Saturday, July 18, 2015

மாங்காய் சாதம்

Posted By Muthukumar,On July 18,2015
MANGO RICE

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி-1 டம்ளர், மாங்காய்-2, மிளகய் வற்றல், பச்சை மிளகாய்- தலா 2; கடுகு, உளுந்து, கொண்டக்கடலை- தலா 1 தேக்கரண்டி; கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, மஞ்சள் பொடி, இஞ்சி, எண்ணெய், உப்பு.

செய்முறை;
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கொண்டக் கடலையைப் போட்டு தாளிக்கவும். அத்துடன், மஞ்சள் பொடி, தட்டிய இஞ்சி, நறுக்கிய மிளகய் வற்றல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறவும். . துருவிய மாங்காய், உப்பு கலந்து, பச்சை வாடை போகும்வரை வதக்கவும். மற்றொரு பாத்திரத்தில் அரிசியை வேக வைக்கவும். மிதமான பதம் வந்ததும், வதக்கிய மங்காய்க் கலவையில் கொட்டி நன்கு கிளறவும். பக்குவம் வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழையை மேலாகத் தூவிப் பறிமாறவும். மாங்காய் சீஸனுக்கு ஏற்ற சுவையான சாதம் இது.

கொத்துக்கறி இட்லி



கொத்துக்கறி  என்றாலேஅசைவ பிரியர்களின் நாவில் எச்சில் பெருகும். அந்தளவுக்கு விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய  கொத்துக்கறிவைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம். இதில் மிக சுலபமாக செய்யக்கூடியது இந்த கொத்துக்கறி இட்லி
தேவையானவை:
கொத்துக்கறி  தேவையான அளவு
வெங்காயம் (நறுக்கியது ) – 1 கப்
தக்காளி (நறுக்கியது ) – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ் ஸ்பூன்
சீரக தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ் ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெங்காயத்தை போட்டுபொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கொந்தன‌ கறியையும் போட்டு நன்றாக வதக்கவும்.
இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சமைக்கவும், கொத்துக் கறி நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை தூவி தனியே வைக்கவும்.
இட்லி தட்டில் சிறிதளவு மாவை ஊற்றி கொத்துக் கறி கலவையை அதன்மீது போடவும். பின்னர் இக் கொத்துக்கறி  கலவைமீது மீண்டும் சிறிதளவு மாவை ஊற்றவும் (மாவை ஊற்றும்போது கொத்துக்கறி  மசாலா வெளியே தெரியாதபடி பார்த்துக் கொள்ளவும்)
இந்த இட்லிகளை ஆவியில் வைத்து எடுத்தால் சுவையான கொத்துக்கறி இட்லி தயார். இட்லியையும், கொத்துக்கறி யையும் தனியாக சாப்பிடுவதை விட இவ்வாறு செய்து சாப்பிடும்போது சுவை அதிகமாக இருக்கும்.