Sunday, August 12, 2012

ப்ரான் கோல்டன் ப்ரை

Posted On Aug 12,2012,By Muthukumar

இறாலை எந்தவிதத்தில் சேர்த்தாலும் வாசனை தூக்கிக்கொண்டு போகும். சாதத்துடன் சேரும் இறால் குழம்பு அதன் தனிச்சுவையில் ஈர்க்கும். இறாலைக் கொண்டு செய்யும் பிரான் கோல்டன் ப்ரையும் மணக்கும். நாவில் ருசிக்கும்.

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
எலுமிச்சம் பழம் -2 (பிழிந்து சாறெடுக்கவும்)
வெள்ளை மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
பிரெட் தூள் - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். எலுமிச்சம்பழச்சாறில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறாலில் புரட்டி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை முட்டையில் முக்கி ரொட்டித்தூளில் புரட்டியெடுக்கவும். இதை உதிரி உதிரியாக எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இறால் பொன்னிறமாக ()வந்ததும் எடுத்து விடவும்.
இப்போது மணக்கும் `ப்ரான் கோல்டன் ப்ரை' ரெடி.

No comments:

Post a Comment