Posted on October 01,2014 by Muthukumar
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப்
தயிர் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
தயிர் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியாக ஊறவையுங்கள். உளுந்தில் வெந்தயத்தைச் சேர்த்து தனியாக ஊற வையுங்கள். அவலை தயிரி ல் ஊற வையுங்கள். அனைத்தும் 3 மணி நேரமாவது ஊறவேண்டும். பின்னர் அனைத்தையும் தனித்தனியாக அரைத்து தேவையானளவு உப்புச்சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து புளிக்க வையுங்கள். மறுநாள் காலை தோசைக் கல் லில் லேசான எண்ணெய் விரவி மிருதுவாக மாவை ஊற்றி தோசை வார்த்து இரு புறமும் வெந்தபிறகு எடுங்கள். பஞ்சு பஞ்சான ஆந்திர ‘அட்டுக்குலு தோசை’ ரெடி.
No comments:
Post a Comment