Tuesday, January 31, 2012

மஷ்ரூம் குருமா/கிரேவி

Posted On Jan 31,2012,By Muthukumar

தேவையான பொருட்கள்;
 
பட்டன் காளான் - 200 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால்டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி,புதினா - சிறிது
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன்,தக்காளி,தேங்காய்,முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி,நறுக்கி வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும்,வதக்கவும்.

அத்துடன் மல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்க்கவும்.சிறிது வதங்கட்டும்.

அத்துடன் நறுக்கிய காளான் சேர்க்கவும். வதக்கவும்.

காளானுடன் மல்லித்தூள்,சீரகத்தூள்,மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.

சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதிவந்தவுடன் அரைத்த வெங்காயம்,தக்காளி,தேங்காய்,முந்திரி விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.

கலந்து விட்டு கொதிக்க விடவும்.சிம்மில் வைத்து குருமா கொதிக்கட்டும்,நன்கு அரைத்து விட்ட தேங்காய் வாடை மடங்க வேண்டும். காளானில் ஒரு கடுப்பு இருக்கும்,அதனால் உப்பு பார்த்து சிறிது சேர்க்கவும்.காரமும் ஏற்றுக் கொள்ளாது, குறைவாக தேவைக்கு காரம் சேர்த்தால் சரியாக இருக்கும்.


சுவையான சத்தான காளான் குருமா ரெடி.

சப்பாத்தி,பரோட்டா,நாண்,ஆப்பம்,தோசை,இட்லி,சாதம் வகைகளுடனும் பரிமாறலாம். இந்த கிரேவி சிக்கன்,மட்டன் குருமா மணம் இருக்கும்.


பத்து நிமிடத்தில் சாஃப்ட் சப்பாத்தி செய்ய கால் கிலோ கோதுமை மாவோடு கைபொறுக்கும் சூட்டில் தண்ணீர், தேவைக்கு உப்பு, 2டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசைந்து வைக்கவும்.பின்பு அதனை 6 உருண்டையாக உடனே உருட்டி, மாவு போட்டு சப்பாத்தியாக தேய்த்தால் சாஃப்ட் சூப்பர் சப்பாத்தி விரைவில் ரெடி.

No comments:

Post a Comment