Posted On Jan 23,2012,By Muthukumar
தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் - 250 ௦ கிராம்
காப்சிகம் – 3 எண்ணம் ( பருத்தது )
பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
தக்காளி -2 எண்ணம்
இஞ்சி – ஒரு பாக்கு அளவு
பூண்டு -2 பல்
பச்சை மிளகாய் - 3 எண்ணம்
ஏலக்காய் -2 எண்ணம்
லவங்கம் – 2 எண்ணம்
பட்டை – சிறிதளவு
முந்தரி பருப்பு- 3 எண்ணம்
தேங்காய் துருவல் – 3 எண்ணம்
மல்லி தழை : தேவையான அளவு
மஞ்சள் பொடி- மிக சிறிதளவு
செய்முறை :
1 .வெங்காய தக்காளி கலவை :
முதலில் பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி வெங்காயம் பின்பு இஞ்சி ,பூண்டு அதன்பின்
தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .அடுப்பை அணைத்த பின் , மல்லி தழையையும் நறுக்கி
அதன் மேல் இட்டு கிளறி விட்டு ஆற வைக்கவும் .
ஆறிய பின் இக்கலவையை மிக்ஸ்யில் இட்டு நன்றாக அரைத்து தனியே எடுத்து வ ைத்து கொள்ளவும் .
2 .தேங்காய் கலவை
முந்தரி பருப்பு , ஏலக்காய் , பட்டை, லவங்கம் போட்டு பொடியாக்கி விட்டு , பின் அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும் .
3 . மசாலா தயாரிப்பு :
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய மஷ்ரூம் போட்டு , சிறிதளவு உப்பும் , மஞ்சள் பொடியும் போட்டு கிளறவும் .
மஷ்ரூம் விரைவில் வெந்து விடும் . எனவே நிறைய நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் . அது வெந்தவுடன் , அரைத்து வைத்த தக்காளி வெங்காய கலவையை அதனோடு சேர்க்கவும். பின் அரைத்து வைத்த தேங்காய் கரம் மசாலா கலவையையும் அதனோடு சேர்க்கவும் .
இறுதியாக பொடியாக நறுக்கிய காப்சிகம் அதன் மேல் தூவி விட்டு நன்றாக கிளறவும் . காப்சிகம் முழுவதுமாக வேக வேண்டாம் .
பின் அடுப்பை அணைத்து விட்டு , நறுக்கிய மல்லிதழையை தூவி விடவும்.
மஷ்ரூம் காப்சிகம் மசாலா ரெடி .
இது அனைத்து ரொட்டி வகையறாக்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
தேவையான பொருட்கள் :
மஷ்ரூம் - 250 ௦ கிராம்
காப்சிகம் – 3 எண்ணம் ( பருத்தது )
பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
தக்காளி -2 எண்ணம்
இஞ்சி – ஒரு பாக்கு அளவு
பூண்டு -2 பல்
பச்சை மிளகாய் - 3 எண்ணம்
ஏலக்காய் -2 எண்ணம்
லவங்கம் – 2 எண்ணம்
பட்டை – சிறிதளவு
முந்தரி பருப்பு- 3 எண்ணம்
தேங்காய் துருவல் – 3 எண்ணம்
மல்லி தழை : தேவையான அளவு
மஞ்சள் பொடி- மிக சிறிதளவு
செய்முறை :
1 .வெங்காய தக்காளி கலவை :
முதலில் பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி வைத்து கொள்ளவும் .
கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி வெங்காயம் பின்பு இஞ்சி ,பூண்டு அதன்பின்
தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .அடுப்பை அணைத்த பின் , மல்லி தழையையும் நறுக்கி
அதன் மேல் இட்டு கிளறி விட்டு ஆற வைக்கவும் .
ஆறிய பின் இக்கலவையை மிக்ஸ்யில் இட்டு நன்றாக அரைத்து தனியே எடுத்து வ
2 .தேங்காய் கலவை
முந்தரி பருப்பு , ஏலக்காய் , பட்டை, லவங்கம் போட்டு பொடியாக்கி விட்டு , பின் அதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் போட்டு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும் .
3 . மசாலா தயாரிப்பு :
கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய மஷ்ரூம் போட்டு , சிறிதளவு உப்பும் , மஞ்சள் பொடியும் போட்டு கிளறவும் .
மஷ்ரூம் விரைவில் வெந்து விடும் . எனவே நிறைய நேரம் எடுத்து கொள்ள வேண்டாம் . அது வெந்தவுடன் , அரைத்து வைத்த தக்காளி வெங்காய கலவையை அதனோடு சேர்க்கவும். பின் அரைத்து வைத்த தேங்காய் கரம் மசாலா கலவையையும் அதனோடு சேர்க்கவும் .
இறுதியாக பொடியாக நறுக்கிய காப்சிகம் அதன் மேல் தூவி விட்டு நன்றாக கிளறவும் . காப்சிகம் முழுவதுமாக வேக வேண்டாம் .
பின் அடுப்பை அணைத்து விட்டு , நறுக்கிய மல்லிதழையை தூவி விடவும்.
மஷ்ரூம் காப்சிகம் மசாலா ரெடி .
இது அனைத்து ரொட்டி வகையறாக்களுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment