Posted By Muthukumar,On May 01,2015
தேவையானப்பொருட்கள்: ரஜ்மா - 1 கப் கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 1 இஞ்சி - ஒரு சிறு துண்டு பூண்டு பற்கள் - 5 முதல் 6 வரை வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: ரஜ்மாவை 8 மணி நேரம் அல்லது இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊறிய ரஜ்மாவை நன்றாக கழுவி விட்டு, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும். வெந்த ரஜ்மாவை நன்றாக வடித்தெடுத்து ஆற விடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் சோம்பைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு (பூண்டை தோலுடன் போடலாம்), சீரகம் ஆகியவற்றை சிறு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரைத்த ரஜ்மா விழுது, கடலை பாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பிசைந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் ஓரிரு ஸ்பூன் தண்ணீரைச் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை நன்றாக காய்ந்த பின், மாவை சிறு விள்ளல்களாக கிள்ளிப் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும். இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். சாத வகைகளுடன் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும். |
Friday, May 1, 2015
ரஜ்மா பகோடா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment