Tuesday, September 29, 2015

ஓட்ஸ் இட்லி-செய்வது எப்படி?

Posted By Muthukumar,On Sep 29,2015
oats itli
தேவை:
முழு உளுந்து (வெள்ளை) -100 கிராம்; இட்லி ரவா-200 கிராம்; ஓட்ஸ்-50 கிராம்; உப்பு தேவைக்கேற்ப; தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை:
உளுந்தை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். இட்லி ரவையை 10 நிமிடம் ஊற வைக்கவும். உளுந்தை கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். இட்லி ரவையை 3 முறை கழுவி சுத்தம் செய்து, அதை உளுந்து மாவுடன் கலக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கவும். ஓட்ஸையும் மாவுடன் கலக்கவும். இந்த மாவுக் கலவையை 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 8 மணி நேரம் கழித்து, மாவு புளித்ததும், நன்றாகக் கலக்கி விட்டு இட்லி தட்டுகளில் ஊற்றி அதன் மீது சிறிது ஓட்ஸைத் தூவி விடவும். 10 நிமிடம் வேக விட்டு எடுக்கவும். தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளிச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Monday, August 31, 2015

உருளைக்கிழங்கு ஜிலேபி



என்ன‍ இது வித்தியாசமா இருக்கே இந்த உருளைக்கிழங்கு ஜிலேபி! – இந்த உருளைக் கிழங்கு ஜிலேபியை நீங்கள் செய்து வைத்தால்,
உங்கள் வீட்டு பொடிசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாருங்கள் உருளை கிழங்கு ஜிலேபி எப்ப‍டி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
 
உருளைக்கிழங்கு : 1/2 கிலோ 
தயிர் : 1 கப் 
ஆரோரூட் பவுடர் : 50 கிராம் 
எலுமிச்சம்பழம் : 1 சிறிது 
நெய் : 1/2 கிலோ 
சர்க்கரை : 1/4 கிலோ 
கு‌ங்கும‌ப் பூ – ‌சி‌றிது 
 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலை உரித்து அத்துடன் ஆரோரூட் பவுடர், தயிர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். 
 
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சர்க்கரையை அதில் கொட்டி அடுப்பில் வைக்கவும். சர்க்கரை கரைந்து, பாகாகக் கொ தித்து வரும். பாகு இருகி வரும்போது குங்குமம்பூவை சிறிது தண்ணீரில் கரைத்து, அதில் ஊற்றி இறக்கவும். 
 
எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சாறை தனியாக வைத்துக் கொள்ளவும். வெள்ளைத் துணியின் நடுவில் ஒரு சிறு துவாரம் செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை ‌வி‌ட்டு காய்ந்ததும், பிசைந்துவைத்துள்ள கலவையை, துவாரம்செய்துள்ள துணிக்குள்வைத்து, முறுக் கு பிழிவது போல வட்டமாகப் பிழிய வேண்டும். 
 
முறுக்கின் இருபுறமும் சிவக்க வெந்து எடுத்து, தனியாக வைத்துள்ள சர்க்கரைப் பாகில் போடவும். பாகில் நன்றாக ஊறி யதும் எடுத்து ஒரு பாத்திரத்தில்போடவும். உருளைக்கிழங்கு ஜிலேபி ரெடி.

Saturday, July 18, 2015

மாங்காய் சாதம்

Posted By Muthukumar,On July 18,2015
MANGO RICE

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி-1 டம்ளர், மாங்காய்-2, மிளகய் வற்றல், பச்சை மிளகாய்- தலா 2; கடுகு, உளுந்து, கொண்டக்கடலை- தலா 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, மஞ்சள் பொடி, இஞ்சி, எண்ணெய், உப்பு.

செய்முறை;
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கொண்டக் கடலையைப் போட்டு தாளிக்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, தட்டிய இஞ்சி, நறுக்கிய மிளகய் வற்றல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். . துருவிய மாங்காய், உப்பு கலந்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசியை வேக வைக்கவும். மிதமான பதம் வந்ததும், வதக்கிய மங்காய்க் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பக்குவம் வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழையை மேலாகத் தூவிப் பறிமாறவும். மாங்காய் சீஸனுக்கு ஏற்ற சுவையான சாதம் இது.

கொத்துக்கறி இட்லி



கொத்துக்கறி  என்றாலேஅசைவ பிரியர்களின் நாவில் எச்சில் பெருகும். அந்தளவுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய  கொத்துக்கறிவைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி
தேவையானவை:
கொத்துக்கறி  தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப்
தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டுபொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொந்தன‌ கறியையும் போட்டு நன்றாக வதக்கவும்.
இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்கவும், கொத்துக் கறி நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக் கறி கலவையை அதன்மீது போடவும். பின்னர் இக் கொத்துக்கறி  கலவைமீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் (மாவை ஊற்றும்போது கொத்துக்கறி  மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக் கொள்ளவும்)
இந்த இட்லிகளை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக்கறி இட்லி தயார். இட்லியையும், கொத்துக்கறி யையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும்போது சுவை அதிகமாக இருக்கும்.

Thursday, June 18, 2015

சிக்கன் மஞ்சுரியன்



ஓட்டல்களுக்குச் சென்றால் நான் விரும்பிச் சாப்பிடும் சிக்கன் வெரைட்டி, இனிப்பும் காரமும் குடைமிளகாய் வாசமும், சுவையும் கலந்த
இந்த சிக்கன் மஞ்சுரியன் தான்…
ஒரு நாளாவது அதை வீட்டிலேயே செய்துசாப்பிட வே ண்டும் என்ற நீண்டநாள் ஆசை இப்போதுதான் நிறை வேறியது… ‘’ஞான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்று வாழ்வோரல்லவா நாம்!!! 
தேவையானவை…
போன்லெஸ் சிக்கன் – ½ கிலோ
குடை மிளகாய்– 2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கேற்ப)
பெரிய வெங்காயம்–2 (அல்) 3 (உங்கள் ரசனைக்கே ற்ப)
தக்காளி சாஸ் – 2 அல்லது 3 குழிக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
பூண்டு (உரித்தது) – ஒரு கையளவு
இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
மைதா மாவு – ஒரு கையளவு
சோள மாவு –  ஒரு கையளவு
முட்டை – 2
தயிர் –  ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கேசரி பவுடர் –  ½ ஸ்பூன்
எண்ணெய் – 250 ML
செய்முறை

