Posted By Muthukumar,On December 10,2014,
தேவையான பொருட்கள்:
பெரிய கெட்டியான தக்காளிப் பழம்-6; கேரட் துருவியது-1 டேபிள் ஸ்பூன்; வெங்காயம் துருவியது- 1 டேபிள் ஸ்பூன்; பீட்ரூட் துருவியது-1/2 டேபிள் ஸ்பூன்; பீன்ஸ் துருவியது-1 டேபிள் ஸ்பூன்; எலுமிச்சம் பழம்-1 உப்பு, மிளகுத் தூள்-தேவைக்கு;கொத்தமல்லி தழை, கருவேப்பிலை-சிறிது.
]செய்முறை:
தக்காளியை மேற்புறம் மட்டும் வட்டமாக நறுக்கி எடுத்து உள்ளே உள்ள சதையை நைஸாக எடுத்துவிடவும். நறுக்கிய மேல்பாகத்தை தனியே வைக்கவும். இப்பொழுது தக்காளிப் பழம் குடுவைபோல இருக்கும். அதற்குள் துருவிய காய்கறிகள் அனைத்தையும் நன்றாக உப்பு, மிளகுத்தூள் போட்டு, கலந்து உள்ளே ஸ்டப் செய்யவும். மேலே நைஸாக நறுக்கிய கொத்துமல்லி, கறிவேப்பிலையைத் தூவி, எலுமிச்சை சாறை லேசாக மேலே பிழிந்து, நறுக்கி தனியே வைத்துள்ள தக்காளியின் மேல் பாகத்தை வைத்து மூடி பறிமாறவும்.
No comments:
Post a Comment