Sunday, May 31, 2015

அவல் உப்புமா



உப்புமாக்களில் பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்ப‍து என்ன வென்றால், ஒன்று சேமியா உப்புமா, இன்னொன்று ரவை உப்புமா ஆகிய இரண்டுதான்.  இன்னும் சிலருக்கு
நொய் உப்புமா தெரியும். ஆனால் ஆரோக்கியம் நிறைந்த அவல் உப்புமா எப்ப‍டி செய்வது என்று தெரியுமா? இதோ அதற்கு தேவையான பொருட்களும், செய்முறையும் உங்கள் பார்வைக்கு . . .
தேவையானவை:
அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு-ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு –ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அவலை நன்றாக கழுவி 15நிமிடம் ஊறவைக்கவும். கடாயில்எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10நிமிடம் மூடிவைக்கவும் ( அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும்). பிறகு கறிவேப்பி லை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

No comments:

Post a Comment