Sunday, March 29, 2015

பாவக்காய் புளி குழம்பு


Posted By Muthukumar,On March 29,2015


தேவையானப்பொருட்கள்:

சிறு பாவக்காய் - 1 கப்
சாம்பார் வெங்காயம் - 15 முதல் 20 வரை
பூண்டு பற்கள் - 10 முதல் 15 வரை
தக்காளி - 1
புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
சாம்பார் தூள் - 1 டேபிள்ஸ்பூன் (குவித்து எடுக்கவும்)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணை - 2  அல்லது  3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பாவக்காயின் இரு முனைகளையும் கிள்ளி விட்டு, கொதிக்கும் நீரில் போட்டு, சில நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும். (கொதிக்கும் நீரில் சிறிது வெல்லத்தைச் சேர்த்தால், பாவக்காயின் கசப்பு சற்று குறையும்)

புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து 2  கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உரித்து வைத்துக் கொள்ளவும்.  தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, வெந்தயம்,  பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.   பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும்.  பின்னர் தக்காளியைச் சேர்த்து சற்று வதக்கிய பின் அதில்  சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும்.  பின்னர் அதில் பாவக்காய், புளித்தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கி, மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதித்து சற்று கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.

இநதக் குழம்பிற்கு "சிறு பாவக்காய்"  (மிதி பாவக்காய் என்றும் சொல்வார்கள்) நன்றாக இருக்கும்.  இல்லையென்றால் சாதரண நீட்ட பாவக்காயையும் உபயோகிக்கலாம்.

கரண்டி ஆம்லேட்



பொதுவாக முட்டையை என்றாலே அனைத்து வயதி னருக்கும் பிடித்த‍மான
உணவு. இந்த முட்டையை பச்சையாக குடிப்ப‍வர்கள் சிலருண்டு. சிலருக்கு வேக வைத்த‍ முட்டை பிடிக்கும். சிலருக்கு ஆஃப் பாயில் பிடிக்கும், சிலருக்கு முழு ஆம்லேட் பிடிக்கும், சிலருக்கு இந்த முட்டை ஆம்லேட்டோடு சிறிது வெங்காயம், மிளகுத்தூள் கலந்த ஆம் லேட் பிடிக்கும். சரி விஷயத் திற்கு வருவோம் வழக்க மான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இந்த கரண்டி ஆம்லேட்  நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம்.
தேவையானவை
முட்டை-1
சின்ன வெங்காயம் – கைப்பிடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக் கரண்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து லேசாக வதக் க வேண்டும்.
பிறகு மிளகுத் தூள் தூவி, கலக்கி வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும். சிறிது நேரத்தில் திருப்பிப் போட்டு எடுக்கவும். ஓட்டல்களில் ஒவ்வொருவருக்கும் இது போன்று செய்துகொடுக்க நேரமாகும் என்பதால், தற்போது தோசைக்கல் லிலேயே குழிகள் அமை க்கப் பட்டு அதிலேயே கரண்டி ஆம்லெட் சுடச்சுடத் தயார் செய்யப்படுகிறது.

