நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ருசியால் கட்டிப்போடும் சைடு டிஷ்களில் குருமாவும் ஒன்று. இந்த வாரம் நாம் நீலகிரி பாணியில் மட்டன் குருமா செய்யக் கற்றுக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம் தக்காளி - 100 கிராம் (நறுக்கியது) பட்டை - 2 கிராம் லவங்கம் - 2 கிராம், ஏலக்காய் - 2 கிராம் பச்சை மிளகாய் - 10 கிராம் சோம்பு - 5 கிராம் பூண்டு - 25 கிராம், இஞ்சி - 25 கிராம் மிளகாய்த்தூள் - 10 கிராம் தனியா - 15 கிராம் தேங்காய் - 1/2 மூடி கொத்தமல்லி - ஒரு கட்டு எண்ணெய் - 50 மில்லி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை விழுதாக்கவும்.
* தேங்காய், பச்சைமிளகாய், கொத்தமல்லி இவற்றை தனியே அரைக்கவும்,
* மட்டனை சுத்தம் செய்து நறுக்கி, தயிரில் ஊற வைக்கவும்.
* கடாயில் எண்ணெயைக் காய வைத்து, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காய விழுதை வதக்கவும். தக்காளியை வதக்கி ஏனைய மசாலா பொருட்களை சேர்க்கவும். நன்கு `பிரை` செய்யவும்.
* மட்டனை சேர்த்து அதனுடன் அரைத்த தேங்காய் கலவை விழுதைச் சேர்க்கவும். போதுமான உப்பு சேர்த்து குறைந்த தீயில் வேக வைக்கவும்.
* மட்டனை இறக்குவதற்கு முன் மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, கறி மசாலா தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கிளறவும்.
* நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி அலங்கரிக்கவும்.
* சாதம், தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்த குருமா சுவையாக இருக்கும். இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக சிக்கன், மீன், நண்டு இவற்றை பயன்படுத்தியும் குருமா செய்யலாம்.
|
Sunday, March 18, 2012
மட்டன் நீலகிரி குருமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment