Posted On Dec 03,2011,By Muthukumar
உருளைக்கிழங்கு - 200கிராம்
காளிப்ளவர் - 200 கிராம்
எண்ணெய் - 4-6 டேபிள்ஸ்பூன்
மசாலா மிக்ஸ் செய்து கொள்ள:
புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் - 1டீஸ்பூன்
மஞ்சள்தூள்- கால்டீஸ்பூன்
கரம் மசாலா - அரைடீஸ்பூன்
தாளிக்க :
மிளகு, சீரகம், சோம்பு -சிறிது
கிராம்பு - 2
பட்டை - 1
பிரியாணி இலை -1
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
மல்லி இலை - சிறிது அலங்கரிக்க.
உருளைக்கிழங்கை
தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். காளிப்ளவரை சிறிய பூக்களாக பிரித்து
கொதிக்கும் நீரில் போட்டு வடிகெட்டி எடுத்து வைக்கவும்.
ஒரு
சாலோ நான்ஸ்டிக் ப்ரை பேனில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி
உருளைக்கிழங்கு,காளிப்ளவர் போட்டு,சிறிது உப்பு தூவி பொரித்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயவும் தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து பொரிய விடவும்.நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். தயிருடன் கலந்து வைத்த மசாலா மிக்ஸை சேர்க்கவும். நன்கு கொதி வரட்டும்.
கிரேவியாக வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கலாம்.
அவரவர் தேவைக்கு மசாலா கூட்டி, குறைத்து கெட்டித்தனமைக்கு தகுந்தபடி வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment