Friday, April 17, 2015

ஜிகிர்தண்டா- செய்வது எப்படி?

  • Posted By Muthukumar,On April,17,2015
  • jikirthanda
நாட்டு மருந்துக் கடைகளில் பாதாம் பிசின் கிடைக்கும். இது பனங்கற்கண்டு போல இருக்கும். இதை ஒருமுறை அலசி, ஊற வைக்கவேண்டும். ஒரு ஸ்பூன் பாதாம் பிசின் ஊறியதும், ஒரு பெரிய கப் அளவு வந்துவிடும். அதனால், குறைவாகவே தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். ஊறிய பாதாம் பிசின் உடைத்த ஐஸ் கிரிஸ்டல் போல இருக்கும். இதனை ஃப்ரிஜ்ஜில் வைத்து 4 நாட்கள் வரை உபயொகிக்கலாம்.
* 4 டம்ளர் தயாரிக்க:
தேவை:
பால்-அரை லிட்டர்( காய்ச்சி ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லாக்கவும்.) ; ஊற வைத்த பாதாம் பிசின்-2 டேபிள் ஸ்பூன்; நன்னாரி சர்பத்-2 டேபிள் ஸ்பூன்; பாசந்தி-2 டேபிள் ஸ்பூன்; வெனிலா ஐஸ்கிரீம்-2 பெரிய ஸ்கூப்.
செய்முறை:
பெரிய கண்ணாடி டம்ளரில் முதலில் பாம் பிசின் போடவும். அதன் மேல் சிறிது சர்பத் ஊற்றவும். கொஞ்சம் ஐஸ் கிரீம் போடவும். இப்போது பாலை 3/4 டம்ளர் அளவு ஊற்றவும். அதன் மேல் மீண்டும் சர்பத், ஐஸ் கிரீம், மேலே பாசந்தி, மீண்டும் ஒரு சிறிய ஸ்பூன் சர்பத், அழகுக்கு ஊற்றி, பெரிய ஸ்பூன் போட்டு வைக்கவும்.
கவனத்துக்கு:
* இப்படி படிப்படியாக போடுவதால், குடிக்கும்போதும் படிப்படியான சுவையை அறியலாம்.
* வெனிலா ஐஸ் கிரீம் வீட்டில் செய்வதாக இருந்தால், சர்க்கரையை சிறிது கேரமைஸ் செய்து போடவும். நல்ல கலர் வரும்.
* அதிகம் இனிப்பு தேவைப்படுபவர்கள் பாலில் சிறிது சர்க்கரை கலந்தும் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்.

No comments:

Post a Comment