்புமா போன்றவையும் நல்ல சாய்ஸ்.
14. போரடிக்கும்போது சாப்பிடுவதற்கு பக்கத்தி லேயே ஒரு பிஸ்கட், சிப்ஸ், ஸ்நாக் பாக்கெட் வைத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக நல்ல திராட்சை பழம் நூறு கிராம் வைத்தி ருங்கள். நூறு கிராம் திராட்சையில் வெறும் 70 கலோரிதான் உண்டு. அதற்காக அதை அதிகமாக விழுங்கவும் வேண்டாம். காரணம், அதில் சுகர் அதிகம்.
15. தக்காளி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், குட மிளகாய், சைனா கோஸ் (Lettuce) வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து, சாலட் செய்து சாப்பிடுங்கள். கொஞ்சம் தயிர், அல்லது லெமன் சாறு தெளிக்கலாம். இதை வைத்து சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் பசியும் பறந்து போகும். முக்கியமான விஷயம்… சாலட்டில் பட்டர், சீஸ் என வேறு சமாசாரங்களைத் தடவாதீர்கள்.
16. முளைவிட்ட தானியங்களை அதி கம் சாப்பிடலாம். உடலுக்கு உடனடி சக்தி தருவதில் இவை சிறப்பானவை. பீன்ஸ் விதைகள், பச்சைப் பட்டாணி போன்றவை சிறந்தது.
17. தயிர் நல்லதுதான். ஆனால், அது அதிக கொழுப்-பில்லாத பாலிலிருந்து தயாரானதாக இருப்பது முக்கியம். கொழுப்பு நீக்கிய பாலை வாங்கி, அதில் தயிர் உண்டாக்கிச் சாப்பிடு ங்கள். அது புரோட்டீன், வைட்டமின், கால்சியம் என பல நன்மைகள் நிறை ந்தாக இருக்கும்.
கவனம்… இவை கேன்சர் தரும் உண வுகள்!
18. சிவப்பு இறைச்சிக ளை ஒதுக்குங் கள். அவை ஆக வே ஆகாது. தவிர்க்க முடியாத சூழலில் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு, நகர்ந்து விடுங்கள்.
19. சர்க்கரையை முடிந்த மட்டும் குறையுங்கள். அதிலும் வெள்ளை சர்க்கரை (சீனி) என்றால் வேண்டவே வேண்டாம்.
20. அதிக உப்புள்ள ஊறுகாயை நாக்கில் வைத்து சுர்ரென ரசிப்பவர்கள் உஷார். அது வயிற்றில் கேன்சரை தாரை வார்த்துவிடக் கூடும்.
21. வறுவறு, மொறுமொறு வகையறாக்கள், ‘டிரான்ஸ்’ கொழுப்பு உடையவை. இவற்றை எப்போதேனும் சுவைக்கலாமே தவிர, சாப் பிட்டுக் கொண்டே திரியக் கூடாது. அது ஆபத்தை விரும்பி அழைப்பது போலாகி-விடும்.
குறித்துக் கொள்ளுங்கள்… இவை கேன்சரை தடுக்கும் உணவுகள்!
22. புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை உண வில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை உடலின் செல்களைப் பாதுகாக்கும். கேன்சர் வரும் வாய்ப்பையும் குறைக்கும்.
23. தக்காளி, கேன்சர் வராமல் தடுக்கும் ஒரு நல்ல உணவு. குறிப்பாக நுரையீரல், வயிறு, தோல், புரோஸ்டேட் சுரப்பி, கிட்னி போன்ற இடங்களில் கேன்சர் வராமல் இது தடுக்கும். இத்துடன் ஆப்ரிகாட், கொய்யா, தர்பூசணி, பப்பாளிப்பழம், கறுப்பு திராட்சை இவற் றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
24. பூண்டு பற்றி நமக்குத் தெரியாததில்லை. ஆனால், அது கேன்சரையும் எதிர்க்கும் என் பது அதன் சிறப்பம்சம். பிளட் பிரஷரைக் குறை ப்பதிலும் பூண்டு உதவுகிறது.
25. ஆன்டிஆக்ஸிடன்ட் உணவுகளை அதிகம் உண்பது முக்கியம். பூசணி, கேரட், அடர் நிற காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர் க்கலாம். ஆலிவ் ஆயிலையும் கொஞ்சம் போல் சேர்த்துக் கொள்வது நல்லது.
26. மிளகு, கேன்சருக்கு எதிரி. காரமான பெப்பர் உடலின் கொழுப்பைக் கரைப்பதில் கில்லாடி. பெப்பரில் உள்ள ‘கேப்ஸைசின்’ இந்த வேலை யைச் செய்கிறது.
27. கேன்சரை எதிர்க்கும் ஒரு நல்ல உணவு… காளான். உடலின் கொல ஸ்ட்ராலையும் இது குறைக்கிறது. ஒரு காலத்தில் காளான் நமது கலா சார உணவு. இப்போது பிளாஸ்டிக் கவர்களில் பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கிறது.
தாம்பத்ய வாழ்க்கைக்கு கைகொடுக்கும் உணவுகள்!
28. இன்றைய அவசர உலகில் மன அழுத்தமும், அலு வல் அழுத்தமும் பெரும்பாலான தம்பதியினரின் தாம்பத்ய வாழ்க்கையையே காலியாக்கி விடுகிறது. இந்த அவசர யுகத்தில்கூட சரியான உணவுகள் உண் டால், உடலின் ஆரோக்கியமும், பாலியல் ஈடுபாடும் குறைவின்றி இருக்கும். அதற்கு முதல் வேலையாக ‘கெஃபீன்’ (Caffeine) பொருட்களை ஒதுக்குங்கள். இது தாம்பத்ய ஆர்வத்தைக் குறைத்துவிடும். டீ, காபி போன்றவற்றில் இந்த கெஃபீன் அதிகம் உள்ளது என்பது, குறிப்பி டத்தக்கது.
29. வைட்-டமின்-ஏ, இதற்கு ரொம்ப முக்கியம். இது உடலிலுள்ள எப்பிதீலியல் திசுக்களின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருகிறது. லிவர், முட்டை, சீஸ், பட்டர், கேரட்… இவற்றில் வைட்டமின்-ஏ அதிகம் உண்டு. இவற்றை அளவோடு உண்ண வேண்டியது அவசியம்.
30. வைட்டமின் சி, ஆண்களுக்கு நல்ல உணவு. தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி உடலில் சேர் ந்தால் உயிரணுக்கள் வலிமையடையும். திராட்சை,பெப்பர், ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை.
31. ஸிங்க் சத்து, தாம்பத்யத்தின் ஹீரோ! உணவில் இதைச் சேர்த்துக் கொண்டால், பெண்களுக்கு தாம்பத்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆண்களு க்கு உயிரணுக்குள் வலிமையாகும். உயிரணுக்களின் எண்ணிக்கை அதி கமாகும். சரி, கடல் சிப்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் கவலையே இல்லை. ஸிங்க் அதிகம் உள்ள ஒரு உணவு சிப்பி. சிப்பி என்றால் உவ்வேவா? கவலையில்லை சம்பா அரிசி, நல்ல பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரெட்… இவற்றிலெல்லாம் கூட ஸிங்க் சத்து உள்ளது.
32. ‘சொலீனியம்’ எனும் பொருள், பெண்களின் கரு முட்டை வளர்ச் சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்ப ற்ற இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை… இவற்றிலெல்லாம் இந்த சொலீனியம் உண்டு.
33. மாங்கனீஸ் சத்து, உடலின் ஆஸ்ட் ரோஜின் (Estrogen) சுரப்புக்கு நல்லது. குறி ப்பாக, பெண்களின் தாய்மைப்பேறை இது ஊக்குவிக்கும். மாங்கனீஸ் குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத் துவங்கும். கீரை, முழு கோதுமை, அன்னா சிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி… இவ ற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.
34. லினோலிக் ஆசிட், ஆண்கள் ஸ்பெஷல். குறிப்பாக குழந்தையின்மை க்குக் காரணம் உயிர் அணுக்கள் என்றால், லினோலிக் ஆசிட் நிரம்பிய உணவுகளைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். முந்திரி, சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் ஆயில், சோயா ஆயில் போன்ற-வற்றில் இது அதிக அளவில் இருக்கிறது.
35. ‘ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்’ உணவில் அதிக அளவு இருந்தால், தாம்பத்ய வாழ்வின் திருப்தி நிலைக்கு பயன்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் இவை அதிக அளவில் உண்டு. வெங்காயம், பூண்டு, கேரட், இஞ்சி, காய்ந்த முந்திரி போன்றவை உணவில் இருந்தால் தாம் பத்ய வாழ்க்கை சுகமாகும்.
எலுமிச்சையை சாதாரணமா நினைக்காதீங்க!
36. சில பொருட்கள் நமக்கு மிக எளிதாகக் கிடைக்கும். அதனாலேயே அதன் பயன்களை நாம் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. அப்படிப்பட்ட பொருட்களில் முதலிடம் இந்த எலுமிச்சைக்கு. இது ஒரு ரத்த சுத்திகரிப்பு ஆசாமி. எலுமிச்சைப் பழச்சாறை அருந்தி வந்தால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் வெளியேறும்.
37. எலுமிச்சைப் பழச் சாறை ‘லிவர் டானிக்’ என்பார்கள். லிவரின் செ யல்பாட்டை முறைப்ப டுத்தும். இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடி த்தால் அஜீரணக் கோளா றுகளெல்லாம் போய் விடும். குமட்டல், வாந்தி போன்றவற்றுக்கும் இது நல்லது.
38. தோலுக்கு எலுமிச்சை நெருங்கிய நண்பன். இதிலுள்ள வைட்டமின்-சி உடலுக்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக, தோலைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுவதில் முதலில் நிற்கும். தோல் எரிச்சல், வெயில் காரணமாக ஏற்படும் சன் பர்ன் போன்றவற்றிலிருந்தும் தோலைப் பாதுகாக்கும்.
உடல் வலுப் பெற வேண்டுமா?!
39. தினமும் இரண்டு முட்டை வரை சாப்பிடுவது ஆபத்தில்லை என் கிறது சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று. வேக வைத்ததாக இருப்பது நல்லது. உடலின் தசைகள் வலுவாக இது உதவுகிறது. பாடி பில்டர்ஸ§க்கு முக்கிய உணவே முட்டைதான்.
40. ‘ஆலியம் வெஜிடபிள்ஸ்’ என அழை க்கப்படும் பூண்டு, வெங்காயம், சீவ்ஸ், லீக், ஸ்கேலியன் (கடைசி மூன்றும் நீளமான வெங்காய தண்டு போல் இருக்கும்)… இவையெல்லாம் தசைக ளை வலுவாக்கும். இவற்றைச் சமைக் காமல் சாண்ட்விச், சாலட் என கலந்து கட்டி உண்டால் முழுப் பயன் கிடைக் கும்.
41. முழு தானியங்களை நேசியுங்கள். உடற்பயிற்சிகளின் போது தொடர் ந்து உடலுக்குத் தேவையான சக்தியை இது தரும். வைட்டமின்கள், மினரல், நார்ச்சத்து என தேவையான பலவும் இவற்றில் உண்டு.
சாப்பிட்டபின் செய்யக் கூடாதவை!
42. சாப்பிட்ட உடன் சில்லென ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. உடலில் கொழுப்பு சேரவும், செரிமானப் பிரச்னை கள் வரவும் இது காரணமாகிவிடும். சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து மிதமான சூட்டில் தண்ணீர் குடிப்பதே நல்லது.
43. சாப்பிடும்போதுகூட தண்ணீர் குடித்துக் குடித்துச் சாப்பிடுவது வயிறை அதிகம் வேலை செய்ய வைக்கும். அதுவும் பழச்சாறு, குளிர் பானம் என கலந்து கட்டி சாப்பாடு உண்பது நல்லதல்ல.
44. சாப்பிட்ட உடனே போய் குளிப்பது நல்ல தல்ல. அதுவும் அஜீரணக் கோளாறுகளைத் தந்து விடக்கூடும். சாப்பிட் டதும் ஒரு ‘தம்’ பத்த வை ப்பது, தம் பிரியர்களின் தலையாய கடமை. அது பயங்கர ஆபத்தை அழைத்து வரும். சாப்பி ட்டபின் ஒரு தம் அடிப்பது, பத்து தம் அடி ப்பதற்குச் சமம்.
45. சாப்பிட்ட உடனே போய் படுத்து தூங்கி விடாதீர்கள். இது சாப்பிட்டவை நன்றாக செரிமானம் ஆகாமல் வாயு சிக்கல் போன்ற பிரச்னைகள் வரக் காரணமாகிவிடும். உடல் எடையும் அதிகரிக்கும்.
‘டயட்’ பற்றி தெளிவடையுங்கள்!
46. உடல் எடை குறைப்பது போன்ற சமாசாரங்களெல்லாம் ஒரு வார த்திலோ, ஒரு நாளிலோ முடியக்கூடியதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென முப்பது நாளில் இளைக்க நினைத்தால் உடலின் ஆரோக்கியமும் பாழாகும். இழந்த எடை விரைவிலேயே ஏறவும் செய் யும்.
47. நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் சில உணவுப் பழக்கங்களை வைத்திருப்பதாக பேட்டியளிப்பார்கள். அவற்றைக் கடைபிடித் தால் அவர்களைப் போல நாமும் ஆகி விட லாம் எனும் கனவு சிலரிடம் சுழற்றியடிக்கும். அதெல்லாம் வெறும் ‘மாயா… மாயா’தான். அந்த சிந்தனையே உங்களுக்கு வேண்டாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தேவையெனில் ஒரு நல்ல டய ட்டீஷியனைப் பார்ப்பதே நல்லது.
48. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றில் நிலைத்திருங்கள். இடையிடையே பிஸ்கட் சாப்பிடுவது, சிறு சாக்லேட் சாப்பிடுவது, ஒரு பீஸ் கேக் சாப்பிடுவதெல்லாம் கலோரிக் கணக்கில் சேரும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். ஒரு சின்ன முறுக்கு சாப்பிட்டாலே நீங்கள் சுமார் 180 கலோரியை உடலில் ஏற்றிக் கொள்கிறீர்கள்.
49. வெறும் டயட் இருந்தால் போதும் என நினைப்பதே தப்பு. கூடவே, தொடர்ந்த உடற் பயிற்சி நிச்சயம் வேண்டும். அதற்கென நேரம் ஒதுக்க முடியாதவர்கள் வேலையிலே யே உடற்பயிற்சியைப் பாகமாக்கிக் கொள்ள வேண்டும். பஸ்ஸில் ஒரு ஸ்டாப்பிங் முன் னாடியே இறங்கி நடப்பது, லிஃப்ட் பக்கமே போகாமல் படியை நாடுவது, அடிக்கடி எழுந்து ஒரு நடை போடுவது… இப்படி!
50. அவ்வப்போது ஒரு வேளை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு ஓடினால், இன்னும் கொஞ்சம் எடை குறையலாம் என்பது தப்பான எண்ணம். உண்மையில் அது உடல் எடையை அதிகரிக்கவே தூண்டும். காரணம், ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். உடனே, உடல் இனிப்புப் பொருளைத் தேடும். கடை சியில், அன்று அதிக கலோரி உட்கொண்ட நாளாக மாறிவிடும்.
51. சிக்கனில் கொழுப்பு கம்மி என பலரும் நினைப்பதுண்டு. தோல் இல்லாத சிக்கன் சாப்பிட்டால்தான் அந்தக் கணக்கு சரிவரும். சிக்கனின் தோலில் இறைச்சியைவிட மூன் று மடங்கு அதிக கொழுப்பு உண்டு… கவனம்.
52. டயட் இருப்பவர்கள் மற ந்து விடும் சமாசாரங்களில் ஒன்று… டிரிங்க்ஸ். அவ்வப் போது ஒரு ‘சிப்’ ஜூஸ் குடி த்தாலோ, ஒரு குளிர்பானம் குடித்தாலோ அதுவும் கண க்கில் சேரும் என்பதை அம் மணிகள் கணக்கில் கொள்ள வேண்டியது முக்கியம்.
53. வீட்டுப் பெண்களின் முக் கியமான பழக்கம் இது. என் னதான் டயட் இருந்தாலும், இறுதியில் சமைத்த உணவு வீணாகப் போகிறதே என்பதற்காக மிச்சம் மீதியை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். அது உடலை உப்ப செய்யும்… ஜாக்கிரதை.
54. பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு டீஸ்பூன் சீனி பயன்படுத் தலாம். காபி, டீ அடிக்கடி குடித்தால், இந்த அளவும் அதிகரிக்கும் என்ப தால் அவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். கூடவே காபியில் உள்ள ‘கெஃ பீன்’, இதயத் துடிப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
சர்க்கரை குறைபாடுள் ளவர்கள் கவனிக்க!
55. எங்கு பார்த்தாலும் சர்க்கரை குறைபாடு சகட்டுமேனிக்கு வந்து விட் டது. உணவில் கொஞ்சம் கட்டுப்பாடு விதித்தால் இதைக் கட்டுக்குள் வைக்கலாம். ஓட்ஸ் சாப்பிடுங்கள். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை மட்டுப்படுத்தும். கூடவே ரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும்.
56. சர்க்கரை குறைபாடுடையோருக்கு காய்கறிகள்தான் பெஸ்ட் உணவு. பொ ட்டாசியம், வைட்டமின்கள், மினரல்ஸ் என எல்லாச் சத்துகளும் அதில் கிடை க்கும். பாகற்காய், காலிஃப்ளவர், வெள் ளரிக்காய், தக்காளி, பீன்ஸ், கீரை, வெங் காயம், பூண்டு என எல்லாமே அவர்களுக்கு குட் சாய்ஸ்.
57. மைதா மாவை கூடுமானவரையி லும் தவிருங்கள். இது உடலுக்குக் கெடு தலானது. எளிதில் செரிமானமும் ஆகாது, நார்ச்சத்தும் கிடையாது. ரத்த அழுத்தத்தையும் எகிற வைப்பதோடு, இது சர்க்கரை நோய்க்குக் காரணமாகி விடும்.
கர்ப்பமா இருக்கீங்களா…?!
58. வைட்டமின்-பி, பெண்களுக்கு மிகவு ம் முக்கியம். வைட்டமின்-பி2 மற்றும் ஃபோலிக் ஆசிட் இரண்டும் பெண்களின் தாய்மைக்கு ரொம்பவே அவசியம். அதுவும் குழந்தைப் பேறை எதிர்பார்க்கும் பெண்கள் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளவற்றை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன், ஈஸ்ட், பீன்ஸ், வாழைப்பழம் போன்றவற்றிலும் அடர் பச்சை நிற கீரைகளிலும் போலிக் ஆசிட் நிறைய உண்டு. கீரை, புரோக்கோலி, பீட்ரூட், அவகாடோ, ஆரஞ்சு, முட்டைகோஸ் போன்றவற்றை தொடந்து சாப்பிட்டால் உடலில் ஃபோலிக் ஆசிட்டுக்கு தட்டுப்பாடே வராது.
59. வைட்டமின்-இ… இது பெண்களுக்கு மிக முக்கி யம். குறிப்பாக கருவறையை ஆரோக்கியமாக்கும். சூரிய காந்தி விதைகள், முந்திரி, சூரியகாந்தி எண் ணெய், கோதுமை, அவகாடோ… இவற்றில் வைட்ட மின்-இ அதிகம் உண்டு.
60. தாய்மைக் காலத்தில் பெண்கள் இரட்டைக் கவன த்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாய் உண் ணும் உணவுதான் குழந்தைக்கும் போய்ச் சேரும். தப்பான உணவைச் சாப்பிட்டால் டாக்ஸோபிளா மோசிஸ் மற்றும் லிஸ்டீரியோசிஸ் என இரண்டு விதமான இன்ஃ பெக்ஷன் வந்து விடும். முக்கியமாக மெர்குரி அளவு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். சுறா, ட்டூனா போன்ற மீன்களில் இது அதிகமாக உள்ளது. அசைவம் என்றால் முழுமையாக சமைக்காத உண வை தொடவே தொடாதீர்கள்.
61. பச்சையாக உண்ணப்போகும் காய்கறிகளை சுத்தமாக கழுவ வேண் டும். சுட வைக்காத பால் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். காய்கறி களில் அரைவேக்காடு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
62. ஸ்வீட்ஸ், ஜூஸ் போன்ற ரெடி மேட் உணவு வகைகளின் காலாவ தியாகும் தேதியை (எக்ஸ்பயரி டேட்) கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அந்தத் தேதியை தொட்டும் தொடாம லும் இருக்கும் உணவு களைக்கூட தவி ர்ப்பது நல்லது. காலாவதி தேதியைத் தாண்டிவிட்டால்… கோடி ரூபாய் உண வாக இருந்தாலும் குப்பையில் போடு ங்கள்.
63. தாய்மைக் காலத்தில் இருக்கும் பெண்களின் முக் கியத் தேவை… கால்சியம். அதற்கு தயிர் ஒரு நல்ல உணவு. கூடவே, அடர் பச்சை நிற காய்கறிகளையும் தாராளமாக உண்ணுங்கள். பெண்கள் சிறு வயதி லிருந்தே போதுமான அளவு கால்சியம் உட்கொள்வது அவசியம். அது பிற்காலத்தில் அவர்களை எலும்புச் சிதைவு போன்ற நோய்களிலிருந்து காப்பாற்றும்.
64. முட்டை சாப்பிடுங்கள். வைட்டமின்-ஏ, இரும்புச் சத்து, புரோட்டீன் போன்றவை தேவையான அளவு இதில் கிடைக்கும். முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிடவேண்டியது அவசியம்.
65. மீன் பிரியரா? சூப்பர்! நிறைய மீன் சாப்பிட்டால் உடலுக்குத் தேவை யான ஒமேகா-3 சக்தி கிடைத்து விடும். நிறை மீன் சாப்பிடும் தாய் மார்களின் குழந்தைகள் கூர்மையான கண்பார்வை, அறிவாற்றல், பேச்சுத் திறன் எல்லாம் கொண்டிருக்கும் என்பது ஆராய்ச்சிகள் சொன்ன உண்மை. தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் மீன் உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால் குறைப் பிரசவம் நேராமல் தவிர்க்கலாம். மீனைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிக மிகச் சிறந்தது.
66. மட்டன் சாப்பிடுங்கள். வைட்டமின்-பி12, ஸிங்க், மற்றும் இரும்பு ச்சத்து இதில் உண்டு. அதிலும் ஆட்டிறைச்சி… வைட்டமின்-பி12 அதிகம் உள்ள ஒரு சூப்பர் உணவு. சைவப் பிரியர்கள் என்றால்… பீன்ஸ், நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், முழு தானியங்கள், சோயா போன்றவற்றை சாப்பிடலாம்.
உற்சாகமாக இருக்க!
67. ஒரு உண்மை தெரியுமா? நல்ல ஆரோக் கியமான உணவை, சரியான அளவில் உண் டால் மனம் ரொம்பவே மகிழ்ச்சியாகி விடும். தலைகீழாகி விட்டால் மன அழுத்தம், உடல் சோர்வு என இல்லாத தலைவலி எல்லாம் வந்து சேரும். எனவே ‘உண்பதைத் திருந்த உண்’ என்பதை மனதில் கொள்ளுங்கள்.
68. தினமும் தானியங்கள், பழங்கள், காய் கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். பால், அசைவம் போன்றவற்றை கொஞ்சமாக சாப்பிடவேண்டும். சர்க்கரை, எண்ணெய் போன்றவை மிக மிகக் குறைவாக இருக்க வேண்டும். இதையே ‘பேலன்ஸ்ட் டயட்’ என்பார்கள்.
69. வைட்டமின்-பி குறைவாக இருந்தால் ரொம்பவே ‘கடுப்பாக’ உணர் வீர்கள். வைட்டமின் பி 6, மூளையில் ‘செரோடோனின்’ சுரக்க வழி செய் கிறது. செரோடோனின் இருந்தால்தான் உங்கள் மனம் உற்சாகமாகும். அதற்கு நிறைய மீன், முட்டை, வாழைப்பழம், சோயா போன்றவை பயனளிக்கும்.
70. வைட்டமின்-சி குறைந்தால் சோர்வாக உணர்வீர்கள். சிட்ரஸ் அதிகமுள்ள பழங்கள், கொய்யா, திராட்சை, கிவிப் பழங்கள் இவையெல்லாம் வைட்டமின்-சி யின் உறைவிடங்கள். பெரும்பாலும் காய்கறிகள், பழங்களை அப்படியே சாப்பிட்டால் உடலும் உள்ளமும் உற்சாகம் கொள்ளும்.
