Friday, March 2, 2012

காய்கறி மக்காச் சோள சூப்

Posted On March 2,2012,By Muthukumar
காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தையாகட்டும், நோயிலிருந்து மீண்ட சத்து குறைபாடுள்ள முதியவராகட்டும், அலைச்சலால் சோர்ந்து விடும் குடும்பத்தலைவராகட் டும், ஓயாத உடல் உழைப்பால் சத்து இழக்கும் இல்லத்தரசியாகட்டும், அனைவருக்கும் தேவை இயற்கை காய்கறிகளில் உள்ள வைட்டமின்களும், தாதுப்பொருட்களும். இதை உங்களுக்கு எளிதாகத் தரவல்லது, காய்கறி மக்காச்சோள சூப்.

தேவையானவை

பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காரட் - 2
நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
துருவிய கோஸ் - 1/2 கப்
பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
மக்காச்சோள முத்துக்கள் - 1/2 கப்
ஜவ்வரிசி மாவு - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

செய்முறை

* வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும், சிறிது எண்ணெயில் வதக்கி, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
* பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன், மக்காச்சோளம், வெங்காய விழுது சேர்த்து 1/2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆனால் குழைய விடக்கூடாது.
* ஜவ்வரிசி மாவை 2 கப் தண்ணீரில் கலந்து கொழகொழவென கண்ணாடி பதத்திற்கு வரும்வரை கஞ்சியாக காய்ச்சவும்.
* அதனுடன் சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
* சூப் சற்று திக்காக இருக்க வேண்டுமானால், 1 டீஸ்பூன் மக்காச் சோள மாவை தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் கலந்து கொதிக்க விடவும்.
* சுவையான காய்கறி மக்காச்சோள சூப் தயார்.

No comments:

Post a Comment