Saturday, December 3, 2011

தம் ஆலுகோபி / Dum AlooGobi

Posted On Dec 03,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு - 200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
எண்ணெய் - 4-6 டேபிள்ஸ்பூன்

மசாலா மிக்ஸ் செய்து கொள்ள:

புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்


தாளிக்க :
மிளகு, சீரகம், சோம்பு -சிறிது
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை -1
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து கொதிக்கும் நீரில் போட்டு வடிகெட்டி எடுத்து வைக்கவும்.

ஒரு பவுலில் தயிருடன் மேலே குறிப்பிட்ட பொருட்களை கலந்து வைக்கவும்.


ஒரு சாலோ நான்ஸ்டிக் ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி உருளைக்கிழங்கு,காளிப்ளவர் போட்டு,சிறிது உப்பு தூவி பொரித்து எடுக்கவும்.



பொரித்த பிறகு இருக்கும் எண்ணெய் தாளிக்க பயன்படுத்தலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு காயவும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தயிருடன் கலந்து வைத்த மசாலா மிக்ஸை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.

பொரித்த உருளை காளிப்ளவர் சேர்த்து பிரட்டவும். ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.

மூடி போட்டு 5 நிமிடம் மசாலாவுடன் சேர்ந்து வேகவிடவும். உப்பு சரி பார்க்கவும்.

கிரேவி கெட்டியாகி கமகமவென்ற மணத்துடன் இருக்கும்.அடுப்பை அணைக்கவும். நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான தம் ஆலு கோபி ரெடி.இதனை சப்பாதி,நாண்,ப்லைன் ரைஸ் உடன் பரிமாறலாம்.
கிரேவியாக வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கலாம்.
அவரவர் தேவைக்கு மசாலா கூட்டி, குறைத்து கெட்டித்தனமைக்கு தகுந்தபடி வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment