Friday, November 25, 2011

போட்டி (குடல்)கத்திரிக்காய் சால்னா

Posted On November 25,2011,By Muthukumar




ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித்தால் வயிற்று புண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது

தேவையான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5  மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள் இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை முறி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை,லவங்கம், ஏலம் தலா - இரண்டிரண்டு
கத்திரிக்காய் - அரை கிலோ
கடலைப்பருப்பு - கால் கப்










செய்முறை
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள் வெங்காயத்தை வத்க்கவும்.
வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.


சாப்பிடும் அளவு: 8 நபர்கள்

No comments:

Post a Comment