முதலில் சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட போன் லெஸ் சிக்கனை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு பிசைந்து நன்றாக கழுவிக்கொள்ளலாம். (மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் எப்போது அசைவம் செய்தாலும் அதைக்கழுவும்போதே மஞ்சள் தூள் போ ட்டு பிசைந்து கழுவுவது ஆரோக்கியமான ஒன்று…)
உரித்த பூண்டை மெல்லிய சிலைஸ் சிலைஸாக வெட் டிக்கொள்ளலாம். சிக்கன் மஞ்சுரியனுக்கு வெங்காயத் தை யும் குடை மிளகாயையும் வெட்டும் முறை மிக முக்கியமானது. வெங்காயத்தை ஒவ்வொரு லேயராக உரித்து சதுர வடிவிலான துண்டுகளாக வெட்டிக் கொ ள்ளலாம். குடை மிளகாயையும் அவ்வாறே… பச்சை மிளகாயை உங்களுக்கு விருப்பமான விதத்தில் வெட் டிக்கொள்ளலாம்.

ஒருகிண்ணத்தில் ஒரு கையளவு சோள மாவையும், ஒரு கையளவு மைதா மாவையும் கொட்டி அதில் சிறி தளவு உப்பும், கேசரி பவுடரும் சேர்த்து அதன் மீது இர ண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை மட்டும் ஊற் றி பிசைந்து கொள்ளவேண்டும்.

இப்படிப்பிசைந்த கலவையுடன் இப்போது சிக்கன் துண்டுகளையும் போட்டு பிசைந்து கொள்ளலாம்.

இப்படிப்பிசைந்த சிக்கன் துண்டுகளை ஒரு வாணலி யில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்…

அதன்பிறகு ஒரு ஃப்ரை பேனிலோ இல்லை கடாயி லோ சிக்கனைப்பொறித்த எண்ணையையே ஒரு குழி க்கரண்டி விட்டு எண்ணைய் சூடானவுடன் முதலில் நறுக்கிய பூண்டுகளை போட்டு வதக்கவும். பூண்டு சிறி து வதங்கியதும் அதில் இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்துண்டுகளையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும். அடுத்து அதனுடன் நறுக்கிய குடை மிளகாயை போட்டு வதக்கவும்.

இப்போது இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு, அரை ஸ்பூன் கேசரி பவுடர் ஆகியவற்றைப் போ ட்டு வதக்கவேண்டும். இது சிறிதளவு வெந்தவுடன் இதி ல் ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கவும். அடுத்து இதில் ஒரு கப் தயிர் விட்டு தேவைப்பட்டால் சிறிது தண்ணீரும் விட்டு வதக்கவும்.

தயிர் இந்த வதங்கலில் நன்றாகக்கலந்து கரைந்ததும் ஏற்கனவே பொறித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை இதில் கொட்டி நன்றாக வதக்கவும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வெந்தவுடன் மீண்டு ம் ஒருமுறை ஒரு குழிக்கரண்டி தக்காளி சாஸ் விட்டு வதக்கி இறக்கிவிட்டால் சிக்கன் மஞ்சுரியன் ரெடி…  (தேவைப்பட்டால் வெங்காயம் மற்றும் குடைமிளகா யை வதக்கும்போதே சோயா சாஸ்ம், சிறிது வினிகரு ம் சேர்த்து வதக்கலாம். இல்லையென்றாலும் பரவாயி ல்லை.)

அடுத்து?… அடுத்து என்ன சுவையான சிக்கன் மஞ்சுரி யனை உங்களுக்கு விருப்பமான விதத்தில் ஒரு வெட்டு வெட்டவேண்டியதுதான்…!!!


கொத்துக்கறி புலாவ்


அருமையான மிகவும் ருசியான, சமைக்க‍வும் கொஞ்சம் எளிதான அசைவ உணவு வகையொன்றை
நாம் பார்க்க‍விருக்கிறோம். இதோ கொத்துக்கறி புலாவ்
தேவையானவை
கொத்துக் கறி – அரைக் கிலோ
சாதம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – கைப்பிடி
பச்சைமிளகாய் – 4 (நீளமாக நறுக்கவும்)
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க :
எண்ணெய்
பிரிஞ்சி இலை
பட்டை
செய்முறை
குக்கரில் கொத்துக்கறியுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்து வைக்கவு ம். ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதனுடன் வேக வைத்த கொத்துக் கறி  தேவைப்பட்டால் உப்பு போட்டு நீர் சுண்டும் வரை கிளறவும். கொத்துக் கறி கலவையுடன் வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது மிளகாய்த்தூளை போட்டு கிளறி இறக்கவும். சுவையான கொத்துக் கறி புலாவ் ரெடி. சூடாக பரிமாறவும்.

Tuesday, June 9, 2015

சமையலறை டிப்ஸ்

Posted By Muthukumar,On June 9,2015
COOKING LADY
* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.
* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.
* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.
* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.
* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.
* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.
* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.
* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.
* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.
* எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.
* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.
* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.
* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.
* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.
* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.

பிஸிபேளா பாத்

Posted By Muthukumar,On June 9,2015

BISIBELA BATH

தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு-2 கப்; அரிசி-1 1/2 கப்; காய்கறிகள் ( உருளைக் கிழங்கு, பீன்ஸ், பச்சை பட்டாணி, குட மிளகாய் மற்றும் கேரட்) -3 கப்; மஞ்சள் தூள்-1 ஸ்பூன்; தேவையான அளவு உப்பு; புளிக் கரைசல்- 1 டேபிள் ஸ்பூன்; நெய்-2 டேபிள் ஸ்பூன்; வெல்லம்-20 கிராம்; எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்; கடுகு-1 ஸ்பூன்; கறிவேப்பிலை- ஒரு கைப்பிடியளவு; பெருங்காய பௌடர்-சிறிதளவு; அரிந்த வெங்காயம்- 250 கிராம்; முந்திரி பருப்பு-50 கிராம்; நிலக் கடலை-50 கிராம்; நெய்( தாளிக்க)-75 கிராம்;
பிஸிபேளா பாத் பௌடர்தயாரிக்க-
லவங்கப் பட்டை-3; சிவப்பு மிளகாய்- 50 கிராம்; கிராம்பு-2 கிராம்; ஏலக்காய்-2 கிராம்; கொத்தமல்லி விதை-1/4 கப்; கொண்டக் கடலை-2 டேபிள் ஸ்பூன்; துருவிய தேங்காய்-3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
அரிசியையும் துவரம் பருப்பையும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும். பிசிபேளா பாத் பௌடருக்குரிய பொருட்களை வறுத்து பொடி பண்ணவும். ஒரு வாயகல பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும். கடுகு போட்டு பொறிய விடவும். கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வறுக்கவும். காய்கறிகள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். அத்துடன் வேக வைத்த சாதம் மற்றும் துவரம் பருப்பைச் சேர்க்கவும். நன்கு வேக விடவும். 2 ஸ்பூன் பிஸிபேளா பாத பௌடர் கலக்கவும். புளிக் கரைசல் மற்றும் வெல்லம் சேர்க்கவும். தேவைப்பட்டால், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ந்ன்றாகக் கலக்கவும். 15 நிமிடம் லேசான தீயில் வேக விடவும். பிஸிபேளாபாத் கொதித்து வரும்போது, தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நிலக் கடலை மற்றும் முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்துப் போடவும். பெருங்காயத்தூள் சேர்கக்வும். நெய் சேர்க்கவும். காரா பூந்தியுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

சால்ட் ஃப்ரீ உணவுகள்:

Posted By Muthukumar,On June 9,2015

உணவில் உப்பைக் குறைக்கவேண்டிய அவசியம் நம்மில் எத்தனையோ பேருக்கு உள்ளது. சில ‘சால்ட் ஃப்ரீ’ உணவு வகைகள் கீழே தரப்பட்டுள்ளன:

தயிர் வடை:
DAHI VADA
தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு-150 கிராம்; சோயா பீன்ஸ்-150 கிராம்;துருவிய இஞ்சி-ஒன்றரை டீ ஸ்பூன்; பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2; தயிர்- 300 கிராம்; பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை-ஒரு கைப்பிடியளவு.
பச்சை சட்னிக்கு தேவையானவை:
கொத்தமல்லித் தழை-1 கப்;
தயிர் வடைக்குத் தேவையானவை:
பொடியாக நறுக்கிய புதினா இலை- 1/4 கப்; வேர்க்கடலை-25 கிராம்; இஞ்சி பூண்டு விழுது-1/2 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; ஜீரகம்-1/4 டீஸ்பூன்.
சிவப்பு சட்னிக்குத் தேவையானவை:
புளிபேஸ்ட்-1/2 கப்; துருவிய வெல்லம்- 1/2 கப்; துருவிய பேரீச்சம் பழம்-2 டீஸ்பூன்; ஜீரகப் பொடி-1 டீஸ்பூன்.பொடியாக்கிய திராட்சை-2 டீஸ்பூன்.
செய்முறை:
சோயா பீன்ஸ் மற்றும் உளுத்தம் பருப்பை முதல் நாள் இரவே 6-7 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டிவிட்டு, அவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கருவேப்பிலை இவற்றை அரைத்த மாவுடன் கலந்து பிசைந்து அதை வடை மாவு பதத்துக்கு கொண்டுவரவும். பின்னர் வடைகளாகத் தட்டி ஆவியில் 10-12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். பச்சை மற்றும் சிவப்பு நிற சட்னிகளைத் தயார் செய்து கொள்ளவும். வடைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதன்மேல் சிவப்பு சட்னியை ஊற்றி, அதன் மேல் தயிரை ஊற்றி , அதன் மேல் பச்சை கலர் சட்னியைப் பரப்பி விடவும். அதன்மேல் லேசான மிளகய்ப் பொடியும் கருவேப்பிலையும் கொத்தமல்லித் தழையும் சேர்த்து தூவி ரெடி பண்ணவும்.
^^^^^^^^^^^^^
ஃப்ரூட் சாலட்:
FRUIT SALAD
தேவையானவை:
ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம்,திராட்சை, ஸ்ட்ராபெரி மற்றும் சப்போட்டா ஆகிய பழங்களை நறுக்கிக்கொள்ளவும்.; ஒரு இளனி மற்றும் சிறிதளவு தேன்.
செய்முறை:
இளநீரைக் குடித்துவிட்டு, அதிலுள்ள வழுக்கையை சேகரித்து பழங்களுடன் கலக்கவும். அத்துடன் தேன் சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று பறிமாறவும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஷஹி பனீர்:
SHAHI PANEER
தேவையான பொருட்கள்:
சிறு துண்டுகளாக்கிய பனீர்-200 கிராம்; நறுக்கிய தக்காளி-3; முந்திரிப் பருப்பு விழுது-2 1/2 டீஸ்பூன்; மஞ்சள் தூள்- -1/4 டீஸ்பூன்; மல்லித் தூள்-1 டீஸ்பூன்; மிளகாய்த் தூள்-1/2 ஸ்பூன்; ஜீரகப் பொடி-1/2 டீஸ்பூன்; இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்; கொத்தம்ல்லித் தழை-ஒரு கைப்பிடியளவு; எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டு வதகக்வும். தக்காளி மற்றும் மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, மற்றும் ஜீரகப் பொடியைக் கலந்து வதக்கவும். அத்துடன் முந்திரி விழுது மற்றும் பனீரைப் போட்டு வதக்கவும். 2 நிமிடம் கழித்து தண்ணீரை 1/2 கப் ஊற்றி, திக்காகும்வரை கொதிக்கவிடவும். கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கி வைக்கவும். சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையான டிஷ் ரெடி.

செட்டிநாடு மீன் பிரியாணி




சுவையான நம்ம‍ செட்டிநாடு மீன் பிரியாணி எப்ப‍டிசெய்வது என்று
பார்ப்போமா?
என்னென்ன தேவை?
பாஸ்மதி அரிசி –3/4 கிலோ
மீன் – 3/4 கிலோ (பெரிய வகை)
வெங்காயம் – 3
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
இஞ்சி, பூண்டு விழுது – 3 மேசைக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை – தலா 2
தயிர் – ஒன்றரை கப்
மிளகாய் தூள் – 2 + 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் –1 + 1/2 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் – ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி
கெட்டி தேங்காய் பால் – ஒரு கப்
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய், புதினா, மல்லித்தழை, உப்பு–தேவையா ன அளவு.
எப்படிச் செய்வது?
மீனை சுத்தம் செய்து கொள்ளவும். மீனுடன் அரை தேக் கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு மேசைக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.
அரிசியை ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். பிரட்டிவைத்தமீனை தவாவில் போட்டு அரை பதமாக பொரித்தெடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ் சி இலை தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கி, பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள்சேர்த்து வதக்கவும்.
தனுடன் தக்காளி, மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு கிளறிவிடவும். பின் மல்லித் தழை, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு, தயிர், தேங்காய் பால், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறிவிட்டு 2 நிமிடம் வேக விடவும்.
பிறகு பொரித்த மீன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு, மீனை தனியாக எடுத்து வைக்கவும். குருமாவில் மீன் பொரித்த எண்ணெயை ஊற்றவும். பின் அரிசியைக் களைந்து குருமா வில் போட்டு, பன்னீர் சேர்த்து மூடி போட்டு 15நிமிடம் சிம்மில் வேகவிடவும். பின் நன்கு கிளறி விட்டு, மீன் துண்டு களைப் போடவும். மல்லி த் தழை தூவி இறக்கவும்.

Sunday, May 31, 2015

அவல் உப்புமா



உப்புமாக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்ப‍து என்ன வென்றால், ஒன்று சேமியா உப்புமா, இன்னொன்று ரவை உப்புமா ஆகிய இரண்டுதான்.  இன்னும் சிலருக்கு
நொய் உப்புமா தெரியும். ஆனால் ஆரோக்கியம் நிறைந்த அவல் உப்புமா எப்ப‍டி செய்வது என்று தெரியுமா? இதோ அதற்கு தேவையான பொருட்களும், செய்முறையும் உங்கள் பார்வைக்கு . . .
தேவையானவை:
அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு –ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15நிமிடம் ஊறவைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10நிமிடம் மூடிவைக்கவும் ( அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). பிறகு கறிவேப்பி லை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

கேழ்வரகு-எள் அடை

Posted By Muthukumar,On May 31,2015
ragi el adai
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கப்; கருப்பு எள்_2 மேஜைக் கரண்டி; வெல்லம்-50 கிராம்; நெய்-தேவையான அளவு; ஏலக்காய்-சிறிதளவு; சுக்குப் பொடி-சிறிதளவு.

செய்முறை:
தனித் தனி வாணலியில் கேழ்வரகு மற்றும் எள்ளை வறுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடியைக் கலந்து, வெல்லக் கரைசலை ஊற்றி, பதம் வரும்வரை பிசையவும். இப்போது கலவையை தோசைக் கல்லில் ஊற்றி, நெய் இட்டு சுட்டெடுத்தால், கேழ்வரகு எள் அடை தயார்.

பலன்கள்:
கேழ்வரகு மற்றும் எள்ளில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதிய வலுவைத் தருகிறது. மேலும், இதிலுள்ள இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்கள் குடல் புண், நீரிழிவு, ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு அளிப்பதுடன் , நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச் சத்து, மலச் சிக்கலை சரி செய்கிறது. மேலும் உடல் எடையைக் குறைக்கும் பண்பு கேழ்வரகிற்கு உண்டு என்பதால், டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது., இந்த கேழ்வரகு அடை.

கேழ்வரகு இனிப்பு தோசை



ந‌மது ஆரோக்கியம் உண்ணும் உணவிலேயே இருக்கிறது. ஆம்! இந்த கேழ்வரகு என்பது ஆரோக்கிய
உணவாகும். இந்த கேஷ்வரகில் இனிப்பு தோசை எப்ப‍டி செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையானவை:
கேழ்வரகு மாவு – 250 கிராம்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 200 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
அரிசி மாவு – ஒரு கப்
நெய் – 100 மில்லி.
செய்முறை:
கேழ்வரகு மாவு, அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலக்கவும். வெல்ல த்தைப் பொடித்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கரைத்து, வடிகட்டவும். இதை மாவுடன் கலந்து, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கரைத்து, தோசைக ளாக வார்த்து, சுற்றிலும் நெய் விட்டு எடுக்கவும்.
குறிப்பு:
தொட்டுச்சாப்பிட ஏதும்தேவை இல்லை. திடீர் மாவுகளுக்குபதிலாக கேழ் வரகு மற்றும் அரிசியை தனித்தனியாக ஊறவைத்து அரைத்தும் தயாரிக் கலாம்.

Sunday, May 24, 2015

பழைய சாதம் சாப்பிடுங்க


முதல் நாள் சோற்றில் நீர் ஊற்றி, அடுத்த நாள் உண்ணும் சாதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள வைட்டமின்கள் அடங்கியுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பழைய சாதம் உண்பதால் அதிலிருந்து பெருகும் சக்தி, நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதால் காய்ச்சல் உள்ளிட்டவை அணுகாது. வெப்பத்தை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். சிறு குடலுக்கு நன்மை அளிக்கும்.
குடல் புண், ஒவ்வாமை, அரிப்பு போன்றவை சரியாகும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் எடை குறையும். உடலில் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பெரும் அளவு உற்பத்தி செய்து உடலுக்கு நன்மை தரும். எனவே உடலுக்கு நன்மை செய்யும் எளிமையான உணவுகளை உண்ண வேண்டும்.

