:
Posted By Muthukumar ,On November 11,2014
தேவையான பொருட்கள்:
சின்ன உருளைக் கிழங்கு-15; பச்சை பட்டாணி-1 கப்; வெங்காயம்-2; வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்; இஞ்சிபூண்டு விழுது- 1 ஸ்பூன்; மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்; தனியாத்தூள்-1 டீ ஸ்பூன்.
அரைக்க:
பாதாம் பருப்பு-5; முந்திரி பருப்பு-5; பொட்டுக்கடலை1 டேபிள் ஸ்பூன்; கசகசா-1 டீ ஸ்பூன்; பட்டை- 1 துண்டு.
எப்படி செய்வது?:
சின்ன உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, கசகசா மூன்றையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பட்டையையும், பொட்டுக்கடலையையும் வறுத்து ஊறவைத்த பருப்புகள் கசகசா எல்லாவற்றையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயத்தைப் பொந்நிறமாக வறுக்கவும். பின்னர் பட்டாணி உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். அரைத்த விழுதை உப்புடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பூண்டு விழுது, மிளகாய்த்தூள் தனியாத்தூள்சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
No comments:
Post a Comment