Posted on July 10, 2012 by muthukumar
தேவையானவை !ஊற வைக்க:
சிக்கன் – அரை கிலோவரமிளகாய் – 6 பொடியாய் கிள்ளியது
கறிவேப்பிலை, மல்லி தழை – இரண்டும் சேர ஒரு கைப்பிடி
மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
வரமிளகாய் – 4
சீரகம், சோம்பு- தலா ஒரு தேகரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை, மல்லி தழை – தலா ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
மிளகாய், தனியா, கரம் பொடிகள் – தலா ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
செய்முறை ! தக்காளி மற்றும் வெங்காயத்தை கொஞ்சம் பெரிய தாக நறுக்கி வைக்கவும். ஊற வைக்க கொடுக்கப்பட்ட பொருட்க ளை சிக்கனுடன் பிரட்டி கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணய் ஊற்றி வரமிளகாய், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளி க்கவும்.
பின் சிறிது உப்புடன் வெங்கா யம், கறிவேப்பிலை மற்றும் மல்லித் தழை சேர்த்து பொன் னிறமாக வதக்கவும்.
நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி மஞ்சள் பொடி சேர்த்து பின் ஊற வைத்த சிக்கனை போடவும்.
நன்கு 10 நிமிடம் கிளறி பொடி வகைகளை சேர்க்கவும். தேவையெ னில் சக்தி சிக்கன் மசாலா பொடியையும் சேர்க்கலாம்.
சிக்கன் வெந்ததும் தக்காளியை சேர்த்து பிரட்டவும். உப்பை சரி பார் க்கவும்.
தக்காளியை நன்கு குழையும்படி வதக்கவும். கடைசியாக ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அடுப்பை அணைக்கவும்.
சுவையான சிக்கன் வறுவல் ரெடி. பருப்புடன் சாப்பிட சுவையாக இரு க்கும். நல்லெண்ணெய் தான் இதன் ஸ்பெஷல்.
No comments:
Post a Comment