Posted On Jan 22,2012,By Muthukumar
தேவையான பொருட்கள்
ரவா- 1கப்; மைதா- 1- கப்; சர்க்கரை -1.5 கப்; எண்ணெய்- பொறிக்கத் தேவையான அளவு:செய்முறை
ரவாவை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக்
கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல்
கலக்க வேண்டியது அவசியம்.
அடுப்பில் வாணலியை ஏற்றி, ரவா- மைதா கலவையை
ஒரு ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன்
கலருக்கு வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும், கொடுக்கக்கூடிய ஒரு திடீர் பலகாரம். இதை அவர்கள் விரும்பியும் உண்பார்கள்.
No comments:
Post a Comment