Friday, May 8, 2015

கோழி மிளகு வருவல்

Posted By Muthukumar,On May 8,2015
kozhi varuval
தேவையான பொருட்கள்;
சிக்கன்-1 கிலோ ( தோல் நீக்கி சுத்தம் செய்தது); சோம்பு-1 டேபிள் ஸ்பூன்; ஜீரகம்-1 டேபிள் ஸ்பூன்; கருப்பு மிளகு-1.5 டேபிள் ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-4-5; தனியா-1 டேபிள் ஸ்பூன்; மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்; பூண்டு பற்கள்-5( தோலுரித்து நைஸாக அரைத்தது); இஞ்சி-1 இஞ்ச் துண்டு( தோல் நீக்கியது); வெங்காயம்-2 பொடியாக நறுக்கியது; தக்காளி-2 (நறுக்கியது); லவங்கப் படடை-1 இஞ்ச் துண்டு; ஏலக்காய்-2; தண்ணீர்-2 கப்; உப்பு-தேவைக்கேற்ப; எண்ணெய்-சமைக்கத் தேவையான அளவு.

செய்முறை:
ஏலக்காய் மற்றும் லவங்கப் பட்டை தவிர மீதமுள்ள மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைத்து வைக்கவும். சிகக்னை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு, சில துளிகள் எண்ணெயும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். அதில் ஏலக்காய் மற்றும் லவங்கப் பட்டை போட்டு தாளித்து அரிந்து வைத்த வெங்காயத்தைப் போட்டு பொந்நிறமாக வதக்கவும். அத்துடன் அரைத்த மசாலாவைப் போட்டு, அத்துடன் தக்காளியையும் போட்டு கிளறி கொஞ்ச நேரம் வேக விடவும். பின்னர் சிக்கன் துண்டுகளைப் போட்டு தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். சிகக்ன் 3/4 பாகமாக வெந்து வந்ததும், தீயை குறைத்து சிக்கன் வேகும் வரை கிளறிவிட்டு, அதன்மீது எண்ணெய் மிதந்து வரும்போது இறக்கி சூடாக பறிமாறவும்

K.F.C. சிக்க‍ன்


K.F.C. (கே.எஃப்.சி) சிக்க‍னை காசு கொடுத்து வாங்கி ருசிப்ப‍தை விட, வீட்டிலேயே செய்து, சமைத்து
ருசித்தால் எப்ப‍டி இருக்கும். இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்
தேவையானவை:
சிக்கன் -1/2 கிலோ 
தக்காளி சாஸ்- –1 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன் 
சில்லி சாஸ் – 2 ஸ்பூன் 
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் 
மிளகு தூள் – 1/2 ஸ்பூன் 
மைதா மாவு – 1 கப் 
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
முட்டை – 1
பிரட் தூள் – 1 கப் 
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன்துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற் றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்க வேண்டும். இதுபோன்று அனைத்து சிக்கன் துண்டு களையும் செய்தால், சுவையான K.F.C. (கேஎப்சி) சிக்கன் ரெடி.

Friday, May 1, 2015

30 வகையான ‘இஞ்சி – பூண்டு’ உணவுகள்

 


சுவைமட்டுமல்லாது கூடவே ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் இஞ்சி பூண்டு உணவு வகைகளைத்
தெரிந்துகொண்டு சமைத்து உண்டு வளமோடும் மகிழ் வோடும் வாழ்வோம். வாருங்கள்

1) ஜிஞ்சர் சிரப்! 

தேவையானவை:
துருவிய இஞ்சி, சர்க்கரை – தலா ஒரு கப், 
தண்ணீர் – 3 கப், 
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், 
சோடா – ஒரு கப்.
செய்முறை:
துருவிய இஞ்சியுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதில் சர்க்கரைசேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் 5 நிமிடம் அடுப்பை ‘சிம்’மி ல் வைத்து, இறக்கி ஆற விடவும். அதனை அரை மணி நேரம் கழித்து வடிகட்டி, சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைக்க… ஜிஞ்சர் சிரப் ரெடி!
தேவைப்படும்போது 2 டேபிள்ஸ்பூன் சிரப், அரை டம்ள ர் சோடா, அரை டம்ளர் தண்ணீர், ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நன்கு கலந்து பரிமாறவும்.

2) பூண்டு சாதம்

தேவையானவை:
வடித்த சாதம் – ஒரு கப், 
பூண்டுப் பல் – 10, 
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), 
பச்சை மிளகாய் – 2 அல்லது 3 (நீளவாக்கில் கீறியது), 
சீரகம் – கால் டீஸ்பூன். 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், அரைத்த பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். வதங்கியவுடன், சாதத்தை போட்டுக் கிளறவும். ஒரு நிமிடம் கழித்து இறக்கி, தயிர்ப் பச்சடி அல்லது அப்பளத்துடன் பரிமாறவும்.

3) ஜிஞ்சர் சூப்


தேவையானவை:
துருவிய இஞ்சி – கால் கப், 
துருவிய கேரட், முட்டைகோஸ் (கலந்தது) – அரை கப், 
சோள மாவு – ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டேபிள்ஸ்பூன், 
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
குக்கரில் எண்ணெய் விட்டு, இஞ்சி, துருவிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆற விடவும். சோள மாவை தண்ணீரில் கரைத்து அதில் கலக்கவும். பிறகு, மிளகு த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி, ஒரு கொதி விட்டு இறக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

4) பூண்டு ரொட்டி


தேவையானவை:
கோதுமை மாவு – ஒரு கப், 
அரைத்த பூண்டு விழுது – 5 டேபிள்ஸ்பூன், 
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், 
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், 
வெண்ணெய் – அரை டீஸ்பூன், 
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்துப் பிசறி, தேவையான தண்ணீர்விட்டு, சப்பாத்திமாவு பத த்தில் பிசையவும். கடாயில் நெய்விட்டு, பூண்டுவிழுது , மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து சுருள வதக்கினால், பூரணம் ரெடி! மாவை சப்பாத்தியாக தேய்த்து, அதன் மீது பூரணத்தைப் பரப்பி, மேலே இன் னொரு சப்பாத்தியை வைத்துத் தேய்க்கவும். இந்த சப்பாத்தியை சூடான தவாவில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

5) ஜிஞ்சர் ரைஸ்

தேவையானவை:
சாதம் – ஒரு கப், 
வெங்காயம் – 1, 
இஞ்சி – 4 அங்குலத்துண்டு ஒன்று, 
தக்காளி சாஸ், சோயா சாஸ் – தலா 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சாதம் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் உப்பு, தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்துக் கிளறவு ம். வடித்த சாதத்தைப் போட்டு நன்கு கலக்கி, கொத்த மல்லி தூவி பரிமாறவும்.

