Tuesday, December 30, 2014

மஷ்ரூம் பிரியாணியும் வெண்டைக்காய் தயிர் பச்சடியும்

Posted By Muthukumar,On December 30,2014
மஷ்ரூம் பிரியாணி:
MUSHROOM BIRIYANI
தேவையான மொருட்கள்:
பாசுமதி அரிசி-3 கப்; பிரிப்ஜி இலை-2; கிராம்பு-5; பட்ட-3; ஏலக்காய்-6; ஆளி விதை-3; தண்ணீர்-6 கப்; வெங்காயம் -4; எண்ணெய்-4 டேபிள் ஸ்பூன்.
மஷ்ரூம் க்ரேவிக்குத் தேவையான பொருட்கள்:
மஷ்ரூம்-500 கிராம்; இஞ்சி-பூண்டு விழுது-1 டேபீள் ஸ்பூன்; தயிர் நன்கு அடித்துக் கலக்கப்பட்டது-1 கப்; மிளகாய்த் தூள்-1 டீ ஸ்பூன்; கருஞ்சீரகம்-2 டீ ஸ்பூன்; கிராம்பு-3; மிளகு-5; லவங்கப் பட்டை-2; ஏலக்காய்-3; பிரிஞ்சி இலை-2; ஆளி விதை-3; நெய்-3 டேபிள் ஸ்பூன்; உப்பு-ருசிக்கேற்ப.
மேலே தூவிக் கலக்க:
வெதுவெதுப்பான பாலில் கரைக்கப்பட்ட கேசரி பௌடர்; புதினா இலைகள்-1.2 கப்; நெய்-1 டேபிள் ஸ்பூன்; வதக்கப்பட்ட 3 பெரிய வெங்காய துண்டுகள்.
செய்முறை:
பாசுமதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும். பின்பு அதிக தண்ணீரை வடிகட்டி தனியே வைக்கவும். ஒரு பெர்ய வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி அதில் தாளிக்க வேண்டிய பொருட்களைப் போட்டு வதக்கி அரிசியையும் போட்டு கலக்கி சிறிது நேரம் வதக்கவும். பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து 3/4 பதத்துக்கு வேகவிட்டு தனியே எடுத்து வைக்கவும். பின்னர் அரிந்துவைத்த வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வறுக்கவும். மஷ்ரூம்களை கழுவி ஒரு பக்கம் தனியே வைக்கவும். வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி, சூடாக்கி, ஜீரகத்தையும் தாளிக்கும் மசாலா பொருள்களையும் சேர்த்து வதக்கவும். இப்போது மஷ்ரூம்களைச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி மிளகாய்த்தூளைப் போட்டு நன்கு கலந்து வதக்கவும். வெங்காயத்தில் 3/4 பங்கு சேர்த்து வதக்கவும். இப்போது அடித்துவைகக்ப்பட்டுள்ள தயிரை மஷ்ரூமுடன் கலந்து லேசான தீயில் 5 நிமிடம் வதக்கவும். . ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கரண்டி மஷ்ரூம் மசாலாவைப் போட்டு அதன் மீது பாசுமதி சாதத்தை கொஞ்சமாக மஷ்ரூம் மசாலாவின் மீது நிரப்பவும். அதன்மீது கேசரி பௌடர் கலந்த பாலைத் தெளித்து அதன் மீது புதினா மற்றும் வதக்கிய வெங்காய லேயர்களைப் பரப்பவும். மீண்டும் ஒரு கரண்டி மஷ்ரூம் மசாலாவைப் போட்டு, அதன் மீது பாசுமதி சாதத்தைப் பரப்பி மறுபடியும் கேசரி கலந்த பாலையும் , புதினா மற்றும் வெங்காய லேயரையும் சேர்த்து வாணலியை மூடி லேசான தீயில் சிறிது நேரம் வைக்கவும். வெண்டைக்காய்த் தயிர் பச்சடியுடன் பறிமாற, சுவையாக இருக்கும்.
* * * * *.
வெண்டைக்காய்த் தயிர் பச்சடி:
LADIES FINGER RAITA
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்கள்-15; பச்சை மிளகாய்-2; எண்ணெய்-2 ஸ்பூன்; தயிர்-1 கப்; உப்பு-ருசிக்கேற்ப;
தாளித்து மேலே தூவிக் கலக்க:
எண்ணெய்-1 ஸ்பூன்; ஜீரகம்-1/2 டீ ஸ்பூன்; கடுகு -1/2 ஸ்பூன்; உளுத்தம் பருப்பு-1 ஸ்பூன்; காய்ந்த மிளகாய்-1; கறிவேப்பிலை -ஒரு கொத்து.
வெண்டக்காய்களை பாதிப் பாதியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரிந்து வைத்துள்ள வெண்டைக்காய் மற்றும் பச்சை மிளகாயைப் போட்டு வெண்டைக்காய் முறுகி வதங்கும் வரை வதக்கவும். பிறகு தனியாக ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் கடுகு போட்டு பொறிய விட்டு, பின் உளுதம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். ஒரு வாணலியில் தயிரை ஊற்றி சூடாக்கி உப்பு, வெண்டைக்காய் சேர்த்துக் கலக்கி தாளித்துவைத்துள்ள பொருட்களைச் சேர்த்தால், வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.

தால் கிச்சடி

Posted By Muthukumar,On December 30,2014
DAL KICHADI
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி-1/2 கப்; பாசிப் பருப்பு-1/4 கப்; மிக்ஸட் காய்கறிகள்[ கேரட், பட்டாணி, பீன்ஸ், காலி ஃப்ளவர்]-1 கப்; நெய்-1 டேபிள் ஸ்பூன்; கரம் மசலா-1/4 டீ ஸ்பூன்; பச்சை மிளகாய்-1; சீரகத் தூள்-1/4 டீ ஸ்பூன்; உப்பு-தேவையான அளவு.
எப்படி செய்வது?:
அரிசி பருப்பைக் கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் நெய் சேர்த்து, பச்சை மிளகாய் தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு, 1 நிமிடம் வதக்கவும். உப்பு, சீரகத்தூள் சேர்க்கவும். அத்துடன் 3 கப் தண்ணீர் சேர்த்து, அரிசி, பருப்பை சேர்த்து, கரம் மசாலா சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும்வரை வேகவிடவும். குழைய வேகவைத்து இறக்கவும். தேவைப்பட்டால், சிறிது நெய் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.

காய்கறி-பழ சாதம்

Posted By Muthukumar,On Dec 30,2014
காய்கறி-பழ சாதம்:
VEGETABLE FRUIT RICE
தேவை:
உதிர் உதிராக வடித்த பாசுமதி அரிசி சாதம்-4 தம்ளர்; முளை கட்டிய தானியங்கள், துருவிய காய்கறிகள்- தலா 2 தம்ளர்; நறுக்கிய ஆப்பிள், அன்னாசிப் பழம், மாம்பழம் திராட்சை சேர்ந்த பழக் கலவை-2 தம்ளர்; பாதாம், முந்திரி, காய்ந்த திராட்சை கலவை -கால் தம்ளர்; நெய்-4 தேக்கரணடி; மசாலாப் பொடி-2 தேக்கரண்டி; மிளகுத் தூள்-1 தேக்கரண்டி; உப்பு.
செய்முறை:
முந்திரி, திராட்சை, பாதாமை நெய்யில் லேசாக வறுத்து சாதத்தில் சேர்க்கவும். இதில் உப்பு, மிளகுப் பொடி, மசாலாப் பொடி, பழக் கலவையைக் கலக்கவும். உப்பும் புளிப்பும் தித்திப்புமாக மணக்கும் இந்த சாதம், விளையாடும் குழந்தைகளுக்கு ஏற்றது. வேகவைத்த தானியங்களும், நறுக்கிப் போடட் பழங்களும், வண்ண வண்ண காய்கறித் துருவல்களுமாக பார்க்க அழகாகவும் சாப்பிட அறுசுவையாகவும் இருக்கும்.

அசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்?




இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட் டால்,
உடம்பு வளரும், மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது.
undefined
இவை இரண்டில் எது சரி?
உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி! அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து.
நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக்
காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்  சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்ற லைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை.
ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச்சாப்பிடவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்றுவரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ‘ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு.
அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒருகுடும்பம் வாரத்துக்கு ஒரு நாள்
அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது.
அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் – குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான்.
எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது! அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமை யாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத்தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்? மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்கவேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம்.
இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப் பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள  பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர் களே…
அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்… நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது.
சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.
உதாரணமாக
கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன்  ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக்கோழி இன் றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டது போல் மிடுக்காக இருக்கும்.  அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.  தமிழ் மருத்துவம்.
தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியை த்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சியின், பின்னணி குறித்து, ‘கூவாத கோ ழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
‘பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும்.  ‘ரோக்ஸார்சோன்’ (Roxarsone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படை தல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளு ம் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன! என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது…

முள்ளங்கி பகோடா

Posted by  Muthukumar On Dec 30,2014
RADISH BAKODA
தேவையான பொருட்கள்:
முள்ளங்கித் துருவல்(உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்)- 1 கப்; கடலைப் பருப்பு-1 கப்; அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்; துருவிய பனீர்- 1/4 கப்; பொடியாக நறுக்கிய வெங்காயம்-1 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2 கரம் மசாலாத் தூள்-2 சிட்டிகை; சோம்புத் தூள்-1/2 ஸ்பூன்; எண்ணெய்- பொறிப்பதற்கு; உப்பு-தேவைக்கேற்ப.
செய்முறை:
கடலை பருப்பை 2 மணி நேஅர்ம் ஊறவைத்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் அத்துடன் சேர்த்துப் பிசையவும். எண்ணெயைக் காய வைத்து , சின்ன சின்னதாகக் கிள்ளிப் போட்டுப் பொறித்தெடுக்கவும். தயிர் அல்லது தக்காளி சாஸுடன் பறிமாறவும்.
2. முள்ளங்கி பரோட்டா:
RADISH PAROTA
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு-1/4 கப்; முள்ளங்கித் துருவல்( உப்பு சேர்த்து, தண்ணீரை வடித்து வைத்துக்கொள்ளவும்); பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை ( நறுக்கியதும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.)- சிறிது; மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன்; எண்ணெய்-1/4 ஸ்பூன்; உப்பு- தேவைக்கேற்ப; கரம் மசாலத்தூள்-2 சிட்டிகை; பொடியாக நறுக்கிய பச்சை மிளகய்-காரத்துக்கேற்ப; பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/4 கப்; ஓமம்-2 சிட்டிகை; எண்ணெய்-தேவைக்கேற்ப.
செய்முறை:
கடைசியாகக் கொடுத்துள்ள எண்ணெய் தவிர்த்து மற்ற எல்லாப் பொருட்களையும் கோதுமை ,மாவுடன் சேர்த்துப் பிசையவும். தேவையானால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துப் பிசையவும். சப்பாத்திக்குத் தேவையான அளவு உருண்டைகளாக உருட்டி, கனமான சப்பாத்திகளாக இட்டு, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுத்து சூடாகப் பறிமாறவும்.
3. முள்ளங்கி கீரை மசலா:
RADISH LEAVES
தேவையான பொருட்கள்;
கீரையுடன் இருக்கும் முள்ளங்கி- பெரிதாக -2; உப்புத் தண்ணிரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை-1 கப்; எண்ணெய், உப்பு-தேவைக்கேற்ப; பெருங்காயம்-1/4 ஸ்பூன்; கடுகு-1 ஸ்பூன்; ஜீரகம்- 1/4 ஸ்பூன்; மிளகாய்த் தூள்- 1/2 ஸ்பூன்; மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்; சர்கக்ரை-1/2 ஸ்பூன்; ஆம்சூர் தூள்-1 ஸ்பூன் அல்லது எலுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்; கரம் மசாலா-1
செய்முறை:
முள்ளங்கியை சின்ன துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அத்ன் கீரைத்துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேகவைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ்சமாக் தண்ணீர் விட்டு வேக விடவும். 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். மூள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பறிமாறவும்.

வெஜிடபிள் ப்ரைடு ரைஸ்



இப்ப‍ நாம பார்க்க‍ப்போவது எளிமையான முறையில் தயாரிக்கும் வகையில்
வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் சமைச்சு சுவைச்சு சுவைக்க கொடுப்போமா? 

தேவையான பொருட்கள்:
வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப்
பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல்
வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2
பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு
பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
மிளகுத்தூள் – தேவையான அளவு
வினிகர் – 3/4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய்/ஆலிவ் எண்ணெய்–2 மேசைக் கரண்டி

செய்முறை:
சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை 2 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் வெங்காயத்தாளில் வெள்ளைப் பகுதியை மட்டும்
சேர்த்து அதிக தீயில் 1 நிமிடம் வரை வதக்கவும்.
பின் வேக வைத்து வைத்துள்ள காய்கறிகள் சேர்த்து அதிகமான தீயில் 3 – 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.
உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

வேக வைத்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும். கடாயை சுற்றிலும் சாதத்தை பரப்பி, மித மான சூட்டில் அப்படியே ஒரு நிமிடம் வரை வைக் கவும்.
மீண்டும் சாதத்தை நன்கு கலக்கி, கடாயை சுற்றிலும் சாதத்தை பரப்பி, மிதமான சூட்டில் அப்படியே ஒரு நிமிடம் வரை வைக்கவும்.

இறுதியாக வினிகர் சேர்த்து 30 வினாடிகள் வரை தொடர்ந்து வதக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு, வெங்காயத்தாளின் நறுக் கியதாள் பகுதியைசேர்த்து அலங்கரித்து பரிமாறவும்…

Tuesday, December 9, 2014

கறிவேப்பிலை பொடி

Posted By Muthukumar On December 10,2014,

தேவையானப்பொருட்கள்: 

கறிவேப்பிலை - 1 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு பற்கள் (சிறிய அளவு)- 2
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, தனியா, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு, தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.  கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுக்கவும்.  சற்று ஆறியவுடன் எல்லவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, உப்பையும் சேர்த்து சற்று கொரகொரப்பாகப் பொடித்து எடுக்கவும்.
இதை சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய் அல்லது நல்லெண்ணை விட்டு பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். காய்கறி பொரியல் செய்யும் பொழுது கடைசியில் சிறிது பொடியைத்தூவினால் நல்ல வாசனையாக இருக்கும்.

வெஜிடபிள் ஸ்ப்ரிங் ரோல்:

Posted By Muthukumar,On December 10,2014,
TOMATO
தேவையான பொருட்கள்:

பெரிய கெட்டியான தக்காளிப் பழம்-6; கேரட் துருவியது-1 டேபிள் ஸ்பூன்; வெங்காயம் துருவியது- 1 டேபிள் ஸ்பூன்; பீட்ரூட் துருவியது-1/2 டேபிள் ஸ்பூன்; பீன்ஸ் துருவியது-1 டேபிள் ஸ்பூன்; எலுமிச்சம் பழம்-1 உப்பு, மிளகுத் தூள்-தேவைக்கு;கொத்தமல்லி தழை, கருவேப்பிலை-சிறிது.
]செய்முறை:

தக்காளியை மேற்புறம் மட்டும் வட்டமாக நறுக்கி எடுத்து உள்ளே உள்ள சதையை நைஸாக எடுத்துவிடவும். நறுக்கிய மேல்பாகத்தை தனியே வைக்கவும். இப்பொழுது தக்காளிப் பழம் குடுவைபோல இருக்கும். அதற்குள் துருவிய காய்கறிகள் அனைத்தையும் நன்றாக உப்பு, மிளகுத்தூள் போட்டு, கலந்து உள்ளே ஸ்டப் செய்யவும். மேலே நைஸாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையைத் தூவி, எலுமிச்சை சாறை லேசாக மேலே பிழிந்து, நறுக்கி தனியே வைத்துள்ள தக்காளியின் மேல் பாகத்தை வைத்து மூடி பறிமாறவும்.

Tuesday, December 2, 2014

செட்டிநாடு வஜ்ஜிரமீன் குழம்பு

Posted By Muthukumar,on December 2,2014
SEER FISH CURRY
தேவையான பொருட்கள்:
வஜ்ஜிர மீன்-1கிலோ; சினன் வெங்காயம் -100 கிராம்; பூண்டு-25 பல்; கறிவேப்பிலை- 2 கொத்து; சோம்பு-1 டீ ஸ்பூன்; சீரகம் -1/2 டீ ஸ்பூன்; வெந்தயம்-1 டீ ஸ்பூன்; தக்காளி-3; புளி-கைப்பிடியளவு; மஞ்சள் பொடி-1 ஸ்பூன்; எண்ணெய்-5 டேபிள் ஸ்பூன்; வர மிளகாய்-10; சாம்பார் பொடி-3 டேபிள் ஸ்பூன்; உப்பு-தேவையான அளவு;
செய்யும் முறை:
முதலில் மீனை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக்கி உப்பு போட்டு பிசறி நன்கு கழுவி வைக்கவேண்டும். வர மிளகாய், சோம்பு, பூண்டு மூன்றையும் 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து,நைஸாக விழுதாக அரைத்துவைக்கவேண்டும். வெங்காயத்தில் இரண்டை எடுத்து வைத்துவிட்டு, மற்றதை தோலுரித்து இரண்டாகவும் தக்காளியை நான்காகவும் நறுக்கவும்.புளியை 3 டம்ளர் தண்ணீரில் கரைத்துவைக்கவேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சோம்பு, சீரகம் மற்றும் வெந்தயம் போட்டு வாசனை வந்ததும், வெங்காயம் கறிவேப்பிலை போட்டு 3 ந்மிடம் வதக்கவேண்டும். பின் தக்காளி, 1 டேபிள் ஸ்பூன் உப்பு, சாம்பார் பொடி , மஞ்சள் பொடி மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வதக்கவேண்டும். இப்போது புளிக் கரைசலை ஊற்றி சிறிது கெட்டியாகும்வரை கொதிக்கவைக்கவேண்டும்.
பின் மீன் துண்டங்களைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவைக்கவேண்டும். இறக்கியபின், சீரகத்தை நன்றாகத் தட்டி பிறகு இரண்டு வெங்காயத்தையும் வைத்து லேசாகத் தட்டி குழம்பில் போட்டு மூடி 10 நிமிடம் கழித்து திறந்து லேசாக கிண்டிவிட வேண்டும்.
சுவையான வஜ்ஜிர மீன் குழம்பு ரெடி.