Posted By Muthukumar,On July 18,2015
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி-1 டம்ளர், மாங்காய்-2, மிளகய் வற்றல், பச்சை மிளகாய்- தலா 2; கடுகு, உளுந்து, கொண்டக்கடலை- தலா 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, மஞ்சள் பொடி, இஞ்சி, எண்ணெய், உப்பு.
செய்முறை;
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கொண்டக் கடலையைப் போட்டு தாளிக்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, தட்டிய இஞ்சி, நறுக்கிய மிளகய் வற்றல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். . துருவிய மாங்காய், உப்பு கலந்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசியை வேக வைக்கவும். மிதமான பதம் வந்ததும், வதக்கிய மங்காய்க் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பக்குவம் வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழையை மேலாகத் தூவிப் பறிமாறவும். மாங்காய் சீஸனுக்கு ஏற்ற சுவையான சாதம் இது.
No comments:
Post a Comment