Saturday, February 7, 2015

திணை லட்டு

Posted By Muthukumar ,On Feb 7,2015
thinai
பொதுவாக , சிறு தானியங்களால், செய்யப்பட்ட உணவுகள் உடல் நலத்தைக் கெடுக்காது. குறிப்பாக திணையில் செய்யப்படும் உணவுகள் நோய்களை அண்டவிடாது. மழை, குளிர் கலத்துக்கு ஏற்றது திணை. இத்தகைய திணையில் செய்யப்படும் லட்டு, கார்த்திகை மாத சிறப்பு உணவு வகைகளில் பிரசித்தி பெற்றது.
திணை லட்டு- செய்வது எப்படி?:
தேவையான பொருட்கள்:
திணை-1 கப்; பாசிப் பருப்பு-1 கப்; வெல்லம்-2 கப்; நெய்-50 கிராம்; முந்திரி-4; ஏலக்காய்ப் பொடி-சிறிதளவு.
செய்முறை:
திணை, பாசிப் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். வெல்லத்தைப் பாகு போல் காய்ச்சி, திணை மற்றும் பாசிப் பருப்பு பொடியுடன் கலக்கவும். இத்துடன் நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறி லேசாக ஆறவைத்து, உருண்டைகளாகப் பிடித்தால், ‘ திணை லட்டு ‘ ரெடி.
பலன்:
மழை குளிர் காலத்தில், ஏற்படும் நெஞ்சு சளியை குணப்படுத்தும் வல்லமை திணைக்கு உண்டு. மேலும் குளிர்ந்திருக்கும் உடலுக்கு திணை உஷ்ணத்தைத் தரும். ஆனால், அதிக அளவு உஷ்ணம் உடலுக்கு நலல்தல்ல என்பதால், பால், நெய்யுடன் சேர்த்து, திணையை சாப்பிடுவது நல்லது. இது தவிர இனப் பெருக்க உறுப்பு செயல்பாடுகளுக்கு திணை நல்ல ஊகக் மருந்து. எல்லாவற்றையும் விட திணையால் உடல் எடை அதிகரிக்காது எனப்து கூடுதல் சிறப்பு.

No comments:

Post a Comment