Friday, January 13, 2012

கிரீன் பீஸ் புலாவ்

Posted On Jan 13,2012,By Muthukumar
ச்சைப்பட்டாணியில் எந்த உணவு வகை தயாரித்தாலும் எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா? இந்த கிரீன் பீஸ் புலாவ் உணவும் தயாரித்துப் பாருங்கள் ரொம்ப சுவையாக இருக்கும். காரட்டும் கலந்து தயாரிப்பதால் பார்ப்பதற்கு ரொம்பவும் கலர்புல்லாக சாப்பிடத் தூண்டும். செய்முறை இதோ!
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு கப்
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய காரட் துண்டுகள் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
பெரிய வெங்காயம் - 1
பட்டை கிராம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் + நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
* இஞ்சி, பூண்டு இவைகளை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் இவைகளை நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
* காரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்புத்தூள் போட்டு வெடிக்க விட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், காரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும்.
* இத்துடன் அரிசி சேர்த்துக் கிளறி, சற்று வறுபட்டதும் குக்கருக்கு மாற்றி 2 கப் தண்ணீர் (அரிசி ஒரு கப் எனில் தண்ணீர் 2 கப்) ஊற்றி மூடி இரண்டு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
* அவ்வளவுதான் கிரீன் பீஸ் புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தக்காளி குருமா வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

No comments:

Post a Comment