Thursday, March 19, 2015

ஆம்பூர் மட்டன் பிரியாணி




மட்ட‍ன் பிரியாணியின் ருசியே தனிதான். ஆனாலும் இந்த ஆம்பூர் பிரியாணியின் ருசியிருக்கே! அப்பப்பா சொல்லும்போதே
நாக்கில் எச்சில் ஊறுகிறது. அவ்வ‍ளவு ருசி. சரி சரி பேசிக்கிட்டே இருந்தா எப்ப‍டிங்க, சட்டுபுட்டுன்னு கீழே சொல்லியிருக்கிறதயெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு தயாராகுங்க• எதுக்கா, அட போங்க, இந்த ஆம்பூர் பிரியாணி சமைக்கத்தான் ருசிக்கத்தான்.
தேவையானவைகள் :
பாசுமதி அரிசி – ஒரு கிலோ
மட்டன் – ஒரு கிலோ
வெங்காயம் – அரை கிலோ
தக்காளி – அரை கிலோ
பச்சை மிளகாய் – ஆறு
காஷ்மீரி சில்லி (அ) மிளகாய் தூள் – இரண்டு தேக் கரண்டி
தயிர் – ஒரு கோப்பை
கொத்துமல்லித்தழை – ஒரு கொத்து
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புதினா – ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு – தலா இரண்டு
பிரியாணி இலை – இரண்டு
உப்பு தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 200 மில்லி
நெய் – 50 மில்லி
எலுமிச்சை -அரை பழம்
செய்முறை:
அரிசியை தண்ணீரில் கழுகி ஊற வைக்கவும். கொழுப்பு சேர்க்காமல், மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும். வாயகன்ற த்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் சுடானதும் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலைபோட்டு வெடிக்கவிட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து அதனை எண்ணெயுடன்சேர்த்து நன்கு வதக்க வும்.
வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும். அடுத்து உப்பு, மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயை சிம்மில் வைத்து மட்டனைவேகவிடவும். மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வரும் வரை வேக விடவும்.

மட்டன் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் தண்ணீர் ஊற்றவும். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகா ல் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை நன்கு அலசி போட்டு கொ திக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடு ம் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கன மான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவு ம்.பிறகு லேசாக மேலிருந்துகீழாக சாதம் குழையாமல் பிரட்டி எடுக்கவும். சுவையான ஆம்பூர் மட்டன் பிரி யாணி ரெடி.

வரகு அரிசி காளான் பிரியாணி

Posted By Muthukumar ,On March 19,2015
kodo millet-mushroom biriyani
வரகு அரிசி-1/4 கிலோ; காளான்-50 கிராம்; வெங்காயம்-1 பெரியது; தக்காளி – 1 பெரியது; எண்ணெய்- தேவையான அளவு; நெய்-சிறிதளவு; தயிர்-1 தேக்கரண்டி; பச்சை மிளகாய்- 2 ஏலக்காய்-3; மிள்காய்ப் பொடி-1 தேக்கரண்டி; மல்லிப் பொடி-1 தேக்கரண்டி; கரம் மசாலா பொடி-1/4 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு. இலவங்கம். புதினா, கொத்தமல்லி, மஞ்சள்- சிறிதளவு.
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளானைக் கழுவி, வைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம், சோம்பு, இலவங்கம் போட்டுத் தாளிக்கவேண்டும். பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது தக்காளி , புதினா, கொத்தமல்லி, சேர்க்கவேண்டும். அதோடு காளான், மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து, வதக்கவேண்டும். பின் கழுவி வைத்துள்ள வரகு அரிசியுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் வரும்வரை, வைத்து இறக்கினால், கமகமக்கும் வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.
பயன்கள்:
அரிசி கோதுமையைவிட , வரகு அரிசியில் நார்ச் சத்து அதிகம். மாவுச் சத்து குறைவாகக் காணப்படுவதால், உடலுக்கு நல்லது. இரும்பு, கால்சியம், மற்றும் விட்டமின்-பி கொண்டதாகவும் உள்ளது, தாதுப் பொருட்களும் நிரம்பஉள்ளன.

Monday, March 16, 2015

இறால் வறுவல்



அசைவ உணவுகளிலேயே சுவைக்க‌ வித்தியாசமான தாகவும், அதேநேரத்தில் சுவையானதாகவும் இருக்கும் இறால் என்றால் அது மிகை அல்ல‍. இந்த
இறால் வறுவலை எப்ப‍டி சமைப்ப‍து என்பதைப் பார்ப்போமா
தேவையானவைகள்..
இறால் – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் – 2
இஞ்சிப் பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்க
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
• முதலில் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்சியில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கறிவேப் பிலை போட்டு தாளிக்கவும்.
• இதனுடன் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிள காய் சேர்த்து வதக்கவும்.
• பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

•இதனுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறால் சேர்த்து வதக் கவும்.
•உப்புசேர்த்துலேசாக தண்ணீர் தெளித்து தீயை குறைந்த அளவில் வைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும.
• நாவில் நீர் ஊறச்செய்யும் இறால் வறுவல் ரெடி.