Friday, January 30, 2015

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் கடைப்பிடிக்க வேண்டிய‌ நடைமுறைகள்



அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே
வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
பசிக்கும்போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப் பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  
வெந்தயம் உஷ்ணத்தைக் குறை க்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக் கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவவேண்டும். காலில் ஈரம் உலர்வதற்குமுன்பே உணவு உண்ணத்தொடங்க வேண்டும். உணவு உண்ணும்போது பேசக்கூடாது, படிக்கக் கூடாது, இடது கையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்க க்கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டுவாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந் துகொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணு ம்போது உண்பதில் கவனமாக இரு க்கவேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக்கூடாது. சாப்பிடும்பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்றுகொ ண்டு சாப்பிக்கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண் ணக்கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக்கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண் டும், படுத்துக் கொண்டும் உண் ணக்கூடாது. இலையைத்துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல் லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக்கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடை பிடிப்பது சிறப்பைத்தரும்.

மந்தாரைத் துவையல்

Posted By Muthukumar, On Jan 30,2015
purpurea
தேவையான பொருட்கள்:
மந்தாரை இலை- 100 கிராம்; மந்தாரைப் பூ-100 கிராம்; கொத்தமல்லி- ஒரு கைப்பிடியளவு; நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப; உளுத்தம் பருப்பு-2 மேஜைக் கரண்டி; காய்ந்த மிளகாய்-4; இஞ்சி- சிறிதளவு; புளி- சிறிதளவு; கடுகு- சிறிதளவு; ஜீரகம்- 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை- சிறிதளவு; உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
ஆய்ந்து வைத்திருக்கும் மந்தாரை இலை, பூ மற்றும் கொத்தமல்லியை எடுத்து ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வதக்கவும்.இன்னொரு கடாயில் உளுத்தம்பருப்பைப் போட்டு அது பொன் நிறமாகும் வரை வறுக்கவும்.பிறகு காய்ந்த மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். கடைசியாக கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, தயார் செய்து வைத்திருக்கும் கலவையை சேர்த்தால், நலம் தரும் மந்தாரைத் துவையல் தயார்.
பலன்கள்:
மந்தாரை இலையில் உள்ள நார்ச் சத்து, மற்றும், கெரட்டின், ஆஸ்த்மா, மலச் சிக்கல், ரத்த மூலம், சீதபேதி, நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளைத் தீர்க்கும். உடல் எடயைக் குறைக்க விரும்புபவர்களும் உடலை சீரான எடையில் வத்திருக்க விரும்புபவர்களும் மந்தாரை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ஆட்டு ஈரல் மிளகுத்தூள் வறுவல்



ஆட்டு ஈரல் இது மென்மையாக இருப்பதால் சிறு குழந்தைகளும்
விரும்பி சாப்பிடுவர்.  நல்லெண்ணெயில் வேக வைப்பதால் கூடுதல் சத்து கிடைக்கும். இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான சுவையான உணவு
தேவையான பொருட்கள்:
ஈரல் – 500 கிராம்

சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 4
மிளகுத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
நல்லெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி ஆட்டு ஈரலை போடவும்,
அதனுடன் பொடியாக அறிந்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிள றவும். அதன்பின் அடுப்பை பற்ற வைக்கவேண்டும்.
அப்பொழுது சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். அப்பொழுதுதான் ஈரலானது இறுகலாக இல்லாமல் மென்மை யாக இருக்கும்.
ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளறவும். பின்னர் வரமிளகாய் கிள்ளிப்போட்டு மிளகு தூள் தூவி லேசாக தண்ணீர் விடவும். மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
அவ்வப்போது கரண்டி போட்டு கிளறவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணை த்து விடவும்.
அதன் மீது கொத்தமல்லி தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் தயார்.

நாட்டுக்கோழி தெரக்கல்



நாட்டுக்கோழி தெரக்கல்
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி –½கிலோ
சின்ன வெங்காயம் – ¼கிலோ
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு –தேவையான அளவு
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை –சிறிது
தாளிக்க:
பட்டை – 2
சோம்பு –½தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு –½தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய் – 1 கோப்பை
சோம்பு – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
முந்திரிபருப்பு – 2 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி

செய்முறை:
=> அரைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருட்களை நன்றாக அரைத்து  வைத்துக்கொள்ள வேண்டும்.
=> கறியை நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
=> வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கிக் வைத்துக்கொள்ள வேண்டும்.
சட்டியில் எண்ணெய்ஊற்றி பட்டை, சோம்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொறிய விடவும். பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதையும்சேர்த்து வதக்கி பின் மிளகாய்த் தூள், மல் லித்தூள், மஞ்சள்தூள், அரைத்த மசாலா மற்றும் தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீ ர் ஊற்றி வேகவிடவும். வெந்தவுடன் கொத்தமல்லி இ லையை சேர்த்து இறக்கவும். சுவையான நாட்டுக்கோ ழி தெரக்கல் தயார்.

முடக்கத்தான் ரசம் – செய்வது எப்படி?:

Posted By Muthukumar,On Jan30,2015
cardiospermum
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை-100 கிராம்; மிளகு-1/2 தேக்கரண்டி; சீரகம்-1/2 தேகக்ரண்டி; பூண்டு-10 பற்கள்; தக்காளி-2 சிறிய வெங்காயம்–3; கொத்தமல்லி-சிறிதளவு; மஞ்சள்தூள்-1 சிட்டிகை; உப்பு-தேவையான அலவு; நல்லெண்ணெய்-தேவையான அளவு; தண்ணீர்- 500 மி.லி.

செய்முறை:
முடக்கத்தான் இலைகள், வெங்காயம், தக்காளி இவையனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் மிளகு சீரகம், பூண்டு கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு இதையெல்லாம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு, முதலில் நறுக்கி வைத்த பொருட்களை வாணலியில் போட்டு லேசாக வதக்கி, தண்ணீருடன், மஞ்சள்தூள் போட்டு, அது சுண்டிவரும் வரை காத்திருந்தால், முடக்கத்தான் ரசம் தயார்.

பலன்கள்:
வாதப் பிடிப்பு, முடக்குவாதம், உள்ளிட்ட வாத நோய்களுக்கும், வாய்வுப் பிரச்சினை, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு அளிக்கும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கு இது உதவுகிறது, மேலும் முதுகுத் தண்டு வடத்தில் தேய்மானத்தினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Wednesday, January 7, 2015

பால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்!

 

 
காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ யோ, காபியோ குடித் தால் தான். சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம்.
குழந்தைகளுக்கும், முதியவர்களு க்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிகமுக்கியமாகிப்போன பாலை, நாம் சரியான முறையில்
காய்ச்சுகிறோமா.? அப்பா டீ குடிக்கு ம்போது ஒரு முறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒருமுறை என பாலை பல முறை சுடவைக்கும்போது, இது சரி தானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?
”பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக் கம்!” என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ”காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்க ளுக்குமேல் நீண்டநேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத் துக்களான பி1, பி2, பி12 ஆகிய வை ஆவியாகிவிடும்.
ணமும் வீணாகிவிடும்தானே?!” என் று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறி னார்.கால்ஷியம், வைட்டமின் சத்துக்க ளுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்ப தால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் கார 
”பசுப்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலை க் காய்ச்சுகிறோம்.
இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகு தான் பாக்கெட்டுகளில் அடைக்கப் படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சிய தும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்” என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.
பசுப்பால் வாங்குபவர்களுக்கு…!!
‘பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அப் போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
பாக்கெட்பால் வாங்குபவர்களுக்கு.!
க்கள் அழிக்கப்பட்டு இருப்ப தால், அதை6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.‘டோன்டு மில்க்’, ‘பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியா 
யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)- வகை பால் வாங்குபவர்களுக்கு…!!
இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.
எந்த வகைப்பால் ஆயினும், அதை 2முறைக்குமேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.
காபி, டீ என தயார் செய்யும் போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்”
”பாலை ‘மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!”

சுரைக்காய் மோர் கூட்டு


Posted By Muthukumar,On Jan 7,2015
தேவையானப்பொருட்கள்:

சுரைக்காய் - 1
தயிர் - 1 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெந்தயம் - 5 அல்லது 6
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு


செய்முறை:

சுரைக்காயின் தோலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் விதை மற்றும் வெள்ளைப்  பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் சிறிது நீரைச் சேர்த்து கெட்டி மோராக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுரைக்காய் துண்டுகளைப் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, காய் மூழ்கும் அளவிற்கு சிறிது நீர் சேர்த்து வேக விடவும்.  காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைப் போட்டு கலந்து ஓரிரு வினாடிகள் கொதிக்க விடவும்.  பின்னர் அடுப்பை சிறு தீயில் வைத்து, மோரைச் சேர்த்துக் கிளறி விட்டு, உடனே அடுப்பை அணைத்து விடவும்.  நீண்ட நேரம் கொதிக்க விடக் கூடாது.

ஒரு வாணலியில் அல்லது தாளிக்கும் கரண்டியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு சேர்க்கவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், காய்ந்த மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து, சற்றுக் கிளறி விட்டு, இந்த தாளிப்பை கூட்டில் கொட்டிக் கிளறவும்.

இதை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.  அல்லது மற்ற சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் செய்யலாம்.