Tuesday, November 29, 2011

இறால் கிரேவி


Posted On November 30,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு)
கிராம்பு - 5
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

2. சாம்பார் வெங்காயத்தில் பாதியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.

3. தக்களியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு போட்டு சிவக்க வதக்கவும்.

5. பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கியதும், இறாலைப் போட்டு நன்றாகப் பிரட்டவும்.

7. இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும்.

8. இறால் வெந்து கிரேவி நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது, மிளகு தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. இறாலை கழுவும் போது கால் அல்லது அரை எலுமிச்சம் பழ சாற்றை அதனுடன் சேர்த்து கழுவினால் இறால் வாசனை குறைவாக இருக்கும்

Monday, November 28, 2011

கீமா பொடிமாஸ்


posted on november 28,2011 ,by muthukumar
தேவையானவை
கொத்துக்கறி - 1/4 கிலோ
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறு துண்டு (விழுதாக்கவும்)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப அரைக்க
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 10
தனியா விதை - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை
* மசாலா சாமான்களை வறுத்துப்பொடி செய்யவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக்கவும்.
* கொத்துக்கறி வதங்கியதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
* கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தக்காளி பிரைடு ரைஸ்

Posted On November 28,2011,By Muthukumar


தேவையானவை
பாசுமதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி பெரிய சைஸ் - 2
புதினா (ஆய்ந்தது) - கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - 10
பட்டை, கிராம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
நெய், எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* தக்காளி, புதினா, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் சிறிது ஆகியவற்றை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
* வாணலியில் நெய், எண்ணெய் கலவையை விட்டு பட்டை, கிராம்புத்தூள் போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிவக்க விடவும்.
* பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* குக்கரில் பாசுமதி அரிசியைப் போட்டு, வதக்கிய கலவையைச் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், தண்ணீர் தலா ஒரு கப் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
* வெந்ததும் தக்காளி பிரைடு ரைஸ் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள வெங்காய தயிர் பச்சடி ஏற்றது.

Sunday, November 27, 2011

நெத்திலி கிரிஸ்பி வறுவல்

Posted On November 27,2011,By Muthukumar
தேவையானவை
நெத்திலி மீன் - 1/2 கிலோ
எலுமிச்சம்பழம் (சாறு) - 2 கரண்டி
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
அரிசி மாவு - 2 கைப்பிடி
மைதா மாவு - 1 கைப்பிடி
சோளமாவு - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை
* நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலவையாக்கவும்.
* நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
* எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு பொறித்து எடுக்கவும்.

Saturday, November 26, 2011

இறால் திதிப்பு

Posted On November 26,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 கீறியது
இறால் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 1/4 கிலோ (நறுக்கியது)
நாட்டுத்தக்காளி - 1/4 கிலோ நறுக்கியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
இஞ்சி, பூண்டு - சிறிதளவு தட்டவும்
உப்பு - தேவைக்கேற்ப
சோம்பு, கறிவேப்பிலை - சிறிதளவு (தாளிக்க)
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்யவும். இஞ்சி பூண்டு தாளித்துக் கொள்ளவும். தேங்காய் சோம்பு அரைத்துக் கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
* வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.
* அரைத்து வைத்த மசாலாவைச் சேர்க்கவும். மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
* மசாலா திக்காக வரும்வரை சிறிது நீர் ஊற்றி கொதிக்க விடவும். குருமா பதத்தில் வந்ததும் இறாலைப் போடவும்.
* இறால் வெந்த பிறகு பச்சைக்கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சிறிது கிள்ளிப்போட்டு இறக்கவும்.
குறிப்பு
இதே முறைப்படி நெத்திலி திதிப்பும் செய்யலாம்.

நண்டு மசாலா

Posted On November 26,2011,By Muthukumar

தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி - 100 கிராம் (நறுக்கியது)
பச்சைமிளகாய் - 4 கீறியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
* நண்டை சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், இஞ்சி பூண்டு, வாணலியில் வறுத்து அரைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
* தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் இவை சேர்த்து வதக்கவும்.
* அரைத்த தேங்காய் சேர்த்து நண்டையும் சேர்க்கவும். தண்ணீர் ஊற்றத்தேவையில்லை. போதுமான உப்பையும் சேர்க்கவும்.
* நண்டு, மசாலாவுடன் கலந்து வெந்து திக்காக வந்ததும் இறக்கி விடவும்.

பள்ளிபாளையம் சிக்கன்

Posted On November 26,2011,By Muthukumar


  • சிக்கன் - அரை கிலோ
  • சின்ன வெங்காயம் - கால் கிலோ
  • காய்ந்த மிளகாய் - 12
  • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 10
  • துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு



சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைபாக்கு அளவிற்கு சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை சிறுத் துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு மிளகாயை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிள்ளி வைத்திருக்கும் மிளகாயை போடவும்.
மிளகாய் சிவந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி விடவும். 2 கையளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

தண்ணீர் வற்றி சிக்கன் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பள்ளிபாளையம் சிக்கன் தயார்.



Channa, Brinjal, Drumstick Sambar – Salem style


 
2/3 cup Channa soaked in water overnight
10-12 big – cut - pieces of (brinjal)
8-10 pieces - cut - drumsticks
1 or2 medium size  onion
1 or3 medium size tomato
4-5 kari veppillai leaves
1/2 tea spoon kadugu

1/2 tea spoon milagai podi (optional)
1 tea spn sambhar podi
1/2 tea spoon tamarind juice / pulp
2 tea spoon – Kothumalli leaves
Oil
Salt
Method:
Soak chickpeas overnight and cook 6 – 7 whistles in a pressure cooker.
Make sure to drain off all liquid and give a good wash
 

Heat a little oil and add kadugu seeds.


When they start cracking, add kari veppillai leaves and onion.
Fry till onions are slightly brownish. Add tomatoes and salt.
Fry for 2-3 minutes till tomatoes become soft
(salt helps in cooking tomatoes faster).
Now add brinjal and drumsticks, pour in half a cup of water.
Cover the pan and cook on a medium heat till they are done (do not overcook).

Add chili powder, sambar powder, boiled & cooled channa. Mix well.
Add the tamarind juice/pulp.
Cook for another 3-4mins.
Remove from stove and garnish with kothumalli leaves. (Remember, this is a dry dish unlike any other sambar which is like gravy).
Serve hot



Serves : 3-4
 

Preparation time : 30mins 

முருங்கை மஸாலா


 
Ingredients
 1. Drum stick – 2 to 3 full length – cut into 2″ long pieces
 2. Coconut – grated – 2 table spoon
3. Red chillies – 3
4. Dhania seeds – 1 teaspoon
5. Chana dhal – 1 teaspoon
6. Tomato – 2 mediumsize
7. Curry leaves – a handful
8. Onion – 1 medium size cut length wise
9. Tamarind juice of – 1 lemon size with one cup of water (175 ml)
10. Mustard seeds ( kadugu )
11. salt to taste
12. Oil 30 ml
Method
1. Grind coconut, Dhania seeds, Red chillies , chana dhal with little or no water into a fine paste
2. Heat kadai, add oil & mustard seeds. when it is done add onion & fry for 3 minutes in medium flame.
3. Add tomatoes , and fry till it becomnes mushy
4.Add  Drum sticks , mix well and cook for 5 minutes
5. Add tamarind water and cook, covered for 10 minutes
6. Add salt & cook for 2 minutes
7. Add ground paste & mix well and simmer for 3 more minutes
8. Add curry leaves and remove kadai from stove
9. Serve hot with rice and/or rotis
Note (a)- More water can be added if we want a thin gravy; Can be dry also with less water
Note (b) – Instead of Drum stick – kovakkai can also used. while using kovakkai use Ground nuts & ellu ( 1 teaspoon ) instead of Chana dhal Note

செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு


 
செட்டி நாடு சுண்ட வத்தக் குழம்பு
தேவையானவை
வெந்தயம், சோம்பு, சீரகம், கடுகு, மஞ்சள்தூள், தனியா தூள், தலா 1 டீஸ்பூன்;
பூண்டு, சாம்பார் வெங்காயம் – தலா 10
வர மிளகாய் – 4
மிளகாய்த்தூள் – காரத்திற்கேற்ப (~~ 2 டீஸ்பூன்)
கறிவேப்பிலை
புளிக்கரைசல் – எலுமிச்சை அளவு
நெய் – சிறிதளவு ந-எண்ணெய், காய்ந்த சுண்டைக்காய் (வத்தல்)
செய்முறை
சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
நல்லஎண்ணெய் விட்டு, காய்ந்த பிறகு, கடுகு, வெந்தயம், சோம்பு, சீரகம், பூண்டு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியாகி எண்ணெய் மேலக மிதந்து வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த சுண்டை வத்தலை போட்டுக் கலக்கவும்

Friday, November 25, 2011

போட்டி (குடல்)கத்திரிக்காய் சால்னா

Posted On November 25,2011,By Muthukumar




ஆட்டிறைச்சி வகைகளில் குடலும் ஒன்று இந்த சால்னா வயிற்றிற்கு ரொம்ப நல்லது, சூப் வைத்து குடித்தால் வயிற்று புண் ஆறும். இது எங்க பாட்டி எனக்கு சொல்லிக்கொடுத்தது

தேவையான பொருட்கள்
ஆட்டு குடல் சால்னா (போட்டி குர்மா ) - முழுசு ஒன்று
வெங்காயம் - ஐந்து (பெரியது)
தக்காளி - நான்கு (பெரியது)
பச்சமிளகய் - 4
இஞ்சி, போண்டு பேஸ்ட் - 5  மேசை கரண்டி
கொத்து மல்லி - கால் கட்டு
புதினா - கொஞ்சம்
மிளகாய் தூள் இரண்டரை தேக்கரண்டி
தனியா தூள் - இரண்டரை மேசை கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - அரை முறி
எண்ணை - 5 தேக்கரண்டி
பட்டை,லவங்கம், ஏலம் தலா - இரண்டிரண்டு
கத்திரிக்காய் - அரை கிலோ
கடலைப்பருப்பு - கால் கப்










செய்முறை
குடலை மஞ்சள் தூள் கொஞ்சம் வினீகர் போட்டு, நன்றாக பத்து நிமிடம் ஊற வைத்து அதில் உள்ள அழுக்கை தேய்த்து கழுவவும்.
கிளீன் ஆன குடல் கிடைத்தால் பிரச்சனை இல்லை.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி சூடு வந்ததும் பட்டை,லவங்கம், ஏலம் போடவும், போட்டு அரிந்து வைத்துள்ள் வெங்காயத்தை வத்க்கவும்.
வதங்கியதும் இஞ்சி போண்டு பேஸ்ட் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
அத்துடன் குடலையும் போட்டு நல்ல பெறட்டவும்.பிறட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து பிறகு தக்காளி,பச்ச மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள்,மஞ்சள் தூள், உப்பு போட்ட்டு வதக்கி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
அதற்கு ஏற்றார் போல தண்ணீர் ஆறு ஏழு கப் ஊற்றிஅரை மணி நேரம் குக்கரில் வேகவிடனும். கடலைப்பருப்பை அந்த குக்க்கரிலேயே ஐந்து நிமிடம் ஊற வைத்து ஒரு சிரிய டப்பியில் மூடி போட்டு மூடி போட்டு வெயிட்டையும் போட்டு வேகவிடவும்.
வெந்து குக்கர் சவுண்டு அடங்கியதும் அதில் உள்ளே வைத்திருக்கும் கடலைப்பருப்பை லேசாக நச்சு போடவும்.
போட்டு கத்திரிக்காயை நான்காக அரிந்து போட்டு தேங்காயையும் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு .கத்திரிக்காயை வெந்ததும் இறக்கிவிடவும்.


சாப்பிடும் அளவு: 8 நபர்கள்

முட்டைக்கோஸ் சீஸ் கோலா

Posted On November 25,2011,By Muthukumar


விருந்தின்போது பிரியாணி, பிரைடு ரைஸ் பரிமாறுவது வழக்கமாக இருக்கிறது. இவற்றுக்கு பரிமாற ஏற்ற துணைக் குழம்புதான் முட்டைக்கோஸ் சீஸ்கோலா.
தேவையானவை
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
* முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
* வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.