Wednesday, January 7, 2015

பால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்!

 

 
காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ யோ, காபியோ குடித் தால் தான். சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம்.
குழந்தைகளுக்கும், முதியவர்களு க்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிகமுக்கியமாகிப்போன பாலை, நாம் சரியான முறையில்
காய்ச்சுகிறோமா.? அப்பா டீ குடிக்கு ம்போது ஒரு முறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒருமுறை என பாலை பல முறை சுடவைக்கும்போது, இது சரி தானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?
”பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக் கம்!” என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ”காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்க ளுக்குமேல் நீண்டநேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத் துக்களான பி1, பி2, பி12 ஆகிய வை ஆவியாகிவிடும்.
ணமும் வீணாகிவிடும்தானே?!” என் று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறி னார்.கால்ஷியம், வைட்டமின் சத்துக்க ளுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்ப தால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் கார 
”பசுப்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண் கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலை க் காய்ச்சுகிறோம்.
இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகு தான் பாக்கெட்டுகளில் அடைக்கப் படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சிய தும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்” என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.
பசுப்பால் வாங்குபவர்களுக்கு…!!
‘பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அப் போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
பாக்கெட்பால் வாங்குபவர்களுக்கு.!
க்கள் அழிக்கப்பட்டு இருப்ப தால், அதை6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.‘டோன்டு மில்க்’, ‘பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியா 
யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)- வகை பால் வாங்குபவர்களுக்கு…!!
இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்கவேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.
எந்த வகைப்பால் ஆயினும், அதை 2முறைக்குமேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.
காபி, டீ என தயார் செய்யும் போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்”
”பாலை ‘மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!”

No comments:

Post a Comment