71. தினமும் இரண்டு வாழைப்பழங்கள், மீன், கொஞ்சம் பச்சை மிளகாய், குடமிளகாய்… உணவில் இவையெ ல்லாம் இருந்தால் உற்சாகமாக உண ர்வீர்கள். குறிப்பாக பச்சை மிளகா யிலுள்ள காரம் ‘எண்டோர்பின்’கள் சுரப்பதற்கு உதவும். எண்டோர்பின்கள் சுரக்கும்போது மனம் ஆனந்தத்தில் மிதக்கும்.
72. உற்சாகமாக இருக்க வேண்டுமெ ன்றால் சிலவற்றைத் தவிர்ப்பதும் ரொ ம்ப ரொம்ப முக்கியம். குறிப்பாக, புகை, மது, அடிக்கடி காபி போன்றவை. இவை உடலிலுள்ள சத்துகளையெல் லாம் உறிஞ்சி விடுகின்றன. சிகரெட் உடலிலுள்ள வைட்டமின் சி-க்கு வேட்டு வைக்கிறது. இது மனதின் உற்சாகத்தைக் குலைக்கும்.
73. ‘ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்பிடணும், மூக்குப் பிடிக்க சாப்பிடணும்’ எனும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கொஞ்சம் கொஞ் சமாக ஐந்து வேளை சாப்பி டுவது நல்லது. இது உடலின் சர்க்கரை அளவை சமநிலை யில் வைத்திருக்க உதவும். அதேபோல உடலின் உறுப்புகளையும் அதி கம் வேலை வாங்காமல் இருக்கும். மனமும் உற்சாகமாக இருக்கும்.
74. உடலில் தண்ணீர் சத்து தேவையான அளவு இல்லாவிட்டால்கூட உடல் உற்சாகம் இழக்கும் என்பது வியப்பூட்டும் செய்தி. ஒரே நேரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ‘மடக் மடக்’ என குடிக்காமல், கொஞ்சம் கொஞ் சமாக நாள் முழுவதும் குடிப்பது ரொம்ப நல்லது.
பெண்களின் எலும்பு உறுதிக்கு..!
75. பெண்களுக்கு மிகப்பெரிய சிக்கல் மெனோபாஸ் காலத்துக்குப் பின் வரும் எலும்புச் சிதைவு நோய்கள். குறிப்பாக, உடலில் தேவையான அளவு கால்சியம் இல்லாததால் இந்தச் சிக்கல் உருவாகும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய உணவில் கவனம் செலுத்தினால் போதும். அதற்கு முக்கியமான ஒரு உணவு… வெங்காயம். பெண்களுக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல் எலும்பு வளர்ச்சி மட்டுப்படும், அதன் ஆரோக்கியமும் தடைபடும். வெங்காயம் அந்த சிக்கலைச் சரிசெய்யும் ஒரு நல்ல உணவு. உணவில் நிறைய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
76. புரோக்கோலி பெண்களுக்கான வரப்பிர சாதம் எனலாம். பெரிய மார்க்கெட்களில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் கவலைப்படாமல் வாங்கி உண்ணுங்கள். பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு என பெண்களின் எலு ம்புக்கு உத்தரவாதம் தருகிறது புரோக்கோலி. தினமும் 200 கிராம் புரோக்கோலி சாப்பிட்டால் எண்பது வயதிலும் எலும்பு ஸ்ட்ராங்காக இருக்கும்!
77. வால்நட்கள் கடைகளில் கிடைக்கும். கொஞ்சமாய் வாங்கிச் சாப் பிட்டால் போதும். இதிலுள்ள ஒமேகா-3 எலும்பின் அடர்த்தியைக் அதி கரிக்கும். தினமும் கொஞ்சம் வால்நட்டை வாயில் போட்டுக் கொறி யுங்கள்.
78. நிறைய உப்பு சேர்த்துக் கொள்வதை அறவே நிறுத்த வேண்டும். இது கால்சியத்தை அதிகளவில் வெளியேறச் செய்கிறது. இதனால் உடலின் கால்சியம் சத்து குறைகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டே வந்தால், ஒரு கட்டத்தில் குறைவான உப்பே நமக்குப் போதுமான சுவையைத் தந்துவிடும்.
மீன் சாப்பிடுங்கள்!
79. குழந்தைகளுக்கு மீன் கொடுப்பது மிகவும் நல்லது. சின்ன வயதிலிருந்தே வேக வைத்த மீன்களைச் சாப்பிட்டு வளரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. கூடவே, இது அவர்களுடைய நினை வாற்றல், அறிவுத் திறனை அதிகரிக்கச் செய்யும்.
80. மீன் குறைந்த கொழுப்புடைய உணவு . அதிக அளவு புரோட்டீன் சத்து இதில் உண்டு. இதிலுள்ள ஒமேகா அமிலச் சத்து பெண்களுக்கு ரொம்பவே நல்லது. வாரம் இரண்டு மூன்று முறையாவது வீட்டில் மீன் சமைத்துச் சாப்பிடுங்கள்.
81. அல்சீமர் போன்ற வயதானவர்களுக்கு வரைக்கூடிய நினைவை வலுவிழக்கச் செய்யும் நோய்களை, மீன் உணவை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் தவிர்க்கலாம்.
82. மீன் உணவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தமும் குறைவாகவே இருக்கும். காரணம், மீனிலுள்ள ஒமேகா அமிலம் மூளையில் செய்யும் மாயாஜாலம்தான்.
83. மீன் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கேன்சர் வரும் வாய்ப்பு பெருமளவு குறைகிறது. காரணம்… இதிலுள்ள ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’ எனும் பொருள்தான்.
இயற்கை உணவுகள்..
84. உணவு பொருட்களில் மிகச் சிறந்த உணவு கீரை. வாரத்தின் ஏழு நாட்களும் கீரை சேர்த்து கொள்வது நோயில்லா வாழ்வை உறுதிப்படுத்தும். இது, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் மிகச் சிறந்த வழிமுறையாகும்.
85. ‘வெந்து கெட்டது முருங்கை… வேகாமல் கெட்டது அகத்தி’ என்பது முன்னோர் வாக்கு. மிதமான அளவு வேக வைத்த முருங்கைக் கீரை உடலுக்கு நலம் பயக்கும். இந்தக் கீரையில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. தையாமின், ரிபோஃப்ளாவின், நியாசின், கால்சியம், பொட்டாசியம் போன்ற அதிகமான சத்துப் பொருட்களும் அடங்கியுள்ளன. முருங்கை இலை, சீரகம் இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டால், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். உடலிலுள்ள வெப்பம், மந்தத்தன்மை ஆகியவற்றையும் போக்கும். ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்தும் மூலிகைகளில் முருங்கையும் ஒன்று.
86. பொன்+ ஆம்+ காண்+நீ… என்ப துதான் பொன்னாங்கண்ணி. ‘இக்கீரை யை உண்டால், உடல் பொன்னாகக் காண் பாய்’ என்பது பெரியோர் வாக்கு. கண்நோய்களை தீர்க்க மிகவும் ஏற்ற கீரை. கை, கால் எரிவு, வயிற்று எரிச் சலைத் தீர்க்கும்; பசியை உண் டாக்கும்; கண்ணுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்; மூல நோயைத் தீர்க்கும்.
87. மணத்தக்காளியை, ‘உலக மாதா’ என்று உச்சியில் வைத்து போற்றுகிறது சித்த மருத்துவம். வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றும் பணியைச் செவ்வனே செய்வதில் இதற்கு இணையில்லை. அதோடு.. வாய்ப்புண், பசியின்மை, சோகை, ரத்த சோகை போன்றவற்றைத் தீர்க்கும்.
88. இன்று வயதானவர்களிடம் காணப்படும் நோய்களில் மூட்டு நோயும் ஒன்று. இந்நோ ய்க்கு ஏற்ற உன்னதமான கீரை… முடக் கத்தான் கீரை. மூட்டில் உள்ள நோய்களைப் போக்குவதால் (முடக்கு+அறுத்தான் – முடக்கறுத்தான்) இந்தப் பெயரில் அழைக்க ப்படுகிறது. ‘சிக்குன்குன்யா’ என்று தற்போது அழைக்கப்படும் காய்ச்சலின் காரணமாக ஏற்படும் மூட்டுவலியைத் தீர்க்க இந்தக் கீரை சிறந்தது. இதை அடையாகவும், துவையலா கவும் சாப்பிடலாம். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்குச் சிறந்தது.
89. ‘மூளை வளர்ச் சிக்கு வெண்டைக் காய் நல்லது’ என் பார்கள். அதுமட்டும ல்ல… நார்ச்சத்து மிக்கதான இந்தக் காய், நாள்பட்ட கழிச் சலை நீக்கும் தன்மை கொண்டது. தொண்டை எரிச்சல், உடல் சூடு, நாக்கில் சுவையின்மை போன்றவ ற்றை குணமாக்கும்.
90. வாழையடி வாழையாக மனித குலத்தைக் காப்பாற்றி வரும் தாவரங்களில் முக்கியமானது வாழை. இதன் தண்டு, மற்றும் பூ ஆகிய இரண்டின் மூலிகைத் தன்மை அளவிட முடியாதது. மூலநோய், மலச்சிக்கல், கை, கால் எரிச்சல், குடல் நோய், சிறுநீரகக் கல் போன் றவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
91. தயிர் உறைந்து வரும் நிலையில் இளந்தயிர், மூத்த தயிர் என இரண்டாகப் பிரிக்கலாம். இளந்தயிரில் பாலின் தன்மை முழுமையாக மறையாது இருக்கும். மூத்த தயிர் என்பது நன்றாக உறைந்து முற்றிய நிலையைக் குறிக்கும். மூத்த தயிரில் இருக்கும் நுண்ணுயிரிகளால் உடலுக்கு நிறைய நன்மை கிடைக்கிறது. என்றாலும், இந்தத் தயிரை அப்படியே பயன்படுத்தாமல், நீர் சேர்த்து மோர் என்ற நிலைக்கு மாற்றி உண்பதுதான் சிறந்தது.
92. ‘மண்பரவு கிழங்குகளில் கருணை யன்றி புசியோம்’ என்றொரு வாசகம் உண்டு. அதாவது, மண்ணுக்குள் விளையும் கிழங்குகளில், கருணைக் கிழங்கு மட்டும்தான் அதிகமான நார்ச் சத்து உள்ள கிழங்காகும். இது மலச் சிக்கலை உண்டாக்குவது இல்லை. மூல நோயாளிக்கு சிறந்தது. இந்தக் கிழங்கில் உள்ள ‘காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்’ எனும் பொருள், மெது வாக ரத்தத்தில் சேரும் இயல்பு கொண் டதால்… சர்க்கரை குறைபாடுள்ளோ ரும் கருணைக்கிழங்கைச் சாப்பிட லாம்.
கலோரி
93. வயது, உடல்வாகு, வேலை இவற் றுக்குத் தக்கவாறு மாறுபட்ட சக்தி மனிதனுக்கு தேவைப்படுகிறது. நாம் சா ப்பிடும் உணவுதான் சக்தியாக மாறுகிறது. இந்தச் சக்தி, ‘கிலோ கலோரி’ (kilo calorie) என்று அளவிடப்படுகிறது.
94. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோ தண்ணீரை ஒரு டிகிரி செல்சியஸ் சூடு படுத்துவதற்குத் தேவையான வெப்பத்தை உருவாக்கும் சக்தி எனலாம். ‘கிலோ கலோரி’ என்பதுதான் வெறுமனே ‘கலோரி’ என தற்போது அழைக்கப்படுகிறது. மேலை நாடுகளில் ‘கிலோ கலோரி’ என்பதற்கு பதிலாக ‘கிலோ ஜுல்’ (kilojoule) என்ற அளவினை பயன்ப டுத்துகிறார்கள். ஒரு கிலோ கலோரி என்பது 4.184 கிலோ ஜுல்கள் ஆகும்.
95. தினமும் ஒருவருக்கு எவ்வளவு சக்தி தேவை என்பதை கணக்கிட்டு, அந்தளவுக்குச் சாப்பிட்டால் போதும். உடலில் சேரும் சக்தியை அன்றே செலவழிப்பதும் முக்கியம். தேவைக்கு மேல் கலோரியை கொடுக்கும் உணவுகளைச் சாப்பிட்டால், செலவு போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாறி, உடலின் பல பாகங்களில் சேமிக்கப்பட்டுவிடும். இதுதான் உடல் பருமனுக்கு வழி ஏற்படுத்தும்.
96. உயரமானவர்கள், குண்டானவர்கள் ஆகியோருக்கு தோல் பரப்பளவு அதிகமாக இருக்கும். இத்தகையோரு க்கு சக்தி அதிகமாகச் செலவாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் வசிப்ப வர்களைவிட, குளிர் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 10% குறைவாகத் தான் சக்தி செலவாகும்.
97. ‘நான் எந்த வேலை யும் செய்வதில்லை. சதா தியானம், யோகா என் றே இருக்கிறேன். என வே, எனக்கு எந்த சக்தியு ம் தேவையில்லை’ என் று இருந்தால்… ஆபத்துதான். உடலில் இதயம், மூளை, நுரையீரல் போன்ற வை சதா இயங்கிக் கொண்டே இருக் கும். அவற்றுக்கு நிச்சயம் அடிப்படை யான சக்தி தேவை என்பதை மறந்து விடவேண்டாம்.
98. இயற்கையிலேயே ஆண்களைவிட பெண்களுக்கு சக்தியின் தேவை சற்றுக் குறைவுதான். உதாரணத்துக்கு… ஒரு பெண், ஒரு மணி நேரம் ஏ.சி. அறையில் அலுவலகப் பணிகளை மேற் கொள்கிறார் என்றால், சுமார் 80 கலோரி சக்தி தேவைப்படும். இதுவே ஆண் என்றால் 100 கலோரி. ஒரு மணி நேரம் வீட்டு வேலைகள், உடல் உழைப்பு செய்யும் பெண்ணுக்கு 250 கலோரியும், அதே வேலைகளைச் செய்யும் ஆணுக்கு 350 கலோரியும் தேவைப்படும்.
99. உடல் உழைப்பு செய்பவர் என்றால், நாள் ஒன்றுக்கு 2,700 கலோரி வரை சாப்பிடலாம். கூடுதலாக உடலுழைப்பு செய்பவர்கள் மேலும் சக்தியை தேடிக் கொள்ள வேண்டும்.
100. உடல் எடை 60 கிலோ உள்ள ஒரு வர் அலுவலக வேலை செய்பவராக (உட் கார்ந்த இடத்தில்) இருந்தால்.. 2,100 கலோரிக்கான உணவுகளை தினமும் சாப்பிட்டாலே போதும் (இது எல்லோருக்கும் அட்சரசுத்தமாக பொரு ந்தக்கூடிய கணக்கு அல்ல. ஒவ்வொ ருவரின் உடல் வாகைப் பொருத்து கூட வோ, குறையவோ இருக்கலாம்).