Wednesday, October 1, 2014

செட்டிநாட்டு கோழிக்குழம்பு


தேவையானவை :
கோழி – அரை கிலோ
மஞ்சள்பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 3ஸ்பூன்
தனியா பொடி – 4ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – 11/2 ஸ்பூன்
சோம்பு – 1ஸ்பூன்
பூண்டு – 6 பல்
இஞ்சி – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – 4ஸ்பூன்
சோம்பு – 1/2ஸ்பூன்
வெந்தயம் – 1/2ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 1
அன்னாசிப்பூ – 2
செய்முறை :
1.ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் வறு த்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
2.அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவ ற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து பத்து நிமிடம் கிளறவும்.
3.மசாலா நன்கு வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர் த்து கிளறி தேவையான தண்ணீர்விட்டு உப்புசேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

No comments:

Post a Comment