Posted on September 22, 2014 by Muthukumar
சமையல் குறிப்பு – இடியாப்பம்
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – 3 கப்
பச்சரிசி – ஒரு கையளவு
உப்பு – 2 1 /2 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
அரிசியை வெது வெதுப்பான
நல்ல விழுதாக அரைத்து கடைசியில் உப்பு சேர்க்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து உடனே இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக வைக்கவும்.
இட்லி சூடாக இருக்கும்பொழுதே இடியாப்ப அச்சில் எண்ணெய் தடவி அழுத்தினால் நூல் நூலாக வரும்.(இட்லியை ஆற வைக்கக் கூடாது).
ஒரு அகலமான தட்டில் பரப்பி, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு கவனமாகப் பிரித்து விடவும்.
இந்த அடிப்படையான இடியாப்பத்தை வைத்து பலவிதமாக தாளித்து இடியாப்ப வகைகள் தயாரிக்கலாம்.
இடியப்பத்திற்கு குருமாவுடன், சர்க்கரை , பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது தேங்காய் துரு வி சேர்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment