Wednesday, October 1, 2014

சோலாப்பூரி


தேவையான பொருட்கள்

    மைதா – 2 கப்
    ரவை – 1/2 கப்
    தண்ணீர் – 1 1/2கப்
    உப்பு – 1/2 தேக்கரண்டி
    சோடா உப்பு – ஒரு சிட்டிகை
    எண்ணெய் – 2 கப்
 செய்முறை
மைதா, ரவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, சோடா உப்பு இரண்டையும் கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். ஓரளவிற்கு பதமாக பிசைந்தவுடன் சூடான எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
45 நிமிடங்கள் ஊற விடவும்.
பிசைந்த மாவினை சிறுசிறு உருண் டைகளாக உருட்டிக் கொள்ளவு ம்.
பிறகு அவற்றை சப்பாத்தி வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
சிறு தடிமனாகவும் தேய்க்கவும். அப் பொழுதுதான் பூரி உப்பி வரும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக அதில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இருபுறமும் திருப்பிப் போட்டு சற்று பொன்னிறம் வந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிட வேண்டும்.
குறிப்பு: குருமா பகுதியில் கொண்டைக்கடலை சப்ஜி இதற்கு ஏற்றது.

செட்டிநாட்டு கோழிக்குழம்பு


தேவையானவை :
கோழி – அரை கிலோ
மஞ்சள்பொடி – 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 3ஸ்பூன்
தனியா பொடி – 4ஸ்பூன்
வெங்காயம் – 1
தக்காளி – 2
மிளகு – 1ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
வெங்காயம் – 1
உப்பு – 11/2 ஸ்பூன்
சோம்பு – 1ஸ்பூன்
பூண்டு – 6 பல்
இஞ்சி – ஒரு துண்டு
நல்லெண்ணெய் – 4ஸ்பூன்
சோம்பு – 1/2ஸ்பூன்
வெந்தயம் – 1/2ஸ்பூன்
பட்டை – 2
கிராம்பு – 1
அன்னாசிப்பூ – 2
செய்முறை :
1.ஒரு வாணலியில் மிளகு, சீரகம், சோம்பு ஆகிய மூன்றையும் வறு த்து பூண்டு, இஞ்சி, வெங்காயாம் சேர்த்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து கோழியுடன் பிசறவும்.
2.அதே வாணலியில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவ ற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து பத்து நிமிடம் கிளறவும்.
3.மசாலா நன்கு வதங்கியதும் மிளகாய்ப்பொடி, தனியா பொடி சேர் த்து கிளறி தேவையான தண்ணீர்விட்டு உப்புசேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.

அட்டுக்குலு தோசை


தேவையான பொருட்க‌ள் 
அவல் – 1 கப்
தயிர் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
வெந்தயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
பச்சரிசி, புழுங்கல் அரிசியை தனித்தனியாக ஊறவையுங்கள். உளுந்தில் வெந்தயத்தைச் சேர்த்து தனியாக ஊற வையுங்கள். அவலை தயிரி ல் ஊற வையுங்கள். அனைத்தும் 3 மணி நேரமாவது ஊறவேண்டும். பின்னர் அனைத்தையும் தனித்தனியாக அரைத்து தேவையானளவு உப்புச்சேர்த்து முதல் நாள் இரவே கரைத்து புளிக்க வையுங்கள். மறுநாள் காலை தோசைக் கல் லில் லேசான எண்ணெய் விரவி மிருதுவாக மாவை ஊற்றி தோசை வார்த்து இரு புறமும் வெந்தபிறகு எடுங்கள். பஞ்சு பஞ்சான ஆந்திர ‘அட்டுக்குலு தோசை’ ரெடி.