6) பூண்டு- தேங்காய் சட்னி


தேவையானவை:
உரித்த பூண்டு, தேங்காய் துருவல் – தலா கால் கப், 
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, உரித்த பூண்டு, தேங்காய் துருவலை நன்கு வறுக்கவும். இதனுடன் உப்பு, மிளகா ய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பூண்டு – தேங்காய் சட்னி ரெடி! இது மும்பை ஸ்பெஷல் வடா பாவ் சட்னி.

7) ஜிஞ்சர் யோகர்ட் வித் ஃப்ரூட்


தேவையானவை:
தயிர் – ஒரு கப்,
வாழைப்பழம் – 1 (சிறு துண்டுகளாக்கவும்), 
நறுக்கிய பப்பாளி – 10 துண்டுகள், 
திராட்சை – 20, 
இஞ்சித் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், 
பாதாம்பருப்பு – 10, 
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
தயிருடன் வாழைப்பழம், பப்பாளி, திராட்சை, இஞ்சித் துருவல், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிக் கொள் ளவும். ஒரு மணி நேரம் முன்பு ஊற வைத்த பாதாம் பருப்பைத்தோல்நீக்கி, துருவி அதில்சேர்க்கவும். பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.

8) பூண்டு சட்னி


தேவையானவை:
உரித்த பூண்டு – கால் கப், 
காய்ந்த மிளகாய் – 7, 
புளி – ஒரு சிறு நெல்லிக்காய் அளவு, 
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, 
கடுகு, உளுத்தம்பருப்பு – தாலா கால் டீஸ்பூன், 
பெருங்காயம், உப்பு, நல்லண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்புசேர்த்து வதக்கி, மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இன்னொரு கடாயி ல் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெ ருங்காயம் தாளித்து, சட்னியில் சேர்த்துக் கலக் கவும்.

9) இஞ்சிப் பச்சடி


தேவையானவை:
இஞ்சி – 50 கிராம், 
தேங்காய் துருவல் – ஒரு கப், 
பச்சை மிளகாய் – 2, 
சீரகம் – அரை டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
தயிர் – ஒரு கப், 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுத்தம்செய்த இஞ்சி, தேங்காய்துருவல், பச்சை மிளகா யை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும், அதில் உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். கடாயில் எண் ணெய் விட்டு சீரகம் தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, தயிர் கலவையுடன் கலக்கிப் பரிமாறவும்.

10) பூண்டு வெஜ் ரைஸ்


தேவையானவை:
சாதம் – ஒரு கப், 
பச்சை மிளகாய் – 6, 
பூண்டுப் பல் – 6, 
நறுக்கிய கேரட்,பீன்ஸ், பட்டாணி (கலந்தது)-ஒரு கப் ,
வெங்காயம் – 1 (நறுக்கிக் கொள்ளவும்), 
பட்டை, கிராம்பு, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவும். பச்சை மிள காய், பூண்டு இரண்டையும் விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்க ய்த்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் காய்கறிகளைச் சேர்த்து, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் சாதத்தை சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

11) இஞ்சித் தீயல்

தேவையானவை:
பொடியாக நறுக்கிய இஞ்சி, தேங்காய் துருவல் – தலா ஒரு கப்,
சின்ன வெங்காயம் – 10, 
பச்சை மிளகாய் – 2, 
மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தய த்தூள் – தலா கால் டீஸ்பூன், 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
வெல்லம் – சிறிய துண்டு, 
நல்லெண்ணெய் – அரை கப், 
கடுகு, உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் – 2, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு இஞ்சி, தேங் காய் துருவலை வதக்கி. கரகரப்பாக அரைத்துக் கொள் ளவும். புளியைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப் பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, வட்ட மாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள் சேர்க்கவும். அதில் புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
பின் அரைத்தஇஞ்சி-தேங்காய்விழுதை சேர்த்து, நன்கு சுருள கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொ டித்த வெல்லம் சேர்த்து, கிளறி இறக்கவும். ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து உபயோகிக்கலாம். சாதத்தில் போட்டுச் சாப்பிட சுவையாக இருக்கும்.

12) பூண்டு ஊறுகாய்


தேவையானவை:
உரித்த பூண்டு – ஒரு கப், 
எலுமிச்சைச் சாறு – கால் கப், 
தனியா, வெந்தயம் – தலா 2 டேபிள்ஸ்பூன், 
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன், 
மிளகாய்த்தூள் – 3 
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், 
நல்லெண்ணெய் – அரை கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் வெந்தயம், தனியா, சீரகத்தை வறு த்துப் பொடிக்கவும். கடாயில் கால் கப் எண்ணெய் விட் டு, உரித்த பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். பூண்டு வதங்கியவுடன், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, பொடித்த தூளை சேர்க்கவும். மீதமுள்ள கால் கப் எண் ணெயைச் சேர்த்து, சுருள வதக்கி, ஆறியவுடன் சுத்த மான பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

13) இஞ்சி சட்னி


தேவையானவை:
இஞ்சி – 10 கிராம், 
காய்ந்த மிளகாய் – 8, 
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, 
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாயை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, புளி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கறி வேப்பிலை சேர்த்து சட்னியுடன் கலக்கவும். விருப்ப ப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம். இது இட்லி, தோசை, வடை, பஜ்ஜிக்கு சுவையான ஜோடி!

14) இஞ்சி ரசம்


தேவையானவை:
இஞ்சி – 3 அங்குலத் துண்டு, 
பச்சை மிளகாய் – 2, 
எலுமிச்சம்பழம் – 1, 
வேக வைத்த துவரம்பருப்பு – கால் கப், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
மிளகுத்தூள், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், 
கடுகு-கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், நசுக் கிய இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும். ஒரு டம்ளர் அளவுக்கு வற்றியவுடன், அதில் வேக வைத்த துவரம் பருப்பை நீர்க்க கரைத்து சேர்த்து, உப்பு போட்டுக் கொ திக்க விடவும். பொங்கி வரும்போது மிளகுத்தூள், சீர கத்தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். மீண் டும் பொங்கியதும், இறக்கி எலுமிச்சம்பழம் பிழியவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். சளி, இருமல், அஜீரணம், பசியின்மை போன்ற குறை பாடுகளை போக்கும் இந்த ரசம்.

15) பூண்டு-இஞ்சி சூப்


தேவையானவை:
பூண்டுப் பல் – 10, 
இஞ்சி – ஒரு அங்குலம் நீளமுள்ள துண்டு, 
வெங்காயம் – 1, 
நெய், சோள மாவு – தலா ஒரு டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங் காயம் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் 2 கப் தண் ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அதனை இறக்கி, ஆற வைத்து. வடிகட்டவும். பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைக்கவும். வடி கட்டிய தண்ணீருடன் மேலும் 2 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்த விழுதுடன் சேர்க்கவும். சோள மாவைக் கரை த்து அதில் சேர்த்துக் கொதிக்க விடவும். மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மேலும் கொதி க்க விடவும். பிறகு இறக்கி, நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

16) பூண்டு ரசம்


தேவையானவை:
பூண்டுப் பல் – 6, 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
ரசப்பொடி- கால் டீஸ்பூன், 
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், 
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், 
கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்து வடிகட்டவும். கடாயில் புளிக் கரை சல், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து சூடாக்கவும். பூண்டைத் தட்டி, அதில் சேர்க் கவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் மிளகுத்தூள், சீரகத் தூள் சேர்த்து அடுப்பை ‘சிம்’மில் வைத்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்போது கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். இன் னொரு கடாயில் எண் ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்புதாளித்து, ரசத்தி ல் கொட்டி இறக்கவும்

17) இஞ்சிக் குழம்பு


தேவையானவை:
இஞ்சி – 3 அங்குலத் துண்டு, 
சின்ன வெங்காயம் – 20, 
புளி – ஒரு எலுமிச்சம்பழம் அளவு, 
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், 
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்துக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத் தை இரண்டிரண்டாக நறுக்கவும். கடாயில் நல்லெண் ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிள காய்த்தூள், தனியாத்தூள், பெருங்காயத்தூள் சேர்க்க வும். அதில் புளிக்கரைசல், உப்புசேர்த்து கொதிக்க விட வும். கெட்டியாக வரும்போது ஒரு டீஸ்பூன் நல்லெ ண்ணெய் விட்டு இறக்கவும். இந்தக் குழம்பு, சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

18) பூண்டுக் குழம்பு


தேவையானவை:
உரித்த பூண்டு – கால் கப், 
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், 
தனியாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன், 
மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, 
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், 
சின்ன வெங்காயம் – 5, 
கறிவேப்பிலை – சிறிதளவு, 
நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, பூண்டை சேர்த்து வதக்கவும். இதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்க்கவும். புளி யைக் கரைத்து அதில் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். விருப்பப்பட்டால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.

19) இஞ்சி டீ


தேவையானவை:
இஞ்சி – சிறிய துண்டு, 
டீத்தூள் – 2 டீஸ்பூன், 
தேன் – 2 டீஸ்பூன், 
தண்ணீர் – 2 கப்.
செய்முறை:
2 கப் தண்ணீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கொஞ்சம் வற்றியவுடன், டீத்தூள் சேர்த்து கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து, பாத்திரத் தை மூடவும். 3 நிமிடம் கழித்து, வடிகட்டி, தேன் சேர்த் து கலக்கிக் குடிக்கவும். இதற்கு பால் தேவையில்லை. புத்துணர்ச்சி தரும் சுவையான டீ இது!

20) திடீர் பூண்டு மிளகாய்ப்பொடி


தேவையானவை:
பூண்டுப் பல் – 5, 
மிளகாய்த்தூள் – 3 டேபிள்ஸ்பூன், 
நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டை தோலுடன்நசுக்கி, மிளகாய்த்தூளுடன்சேர்த் துக்கலக்கவும். இதனுடன் உப்புசேர்த்தால், திடீர்பூண்டு மிளகாய்பொடி ரெடி! நல்லெண்ணெய் விட்டுக் கலந்து சூடான இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

21) இஞ்சித் தொக்கு


தேவையானவை:
இஞ்சி – கால் கிலோ, 
பூண்டுப் பல் – 20, 
காய்ந்த மிளகாய் (வறுத்து அரைக்க) – 15, 
புளி – எலுமிச்சம்பழம் அளவு, 
வெல்லம் – சிறு துண்டு, 
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், 
வெந்தயத்தூள் – ஒரு டீஸ்பூன், 
கடுகு – கால் டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் (தாளிக்க) – 2, 
கறிவேப்பிலை. நல்லெண்ணெய் – கால் கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியைசுத்தம்செய்துபொடியாநறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு இஞ்சி, பூண்டு, காய்ந்தமிளகாயை நன்கு வறுக்கவும். அதனுடன் புளி, உப்பு சேர்த்து மிக் ஸியில் நன்கு அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட் டு கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். இத்துடன் பெருங்காயத்தூள், வெந்தயத்தூள், வெல்லம் சேர்க்க வும். எண்ணெய் மிதந்து வரும்வரை அடுப்பை ‘சிம்’ மில் வைத்து நன்கு வதக்கவும். ஆறியவுடன், எடுத்து பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இது, ஈரம் படாமல் இருக்கும் வரை கெட்டுப் போகாது! தயிர் சாத த்துக்கு சிறந்த காம்பினேஷன்

22) பூண்டு பால் கஞ்சி


தேவையானவை:
புழுங்கல் அரிசி – ஒரு கப், 
பூண்டுப் பல் – 12, 
வெந்தயம், சீரகம் – தலா கால் டீஸ்பூன், 
சுக்கு, சித்தரத்தை – ஒரு சிறிய துண்டு, 
திப்பிலி – சிறிதளவு, 
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி குக்கரில் போடவும். ஒரு கப் அரிசிக்கு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம், உப்பு சேர்க்கவும். சுக்கு, சித்தரத்தை, திப்பிலியை ஒரு துணியில் கட்டி, குக்கரில் போடவும். கஞ்சி வெந்த பின்பு துணியை வெ ளியே எடுத்து விடவும். வெந்த கஞ்சியில் தேவைக் கேற்ப பால் சேர்த்துப் பரிமாறலாம். மழைக்காலத்துக் கேற்ற ஆரோக்கியமான கஞ்சி இது. சளி, இருமலைக் கட்டுப்படுத்தும்.

