Posted On November 25,2011,By Muthukumar
விருந்தின்போது
பிரியாணி, பிரைடு ரைஸ் பரிமாறுவது வழக்கமாக இருக்கிறது. இவற்றுக்கு பரிமாற
ஏற்ற துணைக் குழம்புதான் முட்டைக்கோஸ் சீஸ்கோலா.
தேவையானவை
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
*
முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக்
கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
*
முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட்
துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம்
பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்
கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
*
வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக
சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment