Posted By Muthukumar,On May 31,2015
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கப்; கருப்பு எள்_2 மேஜைக் கரண்டி; வெல்லம்-50 கிராம்; நெய்-தேவையான அளவு; ஏலக்காய்-சிறிதளவு; சுக்குப் பொடி-சிறிதளவு.
செய்முறை:
தனித் தனி வாணலியில் கேழ்வரகு மற்றும் எள்ளை வறுத்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய், சுக்குப் பொடியைக் கலந்து, வெல்லக் கரைசலை ஊற்றி, பதம் வரும்வரை பிசையவும். இப்போது கலவையை தோசைக் கல்லில் ஊற்றி, நெய் இட்டு சுட்டெடுத்தால், கேழ்வரகு எள் அடை தயார்.
பலன்கள்:
கேழ்வரகு மற்றும் எள்ளில் உள்ள அதிகளவு கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு போதிய வலுவைத் தருகிறது. மேலும், இதிலுள்ள இரும்புச் சத்து உள்ளிட்ட சத்துக்கள் குடல் புண், நீரிழிவு, ரத்த சோகை உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு அளிப்பதுடன் , நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கேழ்வரகில் உள்ள நார்ச் சத்து, மலச் சிக்கலை சரி செய்கிறது. மேலும் உடல் எடையைக் குறைக்கும் பண்பு கேழ்வரகிற்கு உண்டு என்பதால், டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது., இந்த கேழ்வரகு அடை.
No comments:
Post a Comment