Posted On March 2,2012,By Muthukumar
குழந்தைகள்
சத்தான உணவு சாப்பிட போராட்டம் செய்கிறார்களா? அவ்வப்போது கேரட் பால்
அல்வா செய்து கொடுத்துப் பாருங்களேன். பால் குடிக்க மறுக்கும்
குழந்தைகள்கூட இந்தப் பால் அல்வா விரும்பி சாப்பிடுவார்கள். அப்படியே
அத்தியா வசிய ஊட்டச்சத்தான வைட்டமின் `ஏ` குழந்தைக்கு கிடைத்த மாதிரி
இருக்கும். செய்முறை இதோ...
தேவையானவை
மசித்த கேரட் - ஒரு கப்
பால் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
நெய் - 1/2 கப்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*
கேரட்டை நன்றாக துருவி வேக வைத்து மசித்துக் கொள்ளவும். மசித்த கேரட்டை
அளந்து கொள்ளவும். ஒரு கப் மசித்த கேரட்டிற்கு மற்ற பொருட்களின் அளவு
போதுமானது. முந்திரி பருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து எடுத்து
வைக்கவும்.
*
கனமான வாணலியை காய வைத்து மசித்த கேரட், பால், சீனி, எல்லாவற்றையும் இட்டு
கிளற வேண்டும். கலவை கெட்டியானதும் நெய் சிறிது சிறிதாக விடவும்.
*
பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு கொண்டு வரும்போது இறக்கி வைத்து வறுத்த
முந்திரிப் பருப்பு மற்றும் ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
* இந்த கேரட் அல்வா விருந்தின்போது பரிமாற ஏற்றது.
No comments:
Post a Comment