Saturday, March 31, 2012

நண்டு மசாலா

Posted On March 31,2012,By Muthukumar

ண்டு மசாலா என்றாலே நாவில் நீர் ஊறும். முறையான பக்குவத்தில் இதை தயாரித்தாலோ வாசனை ஊரைத் தூக்கும். செய்து சுவைக்கலாமா?
தேவையான பொருட்கள்
நண்டு - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம் நறுக்கியது
தக்காளி - 100 கிராம் நறுக்கியது
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
தேங்காயë -அரை மூடி
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப
செய்முறை:
நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய் இஞ்சி, பூண்டு வாணலியில் வறுத்து அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்பு வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத் தேவையில்லை போதுமான உப்பு சேர்க்கவும்.
நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கிவிடவும்.

No comments:

Post a Comment