Sunday, February 19, 2012

சுண்டைக்காய் கூட்டு

Posted On Feb 19,2012,By Muthukumar

தேவையானப்பொருட்கள்:

சுண்டைக்காய் - 2 கப்
பயத்தம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

சுண்டைக்காயின் காம்பைக் கிள்ளி விட்டு, இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

பயத்தம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேக வைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், சுண்டைக்காயைப் போட்டு, அதில் சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அத்துடன், காய் மூழ்கும் அளவிற்கு தேவையான நீரைச் சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் அத்துடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இதற்கிடையில், தேங்காய்த்துருவல், சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை மைய அரைத்து, கொதிக்கும் கூட்டில் சேர்த்துக் கிளறி விடவும்.

கூட்டு மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, இறக்கி வைக்கவும்.


No comments:

Post a Comment