23) இஞ்சி முரப்பா


தேவையானவை:
இஞ்சி – கால் கிலோ, 
வெல்லம் – கால் கிலோ.
செய்முறை:
இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டி, கொதிக்க விடவும். இதனுடன் தெளிந்த இஞ்சிச் சாற்றை சேர்த்து, தொடர்ந்து கிளறவும். ஒட்டாமல், அல்வா பதத்துக்கு வரும்போது இறக்கித் தட்டில் கொ ட்டி, ஆற விட்டு வில்லைகளாகப் போடவும். வெல் லத்துக்குப் பதில் சர்க்கரையிலும் செய்யலாம்.

24) பூண்டு-உளுந்து சாதம்


தேவையானவை:
புழுங்கல் அரிசி – ஒரு கப், 
கறுப்பு முழு உளுந்து – அரை கப், 
சீரகம் – ஒரு டீஸ்பூன், 
பூண்டுப் பல் – 10, 
தேங்காய் துருவல் – கால் கப், 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் கறுப்பு உளுந்தை வாசனை வரும் வரை வறுக்கவும். உளுந்தை தோல் நீங்கிக் கழுவி, அரிசியுடன் சேர்த்து குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றவும். இதனுடன் உப்பு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். முதல் விசில் வந்ததும், அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடம் வேக வைத்தால், உளுந்து சாதம் ரெடி! இதற்குத் தொட்டுக் கொள்ள எள்ளுத் துவையல் நல்ல காம்பினேஷன். இது இடுப்பு எலும்பை பலப்படுத்தும். வளரும் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

25) தேன் இஞ்சி

தேவையானவை:
இஞ்சித் துண்டுகள் – ஒரு கப், 
தேன் – கால் கப்.
செய்முறை:
இஞ்சியை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக்கி ஆவியி ல் வேக வைக்கவும். பிறகு ஈரம் போகும் வரை இஞ்சி யை ஆற விட்டு, தேனில் போட்டு வைக்கவும். குழந் தைகளுக்கு இதனை தினமும் ஒரு துண்டு கொடுத்து வர… பசியின்மை, அஜீரணம் ஏற்படாது. ஈரத்துடன் இஞ்சி யை தேனில் போடக்கூடாது.

26) பூண்டு-மஷ்ரூம் கிரேவி

தேவையானவை:
பட்டன் காளான் – 100 கிராம், 
வெங்காயம், தக்காளி – தலா 1, 
பூண்டுப் பல் – 10, 
சோம்பு – கால் டீஸ்பூன், 
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், 
தனியாத்தூள் – ஒரு டீஸ்பூன், 
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, 
கொத்தமல்லி – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு தாளித்து, நறுக் கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்ச ள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து மீண் டும் வதக்கவும். இதனுடன் சுத்தம் செய்த காளானை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிறிது வெந்தவுடன், நசுக்கிய பூண்டைச் சேர்க்கவும். பிறகு, உப்பு சேர்க்கவும். கிரேவி பதத்துக்கு வந்ததும், நறுக் கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். இது, சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் ரைஸுக்கு சிறந்த சைட் டிஷ்.

27) ஜிஞ்சர் ஃப்ரூட் பஞ்ச்


தேவையானவை:
இஞ்சி – 8 அங்குலத் துண்டு, 
சர்க்கரை, எலுமிச்சைச் சாறு – தலா ஒரு கப், 
ஆரஞ்சு சாறு – 2 கப், 
இஞ்சி துருவல் – சிறிதளவு, 
குளிர்ந்த நீர் – 3 கப்.
செய்முறை:
இஞ்சியைத் தட்டி, சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண் ணீரில்கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன், அடுப்பை ‘சிம்’மில் வைத்து, மூடாமல் மேலும் 15 நிமிடம் கொ திக்க விடவும். பிறகு இறக்கி வடிகட்டி, ஆறவிடவும். அதில் எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சு சாறு கலந்து குளிர் ந்த நீர் சேர்த்துக் கலக்கி டம்ளரில் ஊற்றி, மேலாக இஞ்சி துருவல் போட்டுக் கொடுக்கவும்.

28) பூண்டு-கடலைப்பருப்பு துவையல்


தேவையானவை:
கடலைப்பருப்பு – கால் கப், 
காய்ந்த மிளகாய் – 6, 
பூண்டுப் பல் – 5, 
புளி – ஒரு சிறு நெல்லிகாய் அளவு, 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெறும் கடாயில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்கவும். இதனை ஆற வைத் து மிக்ஸியில் போட்டு புளி, உப்பு சேர்த்து அரைக்க வும். தயிர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள ஏற்ற துவையல் இது.

29) ஜிஞ்சர் வெஜ் ஃப்ரை


தேவையானவை:
துருவிய இஞ்சி – 2 டேபிள்ஸ்பூன், 
பட்டாணி – கால் கப், 
கேரட் – 1 (பொடியாக நறுக்கவும்), 
வெங்காயம் – 1, 
புருக்கோலி பூ – 1, 
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், 
எண்ணெய் – 2 டீஸ்பூன், 
உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
சோள மாவுடன் உப்பு, துருவிய இஞ்சி, ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவையில் கேரட், பட்டாணி, உதிர்த்த புருக் கோலி பூ சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவு ம். இதனுடன் காய்கறிக் கலவையைச் சேர்த்துக் கிளற வும். மிதமான தீயில் மூடி வைத்து வேக விடவும். வாசனை வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

30) பூண்டு-காய்கறி சூப்


தேவையானவை:
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு (கலந்தது) – ஒரு கப், 
பூண்டுப் பல் – 6, 
மிளகு, சீரகத்தூள், வெண்ணெய் – தலா கால் டீஸ்பூன். 
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை 2 கப் தண்ணீ ரில் வேக விடவும். வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 3-4 நிமிட ங்கள் கழித்து, அடுப்பிலிருந்து இறக்கி வெண் ணெய் சேர்த்துப் பரிமாறவும்.